Friday, November 23, 2012

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க வாருங்கள்....

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க வாருங்கள்....: அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் ...

Thursday, November 22, 2012

காவியாக வெளுத்த சிவப்பு - தா.பாண்டியனின் ஃபாசிச முகம்



எல்லா நாட்களையும் போலவேதான் இந்த நாளும் விடியும் என்ற நம்பிகையில் உறங்கச் சென்ற போதிலும் இன்றைய நாள் எனது பல நம்பிக்கைகளைத் தகர்த்த நாள்.

காலையிலேயே தமிழகத்தின் முக்கிய அமைப்பின் தலைவர் ஒருவர் போன் செய்து, 'தம்பி! கசாப் தூக்கிலிடப்பட்டார் என்று செய்திகள் வருகிறது. நான் வெளியில் இருக்கிறேன். உறுதிபடுத்திச் சொல்' என்றார். அதிர்ச்சிகரமான செய்தி. சனியன் கரண்டு வேற‌ இல்லை. தோழர் சதீஸ்க்குப் போன் செய்து செய்தியைக் கூற, 'இருங்கள் அண்ணா! இணையத்தில் பார்த்து சொல்கிறேன்' என்று கூறிவிட்டு செய்தியை உறுதிப்படுத்தினார்.

எரவாட சிறையில் அஜ்மல் கசாப் காலையில் தூக்கிலிடப்பட்டார்.

அவசர கோலத்தில் நடை பெற்ற இந்த சட்டப்பூர்வமான கொலை, அதற்குப் பின் இருக்கும் அரசியல், தமிழக உணர்வாளர்களை அச்சுறுத்தும் அரசியல் இப்படி பல வெங்காயங்களை யோசித்துக்கொண்டு அலுவலகம் சென்றேன்.
காலை முதல் ஊடகங்கள் இந்தியாவுக்கு விடுதலை கெடச்சிருச்சு என்ற ரேஞ்சில் அலறிக்கொண்டிருந்தன. தேசபக்தியின் அளவுகோலே அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதை வரவேற்பதில்தான் இருக்கிறது என்ற ரீதியில் அரசின் திரைக்கதைக்கு கனகச்சிதமாக நடித்துக் கொண்டிருந்தார்கள் ஊடக பயங்கரவாதிகள்.

ஒரு திரைப்படம் என்றால் காமெடியன்களும் பபூன்களும் இல்லாமலா?
தமிழகத்தின் முன்னாள், இன்னாள் அரசியல் காமெடியன்கள், காவி காமெடி, காங்கிரசு காமெடி, பச்சை காமெடி, மஞ்ச காமெடி என விதவிதமாக ப‌ர்பாமன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்க…

தன் கட்சிக்காரன் கொலை வழக்கில் குண்டாசில் உள்ளிருக்க, அம்மாவின் மனம் நோகாமல் நோம்பி கும்பிடும் தப்புத் தாளம் தா.பாண்டியன், மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிக்க பழக்கப்படுத்திகொண்ட ஜி.ராமகிருஷ்ண‌ன்கள் என வரிசை கட்டி நிற்க ஒரே அதிர்ச்சிதான் போங்க... 'நல்லவியங்களுக்கு இங்கே என்னடா வேலை' என மனித உரிமை பேசியே வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்களை அதிர்ச்சியாய்ப் பார்க்க வைச்சாங்க பாருங்க...

அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை வரவேத்தாங்க.. சரி அது ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட கதை வசனம்.. அத உட்டுருவோம்.

அதுக்கு மேலதான் தா.பாண்டியன் பேசிக் கொண்டிருக்கும்போது நான் உத்து உத்து டிவியின் கீழ் வரும் எழுத்தைப் பார்த்தேன். ஆர்.எஸ்.எஸ்.ல் தா.பாண்டியன் சேர்ந்து விட்டாரோ என்று.. ஆனால் மாநிலச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சின்னுதான் வந்தது.

