Saturday, May 30, 2009
சென்னை தாதாஷாமக்கானில் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் -- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்தியது
Sunday, May 17, 2009
திரு. ரித்தீஷ் அவர்கள் வெற்றி !! - முகவை தேர்தல் முடிவுகள்
ராமநாதபுரம் தொகுதியில்
தி.மு.க.வேட்பாளர் ரித்திஷ் வெற்றி
ராமநாதபுரம்,மே.17-
ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ரித்திஷ் வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை
பாராளுமன்ற தேர்தல் அறி விப்பு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட்டது. கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது.இதில் 68.7 ச தவீத வாக்குகள் பதிவாகியது. இதற்கான வாக்குஎண்ணிக்கை நேற்று ராமநாதபுரம் செய்யதம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான வாசுகி முன்னிலையில் தொகுதிவாரியாக தனி அறையில் சீல் வைக்கப்பட்டு இருந்த வாக்குபதிவு எந்திரங்கள் அந்ததந்த தொகுதி வாக்குகள் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ராமநாதபுரம்,திருவாடானைசட்டசபை தொகுதிக் கான வாக்கு எண்ணிக்கை மைய கட்டிடத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தரைத் தளத்திலும்,திருச்சுழி,அறந் தாங்கிதொகுதி வாக்குஎண் ணிக்கை மேற்குபகுதியில்உள்ள தரைத்தளத்திலும், பரமக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை முதல் மாடியில்கிழக்குபகுயிலும், முதுகுளத் தூர் தொகுதி வாக்குஎண் ணிக்கை முதல் மாடியில் மேற்கு பகுதியிலும் நடந்தது.வாக்குகள் எண்ணுவதற்கு ஒவ்வொருசட்ட மன்றதொகுதிக்கும் 12 மேஜைகள் வீதம் 72 மேஜைகள்அமைக்கப்பட்டு ள்ளன. ஒவ்வொரு மேஜைக் கும் ஒரு மேற்பார் வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார் வையாளர் வீதம் மொத்தம் 216 அரசுஅலுவ லர்கள் வாக்கு எண்ணும் பணியில்ஈடுபட்டனர்.
வாக்குஎண்ணிகை மையத்துக்குள்வேட்பா ளர்கள், அனுமதி பெற்ற அவர்களது ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் ஆணைய அனுமதி பெற்றவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தைசுற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில்ஏராள மான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
தி.மு.க.வெற்றி
வாக்கு எண்ணிக்கை மொத்தம் 27 சுற்றுகள் நடந்தது. இதன் முடிவில் தி.மு.க.வேட்பாளர் சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்திஸ் 69 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
மொத்தவாக்குகள் -11,30,489
பதிவானவை - 7,75,461
தபால்ஓட்டு - 2,378
செல்லாதவை - 499
ஜே.கே.ரித்திஷ்(தி.மு.க.வெற்றி)- 2,94,945
வ.சத்திய மூர்த்தி(அ.தி.மு.க.) - 2,25,030
சு.திருநாவுக்கரசர்(பா.ஜ.க.) - 1,28,322
சிங்கைஜின்னா (தே.மு.தி.க.) - 49,571
பிரிசில்லாபாண்டியன்(ப.சமாஜ்)- 39,086
சலிமுல்லாகான்(ம.ம.க.) - 21,439
முகமதுஅபிதலி(ஜா.மு.மோ) - 1,496
ஜகாங்கீர்(சுயேட்சை) - 5,872
முருகேந்திரன்(சுயே) - 3470
பாஸ்கரன் (சுயே) -2329
காளிமுத்து(சுயே) -1769
பாலமுருகன்(சுயே) -1244
செல்லதுரை(சுயே) - 1186
சண்முகையாபாண்டியன்(சுயே) -1119
சுவார்ட்ஸ்துரை (சுயே) - 961
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் ரித்திசுக்கு தேர்தல் அதிகாரி வாசுகி சான்றிதழை வழங்கினார். அப்போது வேட்பாளர் ரித்திசை அமைச்சர் சுப.தங்கவேலன்,எம்.எல்.ஏ.க்கள்அசன்அலி, முருகவேல்,ராம்பிரபு,உதயம்சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், நகர்தி.மு.க.செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், ïனியன் தலைவர்கள் திவாகரன், நல்லசேதுபதி, எம்எ.சேக், பெருநாழிபோஸ்,மாவட்டதுணை செயலாளர் அகமதுதம்பி, ராமர்,திசை வீரன், சேது கருணாநிதி, துரைச்சாமி, நாகநாதசேதுபதி உள்பட தி.மு.க.நிர்வாகிகள் வாழ்த்தினர்.
