Sunday, August 30, 2009

இஸ்லாமிய ஒளியில் எஸ்.பி.பட்டிணம் பள்ளி

பிஸ்மில்ல ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

இஸ்லாமிய ஒளியில் எஸ்.பி.பட்டிணம் பள்ளி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எஸ்.பி.பட்டிணம் மெயின் ரோட்டிலுள்ள பள்ளி வாசலை யார் நிர்வகிப்பது என்பதில், ஊர் ஜமாத்தினருக்கும் த.த.ஜவினருக்கும் சச்சரவு நடந்து கொண்டிருப்பது நாமெல்லாம் அறிந்தததே! இந்தப் பிரச்சனையை இஸ்லாமிய ஒளியில் நீதியின் வழி நின்று தீர்வை தேடுவோமாக!

த.த.ஜதரப்பு கூறுவது என்ன?

இடத்தின் உரிமையாளர் எங்கள் இயக்கத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டதால் எங்களுக்கு உரியதே என்கிறார்கள்!


அவர்கள் வாதம் சரியே! அவர்கள் இயக்கத்திடம் பள்ளிவாசலை ஒப்படைப்பதே நீதீ! (இதற்கு தடையாக வேறு காரணம் இருந்தால் தவிர)

இந்த நீதிப்படி மேலாப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலை த.த.ஜகாரர்கள் ஜாக் இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஏனென்றால் அந்த பள்ளிவாசல் இடம் ஜாக் இயக்கத்தின் பெயரில்தான் வாங்கப்பட்டு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

ஜாக் க்கும் த.த.ஜ ஐயும் அந்தப்பள்ளிவாசலுக்காக மோதிக்கொண்டபோது, அல் ஜன்னத் மாத இதழின் செப்டம்பர் 2006 வெளியீட்டில், அந்தப் பள்ளியின் பத்திர நகல் வெளியிடப்பட்டது அதில் அந்தப் பள்ளி ஜாக் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததை மக்கள் படித்தார்கள்.

மேலும் ஜாக் இயக்கத்துக்காக அந்த இடத்தை வாங்கிய அந்த அமைப்பின் நிர்வாகிகள் சாட்சிகளாக இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தகைய தெளிவான ஆதாரங்களுக்குப் பின்பும் கூட உரியவர்களிடம் பள்ளியை ஒப்படைக்காமல், பலவந்நதத்தின் மூலம் தங்களிடமே வைத்திருக்கிறார்கள் த.த.ஜ காரர்கள்.

ஆகவே எஸ்.பி. பட்டிணத்தில் தாங்கள் பேசும் நீதீயை மேலாப்பாளையத்தில் முதலில் செயல்படுத்த வேண்டும் என்பதே குர்ஆன், ஹதீஸ் வழி நடக்கும் முஸ்லிம்கள் த.த.ஜ வுக்கு வைக்கும் வேண்டுகோள்!அப்படிச்செய்யாவிட்டால் 'வேதம் ஓதும் சாத்தான்கள்' என்பதற்கு பொருத்தமான உதாரணமாக நீடிப்பிர்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.

அதே போல் ஜாக் பெயரில் பதிவு செய்யப்பட்டு, ஜாக் இயக்கத்தால் கட்டப்பட்ட கடையநல்லுர் மஸ்ஜிதுல் முபாரக் தவ்ஹீத் பள்ளிவாசலையும் திருச்சி சிங்காரத் தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலையும் திரும்ப அந்த இயக்கத்தினிரிடமும் த.த.ஜ காரர்கள் ஒப்படைக்க வேண்டும். முறையற்ற வழியில் அந்தப் பள்ளிவாசலையும் அபகரித்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் எஸ்.பி. பட்டிணத்தில் நீங்கள் உரிமை கேட்க கொஞ்சமாவது நியாயம் இருக்கும்.

மேற்கண்ட பள்ளிவாசலையும் பற்றிய விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள, அவற்றுடன் நேரடியாக தொடர்புள்ளவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.

மேலாப்பாளையும் - சிப்பத்துல்லாஹ் செல் - 9790307894
கடையநல்லுர் - சாகுல் ஹமீது, செல் - 9842186892
திருச்சி சிங்காரத்தோப்பு –முஹம்மது – 9047783649


நோக்கம் என்ன?

பள்ளிவாசல்களை கைப்பற்றுவதற்கும் புதிது புதிதாக ஆரம்பிப்பதற்கும் தவ்ஹீத் நோக்கமா? அல்லது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதா? என்று பார்தால் தங்களின் த.த.ஜ இயக்க ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கமும் பிரிவினை போக்குமே தென்படுகிறது.

