Friday, October 30, 2009

மராட்டிய தேர்தல்: 11 முஸ்லிம் வேட்பாளர்கள்

மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 11 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளார்கள். இவர்களில் ஐவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்;, மூவர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள்,இருவர் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர்கள், ஒருவர் ஜன் சூரியா சக்தி கட்சியைச் சேர்ந்தவர்; ஆவர். வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் விவரம்:
வ.எ
தொகுதி கட்சி
வெற்றிப் பெற்ற வேட்பாளர்
பெற்ற வாக்குகள்
1 மாவேகான் மத்தி
ஜன் சூரிய சக்தி
முப்தி முஹம்மது இஸ்மாயில் காலிக் 71157
2 வாந்த்ரே மேற்கு
காங்கிரஸ் ஜியாவுத்தீன் சித்தீக் 59659
3 மலத் மேற்கு காங்கிரஸ்
அஸ்லம் ஷேக் 51635
4 அணுசக்தி நகர் தேசியவாதி காங்கிரஸ் கட்சி நவாப் மாலிக் 38928
5 மும்பா தேவி காங்கிரஸ் அமீன் படடேல்
45285
6 பீவண்டி கிழக்கு சமாஜ்வாதி கட்சி அபு ஆசிம் ஆஜ்மி
37584
7 பீவண்டி மேற்கு சமாஜ்வாதி கட்சி அப்துல் ரசீத் தாஹிர் முமீன்
30825
8 சுhந்திவல்லி காங்கிரஸ் கான் முஹம்மது ஆரிப்
82616
9முன்குருத் சிவாஜிநகர்
சமாஜ்வாதி கட்சி அபு ஆசிம் ஆஜ்மி 38435
10 சிலோத் காங்கிரஸ் முஷ்ரிப் ஹஸன் 104241
11 சிலோத்
காங்கிரஸ் அப்துல் சத்தார் அப்துல் நபி 98131

மராட்டிய மாநிலத்தில் 1 கோடியே 30 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். 2001 அரசு மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி மராட்டிய மாநிலத்தின் மொத்த மக்கட் தொகையில் 10.6 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். மராட்டிய சட்டமன்றத்தில் 288 உறுப்பினர்கள் உள்ளனர். முஸ்லிம்களின் மக்கட் தொகையுடன் ஒப்பிடும் போது 31 சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் 1952 முதல் 1999 வரை மராட்டிய சட்டமன்றத்தில் முஸ்லிம்களாக இருந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 9.5 ஆக மட்டுமே இருந்துள்ளது. 2004ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்தது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் அது 12 ஆக உயர்ந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அபு ஆசிம் ஆஜ்மி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Thursday, October 22, 2009

தேர்தல் களத்தில் SDPI !!






பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!! என்ற முழக்கத்துடன் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் குரலாக சமீபத்தில் உருவான தேசிய அரசியல் கட்சி SDPI முதன் முறையாக கேரளத்தில் கண்ணூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது

வேட்பாளர் : மஜீத் பயிஸி ( மாநில செயலாளர், SDPI கேரளா)






Sunday, October 18, 2009

மீண்டும் பெண் சாமியார் பிரக்யா சிங்கின் தீவிரவாதம்!! கோவா குண்டு வெடிப்பு


பனாஜி: கோவாவில் ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து பொருள் வெடித்ததில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். மூன்று வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.


கோவாவில் பனாஜி அருகே மார்கோ நகரில் கிரேஸ் சர்ச் உள்ளது. இந்த சர்ச் அருகே நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிமருந்து பொருள் வெடித்தது. இந்த சம்பவத்தில் சனாதன் சன்ஸ்தா என்ற இந்து அமைப்பை சேர்ந்த மெல்குண்டா பாட்டீல் பலியானார். யோகேஷ் நாய்க் என்பவர் படுகாயம் அடைந்தார். வெடிமருந்து பொருள் வெடித்ததில் மூன்று வாகனங்கள் எரிந்து சாம்பலாயின.