முஸ்லீம்கள் வழிபாட்டுத் தளங்களில் குண்டுவைத்தவர்கள்; தீவிரவாதிகள். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பேசிக்கொண்டே போனார். அப்படியே அவர் உருவில் நரேந்திர மோடிகளும், எச்சி ராஜாக்களும், ராமகோபாலன்களும் வந்து போனார்கள்.

தா.பாண்டியன் அவர்களே!
இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு காரண‌ம் யார் என்று தெரிந்தும் முஸ்லீம்கள் மேல் பலி போடும் துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது?

அஜ்மீர் குண்டுவெடிப்பு, ஜம்தாவி ரயில் குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு என இன்னும் பல குண்டுவெடிப்புகள் இந்துத்துவ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வேளையில் அந்த நிகழ்வுகளுக்கு முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் உங்களை இந்துத்துவத்தின் மறுஉருவமாகவே நாங்கள் பார்க்கிறோம்.

இந்த நாட்டில் எங்கு எது நடந்தாலும் உடனடியாக முஸ்லீம்களின் மீது பலி சுமத்துவதும், இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்களுக்கு சேவகம் செய்பவர்களாக சித்திரிப்பதும், ஒரு சமுகத்தையே குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதும் இந்திய உளவுத் துறை மற்றும் இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகளின் செயல்திட்டங்களில் ஒன்று. அவர்களின் செயல்திட்டங்களுக்கு அவர்களின் திரைக்கதைக்கு நடிக்கும் புதிய காமெடியனாக இப்போது நீங்கள்.

சிறுபான்மை மக்களை முரண் சக்திகளாக முன்னிலைப்படுத்துவதில் அனைவரும் ஓர் அணியில். இதில் காவி என்ன... போலிகம்யூனிஸ்ட் என்ன..? எல்லா அப்பன்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.... என்று இன்றைய தினம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமுகம் பல விடயங்களில் மார்க்க ரீதியாக கம்யூனிஸ்டுகளிடம் முரண்பட்டாலும் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகள் போற்றுவதில் தங்களின் அரசியல் பாதுகாவலர்களாக கம்யூனிஸ்டுகளைப் பார்க்கும் வேளையில் உங்கள் அரசியல், இந்துத்துவ அரசியலை நோக்கி போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து முஸ்லிம்கள் இன்றைய தினம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியா சனநாயக நாடு என்று உலக அரங்கில் போலியாக நம்ப வைத்துக் கொண்டிருந்தாலும் அதன் கோர முகம் இன்றைக்கு அம்மண‌மாக இளித்துக் கொண்டிருக்கிறது. சனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் சவால்விடுவதாக அதன் செயல்கள் இன்றைக்கு அமைந்திருக்கின்றன. உலக நாடுகள் சபையில் நேற்றைய தினம் மரண தண்டனைகளுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதை மூர்க்கமாக எதிர்த்த நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியபின்னர், அது மனித உரிமைப் போராளிகளை, மரண தண்டனைக்கு எதிராக போராடுபவர்களை நோக்கி சவால்களும், எச்சரிக்கையும் விடும் நோக்கில் இன்றைக்கு அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

உலக அளவில் மரண தண்டனைக்கு எதிராக நிற்கும் நாடுகளின் முன் திமிராக 'நேற்று அந்த வரைவுத் தீர்மான‌ம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் மரணத்தையும், மரண தண்டனைகளையும் நாங்கள் முடிவு செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியும்?' என்ற இந்தியாவின் கொக்கரிப்பைப் பார்க்க முடிந்தது.