"மதவாதத்தின் முன் நாங்கள் தோற்றுவிட்டோம்'
Friday, May 8, 2009
மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) நிகழ்ச்சியில்
பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) தமிழ்நாடு தலைவர் டாக்டர். சுரேஸ் கண்ணன் M.A., B.L., M.Ed., HDCM., Phd.மாநில பொருளாலர் திருமதி. ஆனந்தி M.L., M.L.S., D.L.A.L., Phd., பொதுச்செயலாளர் திரு.ஜெயபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர். சுரேஸ் கண்ணன் அவர்கள் திரு. அக்பர் ராஜர் B.A.B.L அவர்களுக்கு பொண்ணாடை போர்த்தி கவுரவிக்கிறார்
பிரபல பத்திரிகையாளர் திரு. திலிப்குமார் அவர்கள்
மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) கிழக்கு மாவட்ட அமைப்பாளர் வளுதூர். திரு. பாஸ்க்கரன், மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) இராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு. அக்பர் ராஜா B.A.B.L பிரபல பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைகள் இதழ் நிருபர் பரமக்குடி திரு. திலிப் குமார் , வளுதூர் திரு. மூர்த்தி, திரு. கோபால், திரு. சவுக்கத், முதுவை டிம்பர் உரிமையாளர் மற்றும் முன்னால் தே.மு.தி.க பிரமுகர் திரு. ராஜா முகம்மது, இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதுவை டிம்பர் திரு. ராஜா முகம்மது மற்றும் திரு. பாஸ்கரன்
திரு. அக்பர் ராஜா, திரு. ராஜா முகம்மது, திரு. முகவைத்தமிழன், திரு. கிருஸ்னன், திரு.வீரக்குமார்
Thursday, May 7, 2009
சிந்திப்பீர், வாக்களிப்பீர்!
அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே, கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்களுக்குப் பிறகு நம் சமுதாயம் இந்நிலைக்கு சென்றுள்ளதைக் கண்கூடாகக் கண்டபின்பும் திராவிட கட்சிகளுக்கே வாக்களித்து நாம் வாக்களித்து வீணடைய வேண்டும்?. மாற்றார்கள் அறிந்த அளவுக்குக்கூட சுயபலத்தை அறியாமலேயே இருக்கும் சகோதர சகோதரிகளே, முஸ்லிம் அல்லாதவர் நம்முடைய வோட்டைப் பெற்று நம்மை ஓட்டாண்டி ஆக்கி, ஒரு சீட்டுச் சமுதாயமாக இன்னும் வைத்திருக்கும் அவலம் தீர்வது எப்போது? |
சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்
மனித உடலின் மின்காந்தத் திறனை
சீர்ப்படுத்தும் சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
தகவல் தொழில் நுட்பத் துறையில் பல மணி நேரம் உட்கார்ந்தபடியே கணினியில் பணி செய்யும் இளைஞர் களுக்கு உடலில் உள்ள மூட்டுகளில் வரும் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின் றனர். இந்த வலியை போக்குவதற்கு சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவப்படி உடலில் மின் காந்த திறனை சீர்ப்படுத்துவது குறித்து சைனீஸ் அக்கு பஞ்சர் மருத்துவ நிபுணர் டாக்டர் மு.சாதிக் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.