மும்பை மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குரின் சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் இந்த இருவரும் சம்பந்தப்பட்டவர்கள், என போலீசார் தெரிவிக்கின்றனர். ஸ்கூட்டரின் உரிமையாளர் நிஷாத் பாக்லே என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த 20 கிலோ மீட்டர் தூரத்தில் மின் ஒயர்கள் சுற்றப்பட்ட பையையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர். மார்கோ பகுதி, கோவா முதல்வர் திகம்பர் காமத்தின் தொகுதி என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு :

1) பி.ஜே.பி நடத்தும் தொடர் குண்டுவெடிப்புகள் - IIPONLINE.ORG

2) மாலேகான் குண்டுவெடிப்பும் இந்து பயங்கரவாதிகளும்

3) மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்

Wednesday, October 14, 2009

இட்டுக்கட்டக்கூடிய அறிவிப்பாளர் பி.ஜே யா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம் செய்வது சம்மந்தமாக மூன்று மாதங்களுக்குப் பின் பீ. ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ‘நினைவு’ திரும்பியுள்ளது. (எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் தொடர்பான என்னுடைய நோட்டீஸைப் பார்த்திராவிட்டால் இன்னும் நினைவு திரும்பிஇருக்காது போலும்)


நினைவு திரும்பி, ‘முக்கிய அறிவிப்புகள்’ என்று தலைப்பிட்டு முஜிபுர்ரஹ்மான் உமரி கலந்துறையாடலுக்கு வராமல் ஓடுகிறார் என்றும், இன்னொரு தலைப்பிட்டு அதில் முஜிபுர்ரஹ்மான் உமரியை நேருக்கு நேர் சந்தித்த செய்தியையும் அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியை இனைத்தும் சில செய்திகளை பீ. ஜைய்னுல் ஆபிதீன் எழுதியிருக்கிறார்.
மாய்ந்து மாய்ந்து அவர் எழுதியருப்பதில் முக்கிய பாயிண்ட் என்னவென்றால், ‘கடந்த மார்ச் மாதம் பீ. ஜைய்னுலாபிதீனின் தர்ஜமா தவறுகள் தொடர்பான விவாதத்தில் ஜைனுலாப்தீன் வென்றார் முஜிபுர்ரஹ்மான் தோற்றார். அதனால் அடுத்த கலந்துரையாடல்களுக்கு முஜிபுர்ரஹ்மான் பயப்படுகிறார்’ இது தான் அவர் முக்கியமாக வைப்பது.


தோல்வி அடைந்தது பீ. ஜைனுல் ஆபிதீன்-தான்:


அவர் தோற்றதற்கு தெளிவான ஆதாரத்தைத் தருகிறோம். அதை மூளை சரியாக வேலை செய்யக்கூடிய, சிந்திக்கின்ற ஆற்றல் உள்ள தமிழ் படிக்கத்தெறிந்த எல்லோரும் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
முஜிபுர்ரஹ்மான் எடுத்துவைத்த பீஜேவின் தவறுகளில் முக்கியமான ஒன்று, ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ என்ற தலைப்பில் பீ.ஜைனுல் ஆபிதீன் தன் கருத்தைப் புகுத்துவதற்காக ஹதீஸில் இடைச்செறுகள் செய்துள்ளது பற்றியதாகும்.


அதாவது ஒவ்வொரு வருடமும் ஜிப்ரீல் (அலை) வந்து நபியுடன் குர்ஆனை ஓதி செல்வது பற்றிய ஹதீஸில், “அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களை திரும்ப” என்று எழுதி, அந்த வருடத்தில் என்ற வாசகத்தை செறுகி இருக்கிறார்.


இது, அவர் பின்னால் சொல்லப்போகிற ஒரு கருத்தை முன் கூட்டியே படிப்பவர்கள் மனதில் பதியவைப்பதற்காக செய்துள்ள காரியம் எனபதனால் இது ஹதீஸில் செய்கிற தில்லு முல்லு என்ற ரீதியில் முஜிபுர்ரஹ்மான் தனது வாதத்தை வைத்தார்.