அதனால்தான், தவ்ஹீது பள்ளிகள் இருக்கும்போது அவற்றுக்கு அருகிலேயே சில ஊர்களிள் வீம்பாக வாடகைக்கு எடுத்த இடத்தில் பள்ளிவாசல் நடத்துகிறார்கள் இந்த த.த.ஜ வினர்.
இப்படி நாம் அறிந்த ஊர்களில் சில: நாகூர், கோட்டுர்,கீழக்கரை
இதுபற்றி உறுதிப்படுத்திக் கொள்ள
நாகூர்- காதர். செல்- 9443572374 கோட்டுர்-ஹாக்கிம்,-9445381837
கீழக்கரை – சேக் அலி, செல் : 9994296263



சயீது ஹாஜியாரும் துணைவியாரும்

சர்ச்சையாக்கப்பட்டுள்ள எஸ்.பி. பட்டிணம் பள்ளிவாசல் இடத்தின் உரிமையாளர் ஹாஜியானி திருமதி. சயீது ஹாஜியார் அவர்கள் 11.8.2009 இரவு இமயம் டி.வி. பேட்டியில் எதிர் தரப்பினரை கடுமையாக விமர்சித்து பேசினார்கள். தனது தவறை மறைத்து விட்டு பிறர் மீது கோபத்தை கொட்டினார்கள்.

1994ம் வருடம் அந்தப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் பலநூறு மக்கள் சாட்சியாக பள்ளிவாசலை வக்ஃப் செய்வதாக அறிவித்தும் ஊர் ஜமாத்திடம் ஒப்படைத்ததும் சயீது ஹாஜியார்தான்.

இந்த வருடம் (2009) ஜனவரி மாத்தில், பள்ளியின் பொருளாதாரத்திற்கும் நான் பொறுப்பு அதன் மற்ற காரியத்துக்கு ஊர் ஜமாஅத் பொறுப்பு என்று எழுதி கையொழுத்திட்டுக் கொடுத்ததும் சயீது ஹாஜியார்தான்.


அவர் வக்ஃப் செய்தபோதும், எழுதிக் கொடுத்த போதும் பதினான்கு வருடமாக மௌன சாட்சியாக இருந்து விட்டு இப்போது திடீரென நான் தான் இடத்தின் உரிமையாளர் என் இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன் என்று கிளம்புவது உங்கள் தவறு.

இது ஊரையும் சமுதாயத்தையம் ஏமாற்றுகிற செயல் அனைவரையும் மடையர்களாக்குகிற பாதகச் செயல் உங்களின் இந்தத் தவறுக்கு நிதானத்தோடு பரிகாரம் காணுங்கள்.பின்பு உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள் என்பதே உங்கள் மீது பாசமும் மரியாதையும் வைத்துள்ள எங்களின் வேண்டுகோள்!

உண்மைத் தவ்ஹீத்வாதியின் நோக்கம் பள்ளிவாசலில் நபி வழிக்குமாhற்றமான செயல்கள் நடக்கக்கூடாது என்பது தான். தங்களின் உரிமையைப் பயன்படுத்தி அனாச்சாரங்கள் நடைபெறக் கூடாதென வலியுறுத்தியிருந்தால்இ அது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும். மக்களின் ஒற்றுமையுடன் நபி வழி பள்ளியாக அது செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கும. பள்ளி பூட்டப்பட்டிருக்காது இந்த நல்ல நிலையை ஏற்படுத்த இப்போதும் காலம் கடந்து விடவில்லை .

த.த.ஜவினருக்கு

சில தனிநபர்களின் தவறான வழிகாட்டலுக்கு கட்டுப்பட்டு உங்களின் மறுமை வாழ்கைக்கு நஷ்டத்தை தேடிக் கொள்ள வேண்டாம்

கடந்த 31.7.2009 அன்று எஸ்.பி பட்டிணத்தில் ஏற்பட்ட மோதலுக்குப் பின் வந்த உணர்வுப் பத்திரிக்கையில் வெளியான புரட்டல் செய்தியை படித்த அந்த ஊரைச் சேர்ந்த த.த.ஜ தீவிர தொண்டர்கள் சிலர் மனம் நொந்து இயக்கத்தை விட்டே வெளியேறி விட்டார்கள் என்பதை தெரிந்துகொள்ளங்கள்! இது பற்றியும் இப்பள்ளியின் பதினான்கு வருட சரித்திரமும் அறிய தொடர்பு கொள்ளுங்கள். யாகூப் ஆலிம். செல்: 9442750475

அனைத்து தரப்பினரிடமும் செவிகொடுத்து கேளுங்கள்! சிந்தித்து நிதானத்துடன் செயல்படுங்கள் இல்லாவிட்டால் கீழ்வரும் அல்லாஹ்வின் பழிப்புரைக்கு ஆளாவீர்கள் என்று எச்சரிக்கிறோம் .

