Saturday, April 18, 2009

முகவையில் தி.மு.க மாநாடு - மு.க. அழகிரி - ரித்தீஸீக்கு பிரச்சாரம்


இராமநாதபுரம், ஏப்ரல் 17 : ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள திடலில் மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது. தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்கள்.அத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் இந்திய யுனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.



காங்கிரஸ் சார்பில் இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ திரு. ஹஸன் அலி அவர்களும், முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட தலைவர் திரு. செளக்கத் அலி அவர்களும், விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட தலைவரும், தி.மு.க மாவட்ட செயலாளர் திரு. ஆர்.ஜி.ஆர், மாநில இளைஞர் அணி திரு பெருநாழி போஸ், தமிழக் குடிசை மாற்றுத்துறை அமைச்சர் திரு. சுப. தங்கவேலன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் திரு. இரவிச்சந்திர ராமவண்ணி, இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. பவாணி ராஜேந்திரன் உட்பட பலரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.



இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்களுக்கு ஆதரவாக அனைவரும் பேசினர். பின்னர் பேசி திரு. மு.க அழகிரி அவர்கள் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டியது முகவை மக்களின் கடமை எனவும், இராமநாதபுரம் தொகுதி உட்பட தமிழகத்ின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெரும் எனவும் கூறினார். மாநாட்டில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஆயிரக்கணக்கான வாகனங்களால் முகவை நகரே நெரிசலில் சிக்கி தினறியது.

No comments:

Post a Comment