ஆனால் ஜைனுல் ஆபிதீன் இதனை மறுத்தார். விவாதத்தில் ஓன்றுக்கு மேற்பட்ட சுற்றுக்கள் இது பற்றி பேசப்பட்ட போதும், தான் தவறு செய்யவில்லை என்றும் தான் எழுதியது சரிதான் என்று சமாளித்தார்.
ஆனால் விவாதத்திற்குப் பின் வெளியிட்டுள்ள தனது தர்ஜமாவின் எட்டாவது பதிப்பில், முஜிபுர்ரஹ்மான் தவறானது என்று நிரூபித்த வாசகத்தை பீ ஜைனுல் ஆபிதீன் நீக்கியுள்ளார். இங்கே முக்கியமாக ஒன்றைக் குறிபிட்டாக வேண்டும். இதே தவறை விவாதத்தில் சுட்டிக்காட்டும் போது அந்த நேரத்திலும் பிடிவாதமாக மறுத்தார். விவாதத்தின் இறுதி உரையிலும் முஜிபுர்ரஹ்மான் ஒரு தவறையும் எடுத்து வைத்து நிரூபிக்கவில்லை என்றும் இவர் கூறும் தவறு எதுவும் தவறு இல்லை என்றும் திமிராக பேசினார்.


இங்கே விவாதத்திற்கு முன்பு இருந்த பாதிப்புகளில் இடைச்செறுகலான வாசகம் இடம் பெற்று இருப்பதையும் விவாதத்திற்கு பின்பு அது நீக்கப்பட்டிருப்பதையும் தருகிறோம்.-பீ.ஜைனுல் ஆபிதீனின் தர்ஜமாவில் ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ தலைப்பின் கீழ் ஏழாம் பதிப்பிலும் அதற்கு முந்திய பதிப்புகளிலும் இடம் பெற்றதாவது


அதாவது விவாதத்துக்குமுன்:இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுப்படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்திச் செல்வார்.

(பக்கம்:35-36 ஏழாம் பதிப்பு)
பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்




விவாதத்திற்குப் பின் இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரில் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களை திரும்ப நினைவு படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்திச் செல்வார். (பக்கம் 41, எட்டாவது பதிப்பு, ஆகஸ்ட் 2009)


பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்




முந்தைய பதிப்புகளில் ‘அந்த வருடத்தில்’ என்று செறுகியிருந்த வாசகத்தை விவாதத்திற்குப் பின் நீக்கியுள்ளார்.


இந்த வாசகத்தின் விபரீதத்ததை புரியாதவர்கள் இதிலென்ன பெரிய தவறு வந்துவிடப்போகிறது என்று நினைக்கலாம். இதற்கு ஒரு சில பக்கங்களுக்குப் பின் குர்ஆனின் சூராக்களின் வரிசை நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்பட்டதல்ல என்ற கருத்தை பீ. ஜைனுல் ஆபிதீன் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த கருத்தை முன்பே வாசகர்களின் மனதில் போடுவதற்காக மேற்கண்ட ஹதீஸூக்கு மாற்றமான செய்தியை அதற்குள் லாவகமாக இடைச் செறுகல் செய்துள்ளார்.


ஹதீஸ் வாய்வழியாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த ஜைனுல் ஆபிதீன் அவர்கள் வாழ்ந்திருந்தால் ஹதீஸ் கலை அறிஞ்ர்கள அவரை இட்டுக்கட்டக்கூடிய அறிவிப்பாளர் என்று அறிவித்திருப்பார்கள்.
தான் எழுதியது சரி தான் என்று விவாதத்தில் வைத்து சமாளித்ததுக்கொண்டிருந்தவர் இதனை நீக்கியிருக்கிறார். நீக்கியபின், முஜிபுர்ரஹ்மான் அது எப்படி இருக்கவேண்டுமென்று சொன்னாரோ அப்படியே வந்திருக்கிறது. (இன்னும் பல திருத்தங்கள் உள்ளன நாம் பின்பு மக்களுக்கு எடுத்துவைப்போம் இன்ஷா அல்லாஹ்) ஆனாலும் தானே ஜெயித்தாக பரையடித்ததுக்கொண்டிருக்கிறார் சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் விவாதத்தில் தோற்றவர்தான் தனது தோல்வியையும் பலவீனமான வாதத்தையும், விதண்டாவாதத்தையும், மறைப்பதற்காக சீடியை எடிட் செய்து வெளியிடுவார். ஆகவே விவாத சீடியை எடிட் செய்து வெளியிட்ட சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் மேற்படி விவாதத்தில் தோற்றவர் என்பது நிரூபனமாகிவிட்டது.


ஆனாலும் அவர் துணிச்சலாக, தான் வென்றதாக எழுதிக்கொண்டும் எதிராளியை மட்டம் தட்டி பரிகாசம் செய்து கொண்டும் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன?