அல்லாஹ் கூறுகிறான்

அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினம் (உண்மையை)விளங்காத செவிடர்களும் ஊமைகளுமாவர் (திருக்குர்ஆன் 8:22)


சமுதாயத்தின் நலன் விரும்பி இதனை தெரிவிக்கிறோம்.

அப்துர் ரஹ்மான் மன்பஈ
அஹ்லுஸ்ஸீன்னா இஸ்லாமிய ஆயவு மையம்
தொண்டி.செல் : 98408 28225

Thursday, August 20, 2009

ரமழானின் பயனை பெறுவது எப்படி?" -மெளலவி முபாரக் மதனி(VIDEO)

மெளலவி முபாரக் மதனி அவர்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்-கோபர் இஸ்லாமிய மையமும் தமிழ் தஃவா கமிட்டியம் இணைந்து கடந்த 19-09-2007 அன்று இரவு அல்கோபர் நகரின் மையப்பகுதியில் அமைந்தள்ள அல்கோபர் இஸ்லாமிய மையத்தால் நடத்தப்படும் இஃப்தார் குடிலில் (நோன்பு திறக்கும் குடில்) சிறப்பான முறையில் ஒரு இஸ்லாமிய குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் பிரபல மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்களும், இந்தியாவை சேர்ந்த பிரபல அழைப்பாளர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்களும், இலங்கையை சோந்த பிரபல அழைப்பாளர் மெளலவி மன்சூர் மதனி அவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்புகளின் கீழ் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு தமிழ் தஃவா கமிட்டியின் நிர்வாகி மறியாதைக்குறிய மக்கீன் நலீமி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி தந்தார்கள்.

நிகழச்சிக்குறிய ஏற்பாடகளை அல்கோபர் இஸ்லாமிய மையத்துடன் இணைந்து அல்கோபர் தமிழ் தஃவா கடமட்டியிர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். அதன் தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து இந்நிகழச்சியை சிறப்பாக நடத்தி தந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆன்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து பயன் பெற்றனர்.

நிகழச்சியில் இலங்கையை சேர்ந்த மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்கள் "ரமழானின் பயனை பெறுவது எப்படி?" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ தமிழ் முஸ்லிம் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ் மக்கள் அணைவரும் இந்த வீடியோவை கண்டு இந்த ரமழானை நல்லபடியாக பணன்படுத்தி பயன் பெற வேண்டும். வீடீயோவை காண கீழே சொடுக்கவும்..


.
நிகழ்ச்சியின் அணைத்து வீடியோக்களையும் இன்னும் பல அற்புத தலைப்புக்களில் இஸ்லாமிய பயான் வீடியோக்களை காண :.
.

Sunday, August 16, 2009

Popular Front -- Freedom Parade









ghg;Gyh; /g;uz;bd; Rje;jpujpd mzptFg;G

Fk;gNfhzk; \`Pj; jpg;G Ry;jhd; efh;

jhuhRuk; ikjhdj;jpy; eilngw;wJ


Nghuhbg; ngw;w Rje;jpuj;ijf; nfhz;lhLk; tpjkhfTk; ek; Kd;Ndhh;fspd; Rje;jpug; Nghuhl;l jpahfj;ij epidT$Uk; tpjkhfTk; ghg;Gyh; /g;uz;l; M/g; ,e;jpah Mf];L 15> 2009 md;W 63tJ Rje;jpujpdj;ij rpwg;ghff; nfhz;lhbaJ. mjd; xU gFjpahf jkpofj;jpy; Fk;gNfhzj;jpYk;> Nfushtpy; ,Lf;fp kw;Wk; fz;Z}hpYk;> fh;ehlfhtpy; ik#hpYk; Rje;jpujpd mzptFg;G kw;Wk; nghJf;$l;lj;ij elj;jpaJ.