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் காங்கிரசின் ஒரு பிரிவாக இருந்த வரலாறும், அதிலும் நீங்கள் மஞ்சள் கம்யூனிஸ்டாக காங்கிரசின் சிறுபான்மைப் பிரிவு கம்யூனிஸ்டாக இருந்ததை நாங்கள் மறக்கவில்லை. உங்கள் நிறம்தான் தற்போது சிவப்பு என்றாலும் அதில் ஊடுறுவிப் பார்த்தால் அது காவியாக வெளுத்துள்ளதையும் இனிவரும் காலங்களில் நாங்கள் உணர்ந்திருப்போம்.
உங்கள் காவி சிந்தனையை இனியும் தொடர்ந்து காட்டினால் வரலாற்றில் மிகக் கேவலமான பக்கங்களில் உங்கள் பெயர் எழுதப்படும்.

- உமர்கயான், முதன்மை ஒருங்கினைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம், தமிழ்நாடு

Wednesday, November 21, 2012

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக திருப்பூரில் அணி திரள்வீர் - செப்டம்பர் 25


அரசாலும் , அரசு இயந்திரங்களாலும், சியோனிச, ஃபாசிச ஆதரவு ஊடகங்களாலும் இசுலாமியர்களும், மக்கள் போராளிகளும் தீவிராவாதிகளாக சித்தறிக்கப்பட்டு , பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்படும் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன இத்தருனத்தில் அரசியல் கட்சிகள், மனித உரிமைப் போராளிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஒரு பொது விவாதத்தையும், கருத்து பரப்புரையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில்  தற்சமயம் இருக்கிறார்கள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 14 உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அரசியல் சட்டப்படி ஆட்சியதிகாரம் நடக்கிறதா என்றால் சனநாயகம் இங்கே கேலிக்குரிய வடிவில் அரங்கேறி வருவதைப் பார்க்கமுடியும். அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்குகளில் அரசியல் சட்டத்தை எந்த அரசும் அரசு அதிகாரிகளும் மதிப்பதில்லை. இவர்கள் திட்டமிட்ட சதியின் அடிப்படையில் இசுலாமியர்களுக்கு எதிரான பொய் வழக்குகளை புனைவதிலும், சட்ட விரோத கைதுகளை மேற்கொள்வதிலும், தீவிரவாதிகளாகவும் , பயங்கரவாதிகளாகவும் சித்தறிப்பதிலேயுமே முனைப்பு காட்டுகிறார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்கள் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க "முஸ்லிம் தீவிரவாதிகள்", "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்" என்று இஸ்லாமிய சமூகத்தையும், மக்கள் போராளிகளையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் நாடகத்தை ஊடகங்கள் செய்தது போக இன்று அரசே அதன் எந்திரங்களை கொண்டு நடத்தி வருகிறது. இது இவர்களுக்கு கைவந்த கலை.

திரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா.. எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல்அவதூறான களங்கத்தைச் சுமத்திச் சென்றுவிடுகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா?

இன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் நடக்கும் வன்செயல்கள், அராஜகங்கள், தீவிரவாத செயல்கள், மனித நேயத்திற்கு முரணான செயல்கள் இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். முஸ்லிம்கள் மட்டும்தான் அச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? இல்லையே! ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களிலும் இப்படியொரு அராஜாக - மிருகவெறி கொண்ட கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த, ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஒரு போதும் ஈடுபடமாட்டார். தற்கொலை செய்து கொண்டு தன்னை மீளா நரகில் கொண்டு சேர்க்க ஒரு போதும் முற்படமாட்டார். தீமையை தீமையைக் கொண்டு தடுக்க முடியும் என்று அல்குர்ஆன் சொல்லவில்லை. தீமைகளை நன்மைகளைக் கொண்டே முறியடியுங்கள் என்றே குர்ஆன் போதிக்கிறது.

ஒரு நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் அரசு, அரசு அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் இந்த நான்கும் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நிலைகுழைந்தால் நாட்டில் கற்பழிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, தீவிரவாதம் என அனைத்து அராஜகங்களும், பஞ்சமா பாவங்களும் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று இந்த நான்கு தூண்களும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றன.