அதற்குக் காரணம் மக்களை (அதாவது அவரது இது போன்ற பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நம்பும் மக்களை) அவர் ஆடு மாடுகள் போல் கருதுவதால்தான், இதை நாமாகச் சொல்லவில்லை. அவர் வாயினாலேயே சொன்னது!


TNTJ உருவாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அதன் மாநிலச்செயலாளராயிருந்த ஒரு சகோதரர் அப்போது நடந்த (சகோதர இயக்கத்துக்கெதிரான) வன்முறை சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.


அது பற்றி பேசுவதற்காக, பீ ஜைனுல் ஆபிதீனுக்கு போன் செய்த அந்த சகோதரரின் டிரைவர் (இவர் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபாடுள்ளவர்) இப்போது நடக்கும் சம்பவங்களால் மக்களிடத்திலே தவ்ஹீத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிடுமே என்ற கவலையை தெரிவித்துள்ளார். அதற்கு பீ.ஜைனுலாபிதீன் சொன்ன பதில்:

‘மக்கள் என்பது ஆடு மாடுகள் மாதிரி , சீக்கிரமே மறந்து
விடுவார்கள்.

ஆக இவரை நம்பும் TNTJ காரர்களை இவர் இப்படித்தான் வைத்திருக்கிறார். இவர் நிலையை தெரிந்து கொண்ட எங்களைப்போல் பலர் அவரிடமிருந்து விலகிக் கொண்டோம். இவ்வளவும் தெரிந்த பின்னும் அவருக்கு ஆதரவாளர்களாயிருக்கும் சகோதரர்கள் சற்று யோசிக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் ஆடு மாடுகள் மாதிரி இருக்கப்போகிறீர்கள்? ஜைனுல் ஆபிதீனிடம்!


அவர் இவ்வாறு கருதும் மக்களை –குறிப்பாக TNTJ-யிலுள்ள மக்களை ஏமாற்றுவதற்கு முஜிபுர்ரஹ்மான் உமரீயுடன் கலந்துரையாடல் நடக்காதது குறித்து தவறான தகவல்களை அள்ளிக் கொட்டியுள்ளார். ஆடு, மாடுகள் மாதிரியில்லாத மனிதர்களுக்கு அது குறித்து சுருக்கமான தெளிவைத் தருகிறோம்.


பீ. ஜைனுல்ஆபீதீனீன் தர்ஜூமா தவறுகளின் விவாத முடிவில், மற்ற தலைப்புகளை கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளும்படி ஜாக் மதுரை மாவட்டத் தலைவர் இமாம் ஹூசைன் கேட்டுக் கொண்டதனால் கலந்துரையாடலுக்கு தாம் ஒப்புக் கொண்டதாக எழுதி தவறான செய்தியை தருகிறார். உண்மையில் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்ததே ஜைனுல் ஆபிதீன்தான்.


அடுத்த மூன்று தலைப்பு விவாதங்கள் பற்றி மேடையில் இருந்நதவர்கள் ஆலோசனை செய்த போது ஒரே நாளில் மூன்று விவாதங்களையும் வைத்துக் கொள்ளலாம். என்று நான் கூறினேன். அதை இமாம் ஹூசைன் ஜைனுலாபீதீன் அவர்களிடம் சொன்ன போது, ஒரு நாளா? போதாது அப்படியென்றால் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம், என்று முதலவாதாக கூறியது ஜைனுலாபிதீதான் அதனை முஜீபுர்ரஹ்மானிடம் இமாம் ஹூசைன் எடுத்துக்கூறிய போது அவரும் ஒப்புக்கொண்டார்.
இதுவெல்லாம் சிடியில் பதிவாகியிருந்தும் அதை மட்டும் துண்டித்திருக்கிறார். பிறரை மட்டம் தட்டுவதற்காக இவர் கையாளும் இழிந்த தந்திரங்களில் இது முதலாவது அல்ல என்பது ஆடு, மாடுகள் போல் இல்லாத மக்களுக்கும் தெரியும்.