இன்றைய நவீன உலகத் தில் எந்த ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியால், தொடர்பு கொண்டு கல்வி, மருத்துவம், வர்த்தகம், தொழில் நுட்பப் பரிமாற்றங் கள் உடனுக்குடன் பெற்று பல்வேறு துறைகளில் அதிகளவில் வளர்ச்சி பெற்று வருகிறோம்.
குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தகவல் தொழில் நுட்ப துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. படித்த இளைஞர்கள் உட னுக்குடன் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
தகவல் தொழில் நுட்பத் துறையில் மிக முக்கிய பங்கு வகிப்பது கணினி, இணைய தளத்தின்மூலம் தகவல் பரி மாற்றங்கள் உலகம் முழுவதும் தொடர்பு கொண்டு பெறுவதுதான். இப்பணியில் இரவு - பகலாக பல மணி நேரங்கள் ஆண் - பெண் இருபாலரும் அமர்ந்த இடத்திலே பணி செய்யும் நிலையில் உள்ளனர்.
இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்தாலும், சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வதால் இளம் வயதிலேயே உடலில் எங்கெல்லாம் மூட்டுகள் உள்ளதோ அங்கெல்லாம் வலி ஏற்பட்டு தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலை உருவாகிறது.
இம்மூட்டு வலி நோய்க்கு ஆங்கிலம் மருத்துவம் இருந்தாலும், எளிமையான இயற்கை மருத்துவமான சைனீஸ் அக்குபஞ்சர் சிகிற்சை முறையில் விரைவில் மூட்டு வலியைப் போக்குவதுடன், மேற்கொண்டு வராமல் தடுப்பதற்கான உடலில் மெலிந்த ஊசிகளை செலுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் உடலில் மின்காந்த சக்தியினை சீர்படுத்தி நோய் அகற்றப் படுவதால் நிரந்தரத் தீர்வு ஏற்படுகிறது.
இம்மருத்துவத்தில் முழு மையான நாடி பரிசோதனை, சைனீஸ் மருந்துகள், ஆஸ் டியோ அக்குபஞ்சர், எளிய முறையில் உடற்பயிற்சி போன்றவைகள் மேற்கொள்ளப்படு வதன் மூலம் கணினித் துறையில் பணி செய்பவர் களுக்கு வரும் மூட்டு வலிகள் நிரந்தரமாகப் போக்கப்படு கிறது.
மற்றும் உடலின் நோய் எதிர்ப்புசக்தி குறையும்போது பலவித நோய்களும் நமது உடலை எளிதில் தாக்கி பாதிப்ப்பிற்குள்ளாக்க்குகிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் சமநிலையில் வைத்திருக்கும்போது எந்த அலர்ஜியோ, எளிதில் வரும் சளி, இருமல் போன்ற நோயோ வர வாய்ப்பேயில்லை. ஆரோக்கியமாக வாழலாம்.
ஸோரியாஸிஸ், எயிட்ஸ், ஆஸ்துமா, கேன்ஸர், பெண்களுக்கான கற்பப்பை பிரச்சினைகள் உட்பட, மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு, சிறுநீரகம் பாதித்தவர்கள் போன்ற அனைத்து நோய்களையும் மிக அற்புதமாகக் குணப்படுத்தலாம் இன்ஷா அல்லாஹ். கற்பப்பையை அகற்ற அனுமதிக்காதீர்கள், அதனால் உங்களது உடலுக்கு மேலும் பற்பல தொந்தரவுகளைத் (தூக்கமின்மை, கை கால் வலி, இடுப்பு வலி etc.) தந்து கொண்டே இருக்கும் பிற்காலத்தில். ஆங்கில மருத்துவத்தில் அதற்கு தீர்வு இல்லாததால், கற்பப்பையை அகற்றக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. அதை முழுமையாகக் குணப்படுத்தலாம் அக்குபஞ்சர் மருத்துவம் மூலம் இன்ஷா அல்லாஹ்.