இல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள். துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை. இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லை. இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக பிறருக்கு சொன்னால் போதும் என்கின்ற மனநிலையில் பெரும்பான்மையினர் ஒதுங்கிவிடுகின்றனர். இன்னும் இயக்கங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒற்றுமையின்றி போராடிக்கொண்டிருக்கின்றன அதனால் நமது வீறியத்தை அரசுக்கு புறிய வைக்க இயலவில்லை.இதனால் அரசு நமது சமூகத்தை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், அந்நிய நாட்டு உளவாளிகளாகவும் சித்தறித்து பொய் வழக்குகளை போட்டு அரசியலமைப்பு சாசனத்திற்குஎதிரகா கைதுகளை மேற்கொண்டு நமது சமூகத்தை இழிவு படுத்தி வருகிறது. இது ஒரு திட்டமிடட சதி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இப்படியிருக்கையில் இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் சமூகத்தை இந்த அழிவு பாதையிலிருந்து பாதுகாப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆகவே நாம் இதிலிருந்து விரைவில் விழித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய மிகக் கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு முன்னோட்டமாக உணர்ச்சியும், உற்சாகமும், சிந்திக்கும் திறனும் மிக்க ஆற்றல் மிக்க இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள "இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்" தமிழகமெங்கும் இசுலாமிய இயக்கத் தலைவர்களையும், சமூக ஆர்வளர்களையும், சிந்தனையாளர்களையுமு் திரட்டி பல கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் நடத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இஸ்லாமிய சமூகத்தையும், மக்கள் போராளிகளையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் அரச நாடகத்தையும், நமது மக்களுக்கு எதிராக தொடரும் கைதுகள், பொய் வழக்கு கொடுமைகளையும் கண்டித்து இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர் பிரச்சார இயக்கத்தினை தொடங்கி உள்ளது. இதன முதல் கட்டமாக வரும் 25.11.2012 அன்று திருப்பூர், காங்கேயம் சாலை, வெங்கடேஸ்வரா நகரில் அமைந்துள்ள H.M.S மஹாலில்முதல் அரங்க கூட்டத்தை நடத்துகிறது. இதில் சமுதாயத்தலைவர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், சமூக அக்கறையாளர்களும், வழக்கறிஞர்களும் மனித நேயம் மிக்கவர்களும், மனித உரிமைகளை காக்க போராடுபவர்களுமாக கண்ணியவான்கள் கலந்து உரிமைக்குரல் எழுப்ப உள்ளார்கள்.

வரும் நவம்பர் 25 அன்று திருப்பூர் மாநாகரில் கூடும் அரங்க கூட்டத்தில் நம் தமிழ் சமூக அமைப்புகளின் தலைவர்கள், மனித அரிமை ஆர்வளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளார்கள் இச்சமூக சங்கமிப்பில் நீங்களும் ஒரு அங்கமாய் நின்று இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய குரல் கொடுங்கள், ஜாதி , மத வேறுபாடின்றி உங்களை அழைக்கிறோம், அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைப்போர் இது, நமது சக தோழர்களின் அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுப்போம்!!வாருங்கள் அநீதிக்கெதிரான இந்த களமாடலில் பங்கெடுங்கள் !! பதிவு செய்யுங்கள் உங்களை வரலாற்றின் பக்கங்களில் நீதிக்காக போராடியோர் என்று!!

ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள(போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை.குர்ஆன் (8:53)


இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
தொடர்பு : 9488159091 - 9486641586



Tuesday, September 18, 2012

அமெரிக்காவிற்கு எதிராக முஸ்லிம்கள் - சென்னை ஸ்தம்பித்தது



சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை இப்படி ஒரு போராட்டத்தை அண்ணா சாலை கண்டதில்லை என்பதால் சென்னையே சில மணி நேரம் ஆடிப் போய் விட்டது.

Sunday, August 26, 2012

ஆகஸ்ட் 31 - ஏன்? ...எதற்காக.....?