முஜிபுர்ரஹ்மான் உமரீ ஓடி ஒளிவதாகவும் அவர் மீது பரிதாபப்பட்டு தான் மவுனம் காத்ததாகவும் பி.ஜைனுலாபிதீன் கதைத்திருக்கிறார். ‘வாக்களித்த காலம் முடிந்து மாதங்கள் பல ஓடிவிட்டன. தொடர்ந்து ஓட்டம் பிடிக்கிறார். என்று எழுதிய ஜைனுலாபிதீனுக்கு நாம கூறுகிறோம் வாக்களித்த காலம் முடிந்தவுடன் உடனடியாக நேரில் அவரிடம் ஆள் அனுப்பிக்கேட்கவில்லை. விருதுநகரில் அவர் இருக்கும் பகுதியில் தான் TNTJ மாவட்டச் செயலாளாரும் நகர நிர்வாகிகளும் இருக்கிறார்கள். அல்லது நேரடியாக தபால் எழுதியும் கேட்க வில்லை. நாம் இதில் தொடர்ந்து தலையிட மறுத்து நேரடியாக பேசிக்கொள்ளட்டும் என்று ஒதுங்கிய பின் மேற்கண்டவாறு பீ ஜைனுல் ஆபிதீன் செய்திருந்தால் இப்போது அவர் கதைப்பது உண்மையாக இருந்திருக்கும். ஆனால் நேரடியாக தனது கட்சி பொறுப்பாளரை அனுப்பி பேசுவதற்கோ அல்லது தபால் மூலம் தொடர்பு கொள்ளவோ பயந்தார் ஜைனுலாப்தீன். ஏனென்றால் அப்படிச் செய்திருந்தால், விவாத சி.டி.யில் பல இடங்களில் எடிட் மோசடி செய்து வெளியிட்டது அதைப்பற்றி முஜிபுர்ரஹ்மான் கேள்வி எழுப்புவார் தான் அவமானப்பட வேண்டியது வரும் என்ற பயத்தினாலேயே மவுனம் காத்தார்.


ஆனால் முஜிபுர்ரஹ்மான் உமரீ மீது பரிதாபப்பட்டு மவுனம் காத்ததாக சொல்லி இவர் ஆடு மாடுகளாக கருதும் மக்களின் காதுகளில் பூ சுற்றுகிறார்.
யாருக்கு பரிதாபப்படுகிறாராம் இவர்? இவரது கருத்துப்படிதவ்ஹீதுக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடிய, பணத்துக்காக சத்தியக் கொள்கையிலிருந்து வழி கெட்டுக்குபோய் அந்த வழிகேட்டைப் பிரச்சாரம் செய்யக்கூடிய, இவரது தர்ஜமாவில் தவறே இல்லாதவற்றை தவறென்று கூறிய, தவ்ஹூதுக்கு எதிராக சதி செய்யக்கூடிய, இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே மாற்றம் செய்துவிட்ட ஜாக் இயக்கத்தினரோடு சேர்ந்து கொண்டு மார்க்கத்தில் குழப்பம் செய்யும் ஒருவரை மார்க்க அடிப்படையில் எதிர்கொண்டு அடையாளம் காட்டாமல் பரிதாபப்பட்டு சும்மா இருந்நதாராம். இதை நம்புபவர் ஆடு மாடுகளைப் போன்றவர்கள் அல்ல, ஆடுமாடுகளாகத்தான் இருக்க முடியும்!
முஜிபுர்ரஹ்மானிடம் விவாதம் குறித்துப் பேச நாம் மேற்குறிப்பிட்ட இலகுவான வழிகள் இருக்கும் போது குப்பை, குப்பை என பிதற்றிக்கொண்டு டாட்காம்களுக்கும் சவால் விடுகிறார் என்றால் இதன் மூலம் ‘இவரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்!’


கடந்த 25.9.2009 அன்று முஜிபுர்ரஹ்மான் உமரீ தொண்டியில் பீஜே அவர்களை எதார்த்தமாக கண்டபோது தானே சென்று , ஸலாம் சொல்லி கைகுலுக்கியதை இவர்களாக வலுக்கட்டாயமாக அவரிடம் போய் பேசியதாக திசை திருப்பியிருக்கிறார்.


அதோடு அப்போது நடந்த பேச்சுக்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். (அதிலும் கட்டிங்)
அதை வெளியிட்டதும் மிகுந்த நன்மையாக போய் விட்டது. பீ. ஜைனுலாபிதீன் அவர்கள் தன் ஆதரவாளர்களை ஆடு மாடுகளை மாதிரி கருதி வைத்திருக்கிறார். என்பது அவரே சொன்னது. அதன் உதாரண நிகழ்வுதான் அந்த பதிவில் நாம் காண்பது.


