Saturday, May 30, 2009

சென்னை தாதாஷாமக்கானில் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் -- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்தியது



நாடு முழுவதும் "பள்ளி செல்வோம்" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களை போல் இந்த வருடமும் கல்வி வழிகாட்டி முகாம்களும், விழிப்புணர்வு பிரச்சரங்களும் மேற்கோள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டி முகாம்கள் நடத்தப்படுகின்றன.




இதன் ஒரு பகுதியாக சென்னை தாதாஷாமக்கான் பகுதியில் பள்ளி செல்வோம் என்ற முழக்கத்துடன் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் 30.05.09 அன்று காளை10.30 மணிக்கு நடைபெற்றது.





இந்த நிகழ்ச்சிக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்ட செயலாளர் திரு. முகம்மது ஹுசைன் தலைமை தாங்கினார். திரு ஹிணாயத் அவர்கள் வரவேற்புரையாற்றினர். சனா கல்வி அறக்கட்டளையின் தாளாளர் திரு. முகம்மது ஆசம் மற்றும் மனித உரிமை ஆர்வலர் திரு. ஹபிஸ் அஹமது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.




இதை தொடர்ந்து நடைபெற்ற குழந்தைகள் கலந்துகொண்ட பிரசார ஊர்வலத்தை திரு. முகம்மது ஆசம் அவர்கள் கோடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பகல் 12 மணிக்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது .


No comments:

Post a Comment