 
அன்பின் தோழமைகளே,

கோவை சிறையில் உள்ள 166 முஸ்லிம்கள் உட்பட தமிழகமெங்கும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலநூறு முஸ்லீம் சிறைவாசிகளின் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட சிறை இருப்பையும், ஆதாரங்களற்ற முறையில் ராசிவ் காந்தி கொலை வழக்கில் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்ட்டிருக்கும் முருகன், பேரரிவாளன், சாந்தன் என தமிழ் சொந்தங்களும், இன்னும் தமிழக சிறைகலெங்கும் பல்லான்டு காலமாக விடுதலைக்கான முகாந்திரமே இல்லாமல் அடைபட்டு கிடக்கும் அனைத்து அப்பாவி சிறைவாசிகளின் நிலை நிச்சயமாக 21 ஆம் நூற்றாண்டு இந்திய சமூகத்தின் அவலமாக வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

நீதி நியாயம் ஜனநாயகம் சட்டத்தின் முன் அனைவரும் சமம், மதச்சார்பற்ற தன்மை, மனித உரிமை என்பதனை எல்லாம் கோட்பாடுகளாக கொண்ட ஒரு அரசமைப்பில் இருந்து நீண்ட நெடுங்காலமாக நீதி , நியாயம், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் இந்திய வரலாறு காணாத நீண்ட சிறை இருப்பில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தினருக்கும், மேற்கூறிய அப்பாவிகளுக்கும் நம்மாள் நீதி பெற்றுத்தர இயலவில்லை என்றால் அதனினும் ஒரு சமூக இழிவு வேறொன்று இருக்குமோ?

 இந்தியாவில் இதுவரை நடந்த வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயமே. இதன் சொத்துக்கள் சூரையாடப்பட்டுள்ளன, இச்சமுதாயத்தின் பென்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இன்னும் இச்மூகமே தண்டிக்கப்படும் விதமாய அக்கலவரங்களுக்கு காரனம் என குற்றம் சுமத்தப்பட்டு இந்தியாவெங்கும் சிறையிலும் அடைபட்டு கிடக்கின்றனர். இக்கலவரங்களுக்கு காரனமான சங்பரிவார கூட்டங்கள் ஒரு போதும் சிறையில் அடைக்கப்பட்டதுமில்லை, தண்டிக்கப்பட்டதுமில்லை இது தான் ஜனநாயக இந்தியா!! 

ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். பல ஆன்டுகளாக யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் முஸ்லிம்களின் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் முஸ்லீம்களாகிய நமது சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணை கூட மறுக்கப்படுகிறது. நாடறிந்த குற்றவாளியாகிய பாசிச சங்பரிவார கும்பல்கள் குற்றமற்றவர்கள் என உலாவுகின்றனர்.சட்ட மன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவால் குற்றம் செய்துள்ளார் என பிரகடனப்படுத்தப்பட்டும் கூட காஞ்சி சங்கராச்சாரியார் என்ற கொலைக் குற்றவாளி பிணையில் விடப்பட்டுள்ளார் ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பலர் நீண்ட காலமாக பிணைதராமல் கொடிய சிறையினுள் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் அநீதி நம் தமிழகத்தின் தான் இந்த அநீதிக்கு எதிராக தமிழ் இனம் ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும்.

ராஜிவ் காந்தி படுகொலையின் மூல காரன கர்த்தாக்களான "சாமி" வகையராக்கள் சுதந்திரமாக உலா வருகையில் ஏதுமறியாத அப்பாவிகள் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சிகளின் அடிப்படையில் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். ராஜிவ்கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல, தடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகிவிட்டது இன்னும் ஏன் இந்த அப்பாவிகளை துர்க்கு தண்டனை கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்? இது மனித உரிமை மீறல் இல்லையா? இன்னும் இந்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தோழர் ரவிச்சந்திரன் உட்பட 4 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக 20 ஆன்டுகளை தாண்டியும் அடைபட்டுள்ளனர். ஒரு கைதி எட்டு ஆன்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பது என்பது அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று மனித உரிமை ஆர்வளர் திரு. வி.ஆர். கிருஷ்னய்யர் என்பவர் கூறியுள்ளார்.