முஜீபும் பீ.ஜைனும் லாபிதீனும் உரையாடியதை சற்று நேரம் அமைதியாக தொடரவிட்டிருந்தால், சில உண்மைகள் வெளிப்பட்டிருக்கும், ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல், இருவரும் பேசுவதை குழப்பும் விதத்தில் சுற்றி நின்றவர்களில், பீ.ஜைனுவால் ஆடு மாடுகள் மாதிரி என்று சரியாக கணிக்கப்பட்டவர்கள், இடையிலே தாங்கள் சொல்வதையே திரும்பத்திரும்ப சொல்லி கூச்சல் குழப்பம் செய்வதை நாம் பார்க்கிறோம்.


மரியாதையான வார்த்தைகளால் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போது, தரக்குறைவான வார்த்தைகளை – வேண்டுமென்றே இடையில் புகுந்து பேசி அதை சண்டையாக மாற்றும் ததஜ ஜமாஅத் பொறுப்பாளர்களையும் அந்தப் பதிவில் பார்க்கிறோம்.


பேச்சு நாகரீகமும், மரியாதையும் ஒழுங்கும் அறியாத முரடர்கள் தான், ததஜ ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள் என்பதால் அந்த ஜமாஅத்தின் தரம் பற்றி முடிவு செய்வது மக்களுக்கு எளிதாகி விட்டது.
பீ.ஜைனுல் ஆபிதீன் பெரிய அறிவாளி, புத்திசாலி, மனோநிலை அறிந்து பேசுபவர் என்பது எல்லோருக்கும் தெரியும், அதன்படி தன் ஆதரவாளர்களைப்பற்றி ஆடுமாடுகள் மாதிரி என்று அவர் கூறியதற்கு சரியான எடுத்துக்காட்டாக இப்போது தனது இணைய தளத்தில் வெளியிட்ட – முஜிபுர்ரஹ்மானுடன் சச்சரவு செய்த – வீடியோ காட்சிகள் உள்ளன.
ஆகவே, அதை அவசியம் பார்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்! அதை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்குமாறு ஆன்லைன் பீஜே இணைய தளத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.


தவறுகளுக்கு தண்டனை கொடுக்காமல் அல்லாஹ் விட்டு வைத்திருப்பதை தவறாக பயன்படுத்தி மேலும் மேலும் தவறுகள் செய்து, தங்களை கூடுதல் அழிவுக்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள் வழிகேடர்கள்.
அத்தகையவர்களின் வழிமுறையில் தொடர்ந்து செயல்படாமல், வருந்தி திருந்துங்கள் என்று பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கும் மற்றவர்களுக்கும் நான் நினைவுபடுத்தும் இறை வசனம் :


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ


ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். (59:18)


- M. அப்துர் ரஹ்மான் மன்பஈ

நன்றி : இஸ்லாம் கல்வி

Sunday, October 11, 2009

மனிதநேய மக்கள் கட்சிக்கு முதல் வெற்றி

தென்காசி, அக். 9: தென்காசி நகராட்சி 16-வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகும் இது.

அந்தக் கட்சியின் வேட்பாளர் முகமது அலி தமக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் தமீம் இப்ராஹிமை 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வாக்குகள் விவரம்:

மொத்த வாக்குகள் : 1441

பதிவானவை : 881

முகமது அலி (மமக) : 414

தமீம் இப்ராஹிம்(அதிமுக) : 214

முகமது அலி : 206 (முஸ்லீம் லீக்)

Friday, October 2, 2009

அரசு உதவித்தொகை பெற உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் சேரவாய்ப்பு: ராமநாதபுரம் கலெக்டர் ஹரிகரன் தகவல்

ராமநாதபுரம், செப். 26-

சிறுபான்மையினர் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைய உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர் சேர்க்கை தற்போது வக்புவாரிய ஆய்வாளர் மூலமாக நடைபெற்று வருகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலமாக திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணம், முதியோர் உதவித்தொகை மற்றும் இயற்கை, மரணம், விபத்தால் மரணம், ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகிய பல நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்தில் 18 வயது நிறைவு செய்து 60 வயத்துக்குட்பட்ட பள்ளி வாசல்கள் மதர்ஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்க்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மோதினார்கள். பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள், அடக்கஸ் தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த நலவாரியத்தில் உறுப் பினராக பதிவு பெற தகுதியுடைவர்கள்.

