Wednesday, May 26, 2010

விமான விபத்து

விமான விபத்து
இருபத்தி ஐயாயிரம் உயரத்தில் பறந்து
இன்னும்
இரண்டு நிமிடங்களில்
இந்தியாவில்
இறங்கப் போகும் விமானம்
கனவுலகில் அனைவரும்
முப்பது வருடத்தை
துபாயில் தொலைத்துவிட்டு
முழுதாக வீடு திரும்பும் கனவோடு
குடும்பத்தலைவன்
பள்ளி விடுமுறையில்
பாட்டி தாத்தா
பார்க்க செல்லும்
பள்ளிச் சிறுவர்கள்
நாளை நடக்கவிருக்கும் தன்
திருமணத்திற்காக
நகைகளோடு பறக்கும்
இளம் வாலிபன்
முதல் குழந்தையை
முதல் முதல் பார்த்து
முத்தமிட துடிக்கும்
இளம் கணவன்
வருடாந்த விடுமுறையை
வசந்தமாக கழிக்க
குடும்பத்தோடு செல்லும்
குடும்பத்தலைவன்
படிப்பை முடித்துவிட்டு
பட்டத்துடன்
தாய், தந்தை, தங்கையை காப்பாற்ற செல்லும்
பொறுப்புள்ள மகன்
புது வேலையை
தக்க வைக்க
விசா மாற்ற செல்லும்
இளம் சாதனையாளன்
மருத்துவத்துக்காக
இந்தியா செல்லும்
மத்திய வயது
இதய நோயாளி
ஆபீஸ் வேலையாக
அவசரமாக புறப்பட்டிருக்கும்
இளம்
பொறியியலாளர்
புது வியாபாரத்தில்
பணத்தை புரட்ட
புறப்பட்டிருந்த
பக்கா வியாபாரி
கம்பீரத்தோடு
தன் பணியை செய்யும்
விமானிகளும்
சேவையாளர்களும்
ஒரு மூலையில்
ஒன்றுமே அறியாமல்
சத்தமிடும்
ஓர் சிறிய நாய் குட்டி
இரண்டு நிமிடம் கழிந்தது..........
ஒரு சிறு சத்தம்
விமானமும்
அனைத்து கனவுகளும்
தவிடு பொடி
அடுத்த சில நிமிடங்களில்.... புலம்பல்கள்
ஐயோ என் கணவர் நிரந்தரமாய் போய் விட்டாரே..
எனது பேரக் குழந்தைகளுக்கு ஏன் இந்த தண்டனை
மணமகனை எதிர் பார்த்த வீட்டில் மையத்து விழுந்து விட்டதே
பிறந்த குழந்தையை பார்காமலேயே போய் விட்டானே பாவி
ஐயோ என் வாரிசு முழுதையும் தொலைத்து விட்டேனே
எனது குடும்பத்தின் ஒரே ஆணி வேர் போய் விட்டானே
திறமையான வேலையாளை தொலைத்து விட்டோமே
மருத்துவத்துக்காக வந்தவருக்கே மரண தண்டனையா
பொருக்கி எடுக்கவா இந்த குழந்தையின் பாகங்கள்
துக்க தினம் பாடசாலை, கம்பனிகளிலும் முழு நாட்டிலும்
அடுத்த சில நிமிடங்களில்...
இன்னும் சிறிது நேரத்தில் துபாயிலிருந்து மங்களூரை நோக்கி விமானம் புறப்படும்
Please 'Fasten Your Seat Belt'
'நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமாக்கப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்த போதிலும் சரியே.
அல் குர்ஆன் - சூரா அந்நிஸா (4) - வசனம் 78
ஆக்கம்
அபூ அம்மாராஹ்

Friday, May 14, 2010

மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்

கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள
மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும்
தொண்டு நிறுவனங்கள்




1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை 688 , அண்ணா சாலை சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன்
688 , அண்ணா சாலை சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)


6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட் ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன்
117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை சென்னை - 02


9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்
ஜபார்ஷா தெரு,
திருச்சி.


10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை சென்னை - 03


11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட் டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை மாண்டியத் சாலை எழும்பூர் - சென்னை – 08


13. ராஜகிரி பைத்துல்மால்
கீழத் தெரு
ராஜகிரி - 614 207


14. டாம்கோ
807 - அண்ணா சாலை
5 வது சாலை சென்னை


15. ஹாஜி. அஹமது மீரான்
Managing Director
Professional Courier’s 22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டை - சென்னை – 18


16. மியாசி புதுக் கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14



17. S I E T கே.பி. தாசன் சாலை தேனாம்பேட்டை சென்னை - 18


அத்துடன் கடந்த ஆண்டுகளாய் கல்வியை தொடர முடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ - மணவிகளுக்கு ST Courier நிறுவனம் கல்விக்கு உதவி வருகிறது.

முகவரி

ST Courier
199, Hariyan Street, C.Pallavaram,
Chennai - 600 043.
Tamilnadu,
India.

TEL :91 44 22 666 666
TEL: 91 44 305 66 666

கல்வி உதவி சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் : jaffarkaan@gmail.com

நன்றி : ராஜகிரி கஸ்ஸாலி மற்றும் ஹீஸைன் கனி

Thursday, May 6, 2010

த.மு.மு.க வினர் 6 பேர் பலி (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஊன்)


கரூர் : கரூர் அருகே, கார் மீது லாரி மோதியதில், காரில் பயணம் செய்த மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர் உட்பட, ஆறு பேர் உடல் நசுங்கி பலியாகினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (38). மனிதநேய மக்கள் கட்சி நீலகிரி மாவட்ட செயலர். இவருடன், ஊட்டி நகர செயலர் சையது சாதிக் (37), நிர்வாகிகள் அப்துல் கனி (42), யாசான் (22), மஸ்தீன் (32), சபியுல்லா (32) ஆகியோர், நேற்று முன்தினம், ஹூண்டாய் சான்ட்ரோ காரில், ஊட்டியிலிருந்து திருச்சி சென்றனர். பின், மீண்டும் ஊர் திரும்பும்போது, நேற்று காலை 10.30 மணியளவில், மயிலம்பட்டியிலிருந்து பாளையம் செல்லும் சாலையில், சரசம்பட்டி என்ற இடத்தில் வந்த போது, பாளையத்திலிருந்து அரியலூருக்கு ஜல்லிச் ஏற்றி சென்ற, டாரஸ் லாரி நேருக்கு நேராக மோதியது. இதில், பல அடிதூரம் இழுத்து செல்லப்பட்ட கார், அப்பளம் போல் நொறுங்கியதுடன், சாலையோர பள்ளத்தில் தள்ளப்பட்டது. நிலைதடுமாறிய லாரியும் கவிழ்ந்தது. லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு படையினர், காருக்குள் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
நன்றி : தினமலர்