நமது தேசப்பிதா அன்னல் மகாத்மா காந்தி அவர்களை கொன்ற கோபால் கோட்சே என்பவன் 16 ஆன்டுகளில் விடுதலை செய்யப்பட்டான், இவ்வளவுக்கும் கோபால் கோட்சே மகாத்மா காந்தியின் படுகொலையில் நேரடியாக தொடர்புள்ளவன் என்று குற்றம் சாட்டப்பட்டு அது நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவன். ஆனால் தமிழகத்தில் மட்டும் எந்த வித நேரடி குற்றச்சாட்டுகக்களும் இன்றி சந்தர்ப்ப சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு விசாரனை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் 20 ஆன்டுகளை தாண்டியும் சிறைக் கொட்டடிகளில் எமது தமிழ் இனத்தை சேர்ந்த தோழர்கள் பலர் கரையே தெறியாது வாடி வருகின்றனர். தேசப்பிதாவை கொன்ற கொடியவர்கள் எல்லாம் விடுதலையாகும்போது எமது இனச்சொந்தங்களை மட்டும் இந்த அரசு வஞ்சப்பது ஏனோ? 

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கோட்பாட்டினை கொண்ட இந்திய திருநாட்டில் சங்கராச்சாரிகளுக்கும், அம்பானி வகையாராக்களுக்கும் ஒரு நீதி சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு ஒரு நீதி!! என்ன ஒரு அவலம்?

பாதிக்கப்பட்டு கொடுஞ்சிறைகளில் அடைபட்டு கிடக்கும் இம்மக்களை பற்றி நாம் அறிந்து கொள்ளாமலோ, அறிந்தும் அறியாமலோ, இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மறுக்கவோ , மறைக்கவோ செய்து அல்லது கண்டும் காணாதது போலவோ இருந்து விடலாம். அறிந்து கொல்லுங்கள் வரலாறு நமது மனசாட்சியை விட மிக நேர்மையாக இயங்குகிறது

வரும் ஆகஸ்ட் 31 அன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கூடும் மாநாட்டில் நம் தமிழ் சமூக அமைப்புகளின் தலைவர்கள், மனித அரிமை ஆர்வளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளார்கள் இச்சமூக சங்கமிப்பில் நீங்களும் ஒரு அங்கமாய் நின்று இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய குரல் கொடுங்கள், ஜாதி , மத வேறுபாடின்றி உங்களை அழைக்கிறோம், அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைப்போர் இது, நமது சக தோழர்களின் அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுப்போம்!!

ஆகஸ்ட் 31 - சென்னை மன்னடியில் சங்கமிப்போம், வெஞ்சிறைகளில் வேதனைகளோடு வாடும் நம் இனத்தை மீட்க போராடுவோம் , வாருங்கள் அநீதிக்கெதிரான இந்த களமாடலில் பங்கெடுங்கள் !! பதிவு செய்யுங்கள் உங்களை வரலாற்றின் பக்கங்களில் நீதிக்காக போராடியோர் என்று!!