உறுப்பினராக பதிவு பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகம் அல்லது வக்புவாரிய ஆய்வாளர் அலுவலகத்தில் உரிய படிவத்தினை பெற்று இந்த நலவாரியத்திற்கு உறுப்பினராக பதிவு பெற தகுதியுடையவர் என்பதற்கு ஆதாரமாக அவர் பணிபுரியும் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் போன்ற நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கோ அல்லது வக்புவாரிய ஆய்வாளர், வக்பு கண்காணிப்பாளர்க்கோ அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

நன்றி : மாலைமலர்

Thursday, October 1, 2009

வக்பு வாரிய கல்லூரி மாஜி முதல்வருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

வக்பு வாரிய கல்லூரி மாஜி முதல்வருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையில், பேராசிரியைக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த வக்பு வாரிய கல்லூரி முன்னாள் முதல்வர் இஸ்மாயில், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


மீண்டும் பணியில் சேர்க்க கோரிய இஸ்மாயில் மனுவையும் தள்ளுபடி செய்தது. மதுரை கே.கே.நகரில், வக்பு வாரிய கல்லூரி 1958ல் துவக்கப்பட்டது. வக்பு வாரிய கட்டுப்பாட்டில் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரியில் பேராசிரியை ஷமீம்ராணி 1996 அக்., 1ல் பணியில்சேர்ந்தார். இஸ்மாயில் விரிவுரையாளராக 1978ல் கல்லூரியில் சேர்ந்தார். 1999ல் முதல்வராக நியமிக்கப்பட்டார். 2003ல் இஸ்மாயில் செக்ஸ் தொந்தரவு செய்வதாக ஷமீம்ராணி கல்லூரி நிர்வாகக் கமிட்டியிடம் புகார் செய்தார். 2003ல் கமிட்டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.


இதற்கு இஸ்மாயில் அளித்த பதில் திருப்தியாக இல்லாததால் கமிட்டி, ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது. அக்குழு விசாரணையில், இஸ்மாயில் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. 2003 ஜூலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு, அவரை பணியில் இருந்து நீக்க நிர்வாக கமிட்டி முடிவு செய்தது. இந்நிலையில், கல்லூரியில் புதிதாக நிர்வாகத்தை ஏற்ற கமிட்டி, அவரை பணியில் மீண்டும் சேர்க்க முடிவு செய்து, 2006 மே 29ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முன்னாள் மாணவர் அஸ்ரப் அலி பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.


மேலும், இஸ்மாயிலை மீண்டும் பணியில் சேர்க்கும் நிர்வாக கமிட்டி முடிவை ரத்து செய்யக் கோரி பேராசிரியை ஷமீம்ராணி ஒரு மனு செய்தார். இம்மனுக்கள் தாக்கலானதையடுத்து நிர்வாகக் கமிட்டி, இஸ்மாயிலை பணி நீக்கம் செய்தது. இதனால், மீண்டும் தன்னை பணியில் சேர்க்கக் கோரி இஸ்மாயில் தனியாக ஒரு மனு செய்தார். இம்மனுக்கள், தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி.ராஜா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அஸ்ரப் அலி சார்பில் வக்கீல் சுப்பையா, ஷமீம்ராணி சார்பில் மூத்த வக்கீல் டி.ஆர்.ராஜகோபால், அரசு தரப்பில் ஜானகிராமுலு ஆஜராயினர்.


நீதிபதிகள் உத்தரவில், ""பேராசிரியைக்கு கல்லூரி முதல்வரே செக்ஸ் தொந்தரவு கொடுத்தது துரதிருஷ்டவசமானது. கல்லூரி நிறுவன முதல்வராக இருப்பவரிடம், இத்தகைய நடவடிக்கையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தளவுக்கு முதல்வரை எதிர்த்து தைரியத்துடன் போராடிய ஷமீம்ராணியை கோர்ட் பாராட்டுகிறது. ஷமீம்ராணிக்கு, இஸ்மாயில் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கல்லூரி நிர்வாகம் (முரண்பாடான நடவடிக்கைகளுக்காக) ஷமீம்ராணிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இஸ்மாயில் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என்றனர்.

நன்றி : தினமலர்