மேற்கொண்டு விபரத்திற்கு:
மருத்துவர் சாதிக் - 09443389935 - நாகர்கோவில்.
Tuesday, May 5, 2009
அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?
அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?
என்பதோடு மட்டுமில்லாமல் முஸ்லிகளிடையே குழப்பதை ஏற்படுத்தும் முகமாக அல் அமீன் பள்ளி சம்மந்தமாக பொய்களை மக்கள் மத்தியில் பரப்புரைத்து வருவதாகவும் அரசியல் வேண்டாம் எனக்கூறிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இறையில்லத்தையே விட்டுக்கொடுக்கச் சொல்லும் இவர்களை எப்படி "ஏகத்துவ வாதிகள்" என கூற முடியும்...?
இதிலிருந்தாவது இவர்களை சமுதாயம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட (தெற்கு) செயலாளர் AJ. ஜியாவூதீன் அவர்கள் !
அது அவருடைய கேள்வி மட்டுமன்று அதிராம்பட்டினம், அதை சுற்றியுள்ள முத்துப்பேட்டை,மல்லிப்பட்டினம்,மதுக்கூர்,புதுப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ஊர் முஸ்லிம்களின் வினாவும் இதுதான்!
என்ன பதில் சொல்லப்போகிறது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை?
தமிழ் மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்:
இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் அதிரையில் ஒட்டப்பட்ட போஸ்டரும் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்தான் ஒட்டினார்கள் என்ற செய்தியும் ஊர் சுற்றி வருகிறது. அது உன்மையா அல்லது வதந்தியா என்பதையும் அதன் தலைமை விளக்கவேண்டிய அவசியத்தில் உள்ளது.
//அல் அமீன் பள்ளி விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவன்னனை ஆதரித்து இஸ்லாமிய சங்ககளின் சார்பில் அதிரைநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு மர்மஆசாமிகள் "வேண்டுகோள்" என்ற தலைப்பிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இதை பார்த்த அதிரை இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பை தொடர்புகொண்டு இதுவிஷயமாக கேட்டபொழுது இதுபற்றிதங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை எனவும், எங்கள் பெயரை கலங்கபடுத்தும் நோக்கோடு செயல்பட்ட இவர்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு போஸ்ட்டர் ஒட்டியும் உள்ளனர். அல்அமீன் பள்ளி விஷயத்தில் விளையாடிய காவல்துறையின் கறுப்புஆடு மணிவன்னனை இடமாற்றம்செய்ய இஸ்லாமிய அமைப்புகள் பெரும் முயற்சி மேற்கொண்டு இடமாற்றம் செய்தது. இதை பொறுக்காத சில "தலைகள்" இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.// நன்றி:அதிரைXpress
தமிழக முஸ்லிம் சமுதாயமே உங்கள் கருத்து என்ன...?
தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இறைவிரோத செயலை ஆதரிக்கீர்களா...?
இறைவனை தொழ இறையில்லம் எழுப்புவது குற்றமா...?
தி மு கவை ஆதரிப்பதால் இறைவிரோத செயல்களில் ஈடுபடலாமா...?
கடைசி செய்தி:
தி மு க , காங்கிரஸ் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிகளுக்கு துரோகம் செய்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் பள்ளி நிர்வாக குழுவினரை சந்த்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கோரிவருகின்றனர்!
ஆனால், தங்களது முடிவை நாளை (06/05/09) அறிவிக்கிறார்கள்!!
சில இடங்கள் தவிர்த்து தி மு க கூட்டணியை PFIஆதரித்தாலும் அதிரையில் அல் அமீன் பள்ளியை மீட்டேடுக்கும் முயற்ச்சியில் முழுமையாக அற்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
மேலும் செய்திகளை அறிந்துக்கொள்ள....!
அதிரை POST