அழையுங்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்: 9944112879 / 7871294143 / 9488159091 / 9944713816

Wednesday, August 15, 2012

காஞ்சி சங்கராச்சாரியும் காயல்பட்டினம் தொழில் அதிபர் LKS கோல்டு ஹவுஸ் தொடர்பு அம்பலம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

காயல்பட்டினத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபரும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் அதி முக்கிய ஸ்பான்சர்களில் ஒருவரும் பிரபல நகைக்கடையான LKS கோல்டு ஹவுஸ் சின் ஓனருமான திரு. அக்பர் ஷா என்பவரால் கடந்த 02.08.2012 அன்று தமிழகமெங்கும் மாலைமலர் பத்திரிகையில் முதல் பகக்கத்தில் அரைப்பக்கத்திற்கு பல லட்சம் செலவில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அதைக் கண்டவுடன் பேரதிர்ச்சி ஏற்ப்பட்டது காரனம் தமிழகத்தில் தவ்ஹித் வாதிகளாலும் காயல்பட்டினத்தாராலும் போற்றப்படும் ஹாஜி அக்பர்ஷா வின் முகத்திரை கிழிக்கப்பட்டிருந்தது. ஆம் ஊத்தவாயன் காஞ்சி சங்கரச்சாரி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அவரின் 78 ம் பிறந்த நாளில் இந்து ஊத்தவாயன் காஞ்சி பெரியவர் பல ஆன்டு காலம் வாழ்ந்து LKS கோல்டு ஹவுஸ் உரிமையாளர் அக்பர்ஷாவின் சமுதாயத்தை வழிநடத்த வாழ்த்துகிறோம் என்று இந்த ஊத்தவாயன் காஞ்சி சங்கரச்சாரியாரை வாழ்த்தி காயல்பட்டனம் மக்களின் பிரதிநிதியும் , உலக இஸ்லாமிய தமிழ் மாநாட்டு முக்கிய பிரமுகரும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மற்றும் பிஜே யானிகளி்ன் அதி முக்கிய ஸ்பான்சருமான LKS கோல்டு ஹவுஸ் உரிமையாளர் அக்பர்ஷா வால் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. 

விசாரித்த பின்னர்தான் தெறிந்தது LKS கோல்டு ஹவுஸ்   உரிமையாளர் அக்பர்ஷா வின் முழு பின்புலம் ஊத்தவாயன் காஞ்சி சங்கரச்சாரி ஜெயந்திர சரஸ்வதிதான் என்று இவனை வைத்து பலமுறை LKS கோல்டு ஹவுஸ் ல் பெரும் பொருட்செலவில் யாகங்கள் நடத்தியிருப்பதும் சங்கர மடத்திற்கு தேவையான அனைத்து பிரின்டிங் வேலைகளும் LKS கோல்டு ஹவுஸ் உரிமையாளர் அக்பர்ஷா வின் உத்தரவிக்கினங்க அவரது "மாஸ் பிரஸ்" ஸில் அடித்து கொடுப்பதும்.  LKS கோல்டு ஹவுஸ் உரிமையாளர் அக்பர்ஷா வின் கடையிலேயே ஊத்தவாயன் காஞ்சி சங்கராச்சாரி வாலை இலையில் மலம் கழித்து அதே இலையில் தங்க காசுகளை வைத்து  LKS கோல்டு ஹவுஸ் உரிமையாளர் அக்பர்ஷா விடம் கொடுத்து ஆசிர்வாதித்ததும். 

சமுதாயமே இந்த பெயர் தாங்கியை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். காயல்பட்டினமே இன்னுமா உறக்கம். பெயர் தாங்கியை கண்டிக்க தயங்குவது ஏன்? 


Wednesday, August 8, 2012

சிறைவாசிகள் மீட்பு மாநாட்டுக்காக நிதிவேண்டி.....

ஏக இறையவனின் அளப்பரிய கருணையினால்...


உண்மையுடன்...உரிமையுடன்...உணர்வுடன்...அழைக்கிறது...
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்


ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். பல ஆன்டுகளாக யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் முஸ்லிம்களின் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் முஸ்லீம்களாகிய நமது சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணை கூட மறுக்கப்படுகிறது. நாடறிந்த குற்றவாளியாகிய பாசிச சங்பரிவார கும்பல்கள் குற்றமற்றவர்கள் என உலாவுகின்றனர்.சட்ட மன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவால் குற்றம் செய்துள்ளார் என பிரகடனப்படுத்தப்பட்டும் கூட காஞ்சி சங்கராச்சாரியார் என்ற கொலைக் குற்றவாளி பிணையில் விடப்பட்டுள்ளார் ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பலர் நீண்ட காலமாக பிணைதராமல் கொடிய சிறையினுள் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் அநீதி நம் தமிழகத்தின் தான் இந்த அநீதிக்கு எதிராக முஸ்லீம்கள ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும். நமக்கென்ன என்று விட்டு விடுவது நல்ல முஸ்லீம்களின் பண்பு அல்ல. முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி இந்த அநீதிக்கு எதிரான யுத்தத்தில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் மாநிலமெங்கும் மாநாடுகளையும் சட்ட போர்களையும் நடத்தி வருகின்றது.

அண்ணலார் பெருமானார் கூறியிருக்கின்றார்கள்:

ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமின் சகோதரராவார், அவன் அடுத்தவனை (முஸ்லீமை) அமுக்கவோ அடுத்தவனுடைய உரிமைகளை பறிக்கவோ மாட்டான். சகோதர முஸ்லீமுடைய தேவையை தருபவனுக்கு அல்லாஹு உதவி செய்வான். சகோதர முஸ்லீமுடைய ஒரு துன்பத்தை அகற்றுபவனுடைய துன்பங்களில் ஒன்றை அல்லாஹு மறுமைநாளில் அகற்றுவான். முஸ்லீம் சகோதரருடைய குறையை மறைப்பவனுக்கு மறுமைநாளில் அல்லாஹ் அவனுடைய குறையை மறைத்து அருள் புரிவான் (முஸ்லிம்)

மேலும் அவ(இறைவ)ன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைபட்டோருக்கும் உணவளிப்பார்கள். அல்குர்ஆன்(76:8)

அநீதி சிறையில் வாடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுவிக்கக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த ஆறுமாதகாலமாக பல்வேறு சிரமங்கள் சிக்கல்கள் இவற்றுக்கு மத்தியில்... இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் முன்னெடுத்து நடத்திய தொடர் பொதுக்கூட்டங்கள் இதுவரை இல்லாத வகையில் அரசின் கவனத்தை ஈர்த்திருப்பது மட்டுமல்லாது மாபெரும் மக்கள் எழுச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது...

இதோ நமது அறப்போராட்டம் இறுதிகட்டத்தை நோக்கி... எதிர்வரும் ஆகஸ்ட் 31ம் நாள் சென்னை மண்ணடியில்... "மாபெரும் அரசியல் சிறைவாசிகள் மீட்ப்பு மாநாடு"

ஆயத்தமாகுங்கள்... அணிதிரள... கருனைக்கரங்களை நீட்டுங்கள்... கொடுங்சிறையின் கதவுகள் திறந்திட...

இன்னும் அநீதிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்திற்கு உதவுவது நம் மீது கடமையாகும். ஆகவே, நன்மையை கொள்ளையடிக்க வேண்டிய ரமலான் மாதத்தில் உங்களின் நிதி உதவிகளை இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் நடத்தும் மாநாட்டுக்காக வாரி வழங்குவீர். அல்லாஹ்வின் தூதர் இம்மாதத்தை அடைந்து விட்டால் வேகமாக வீசக்கூடிய புயல் காற்றை விட அதிகமாக தானதர்மங்கள் செய்வார்கள். அண்ணலாரின் அடியொற்றி வாழும் நாமும் இச்சுவனத்தைப் பின்பற்றி சிறை பட்டோரின் நலனுக்கு வாரி வழங்கி மறுமை ஈடேற்றம் என்ற நற்பேற்றினை அடைவீராக!.

முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுவிக்கக்கோரி  அரசியல் சிறைவாசிகள் மீட்பு மாநாட்டுக்காக உங்கள் உதவிகளை வாரி வழங்கிட


அழையுங்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்: 
9944112879 / 7871294143 / 9488159091 / 9944713816