Fk;gNfhzj;jpy; eilngw;w Rje;jpujpd mzptFg;G kjpak; rhpahf 3.15f;F Jtq;fpaJ. ghg;Gyh; /g;uz;l; jkpof jiyth; vk;. K`k;kJ myp [pd;dh mzptFg;G khpahij Vw;Wf; nfhz;lhh;. mjidj; njhlh;e;J xw;Wik fPjk; Koq;fpa gpd; ghg;Gyh; /g;uz;bd; nghJr; nrayhsh; V. /gf;UjPd; tuNtw;Giu toq;fpdhh;. njhlh;e;J ghg;Gyh; /g;uz;l; jkpof jiyth; K`k;kJ myp [pd;dh Rje;jpujpd cWjpnkhopia Kd;nkhopa kf;fs; mjid topnkhope;jhh;fs;. ghg;Gyh; /g;uz;l; Njrpa jiyth; ,.vk;. mg;Jh; u`;khd; jiyikAiuahw;wpdhh;.


me;j ciuapy; cz;ikahd Rje;jpuk; vd;gJ midtUk; mr;rj;jpypUe;Jk; grpapypUe;Jk; tpLjiy ngw Ntz;Lk;. midj;J kf;fSf;Fk; rhpahd gpujpepjpj;Jtk; nfhLf;fg;gl Ntz;Lk; vd;w Nehf;fj;jpy; Nrh\pay; nlkhf;ubf; ghh;l;b M/g; ,e;jpah vd;w fl;rpia cUthf;fpAs;Nshk; vd;W $wpdhh;.


gpd;dh; Rje;jpug; Nghuhl;l jpahfpfs; fTutpf;fg;gl;ldh;.


rpwg;G tpUe;jpdh;fshf tUif je;j ney;iy khtl;l cykh rig jiyth; kTytp b.N[.vk;. ryh`{j;jPd; hpah[p jdJ ciuapy; ,q;F vOr;rp kpF mzptFg;G elj;jpa ghg;Gyh; /g;uz;l; M/g; ,e;jpahtpDila cWg;gpdh;fNs Rje;jpug; Nghuhl;lj;jpy; jq;fSila capiu jpahfk; nra;j jpahfpfs; ,d;iwa nghOJ capNuhL ,Ue;jpUe;jhy; mzptFg;gpd; tPuh;fshd cq;fis Muj;jOtp jq;fSila kfpo;r;rpiaj; njhptpj;jpUg;ghh;fs; vdf; Fwpg;gpl;lhh;.


tpLjiy rpWj;ijfs; fl;rpiar; Nrh;e;j jpU. utpf;Fkhh; vk;.vy;.V. jypj; K];ypk; xw;Wikiag; gw;wpAk; mjd; Kf;fpaj;Jtj;ijAk; Fwpg;gpl;L ciuahw;wpdhh;.

Kd;dhs; vk;.vy;.V. jpU. vk;.[p.Nf. ep[hKj;jPd; ciuahw;Wk; NghJ ,e;j jplypNy jpushfj; jpuz;bUf;Fk; ,t;tPuh;fisf; fhZk; nghOJ vd;djhd; epfo;e;jhYk; cq;fsplj;jpNy xU tp\aj;ij cWjpahf nrhy;y tpUk;GfpNwd;. ,e;j ghg;Gyh; /g;uz;l; tPuh;fSf;F Jg;ghf;fp gapw;rp mspj;J ,e;jpa ,uhZtj;jpy; Nrh;j;J rPdhitAk;> ghfp];jhidAk; ,e;jpa vy;iyapypUe;J tpul;b ,e;jpahitg; ghJfhf;f Ntz;Lk; vdf; Fwpg;gpl;lhh;.


jkpo;ehL ghg;Gyh; /g;uz;l; Jizj;jiyth; jpU. V.v];. ,];khaPy; fhty; Jiwapd; mjpfhu J\;gpuNahfj;ijAk;> mj;JkPwy;fisAk; fz;bj;Jg; Ngrpdhh;.


kf;fs; [dehaf fl;rpapd; jiyth; jpU. Nf.vk;. \hP/g; K];ypk;fs; vd;why; gphpahzpAk; FUkhTk; rhg;gpLthh;fs; vd;w kf;fspd; vz;zj;ij khw;wp K];ypk;fs; vd;why; ngw;w Rje;jpuj;ijg; ghJfhg;gth;fs; vd;Wk; jdp kdpj Rje;jpuk; ghjpf;fg;gLk; NghJ jl;bf; Nfl;gth;fs; vd;Wk; ghg;Gyh; /g;uz;l; M/g; ,e;jpah ,d;W czh;j;jpAs;sJ vd;W ciuahw;wpdhh;.



ghg;Gyh; /g;uz;l; Njrpa nghUshsh; kTytp N\f; K`k;kJ nj`;yhd; ghftp jdJ rpwg;Giuapy; K];ypk;fSf;F Rje;jpujpd nfhz;lhl;lj;jpw;fhd mDkjpia fhty;Jiw kWg;gJ rpWghd;ik kf;fspd; eydpy; mf;fiw nfhz;l khd;GkpF Kjy;thpd; ftdj;jpy;jhd; ,e;j mDkjp kWf;fg;gLfpwjh vd;w Nfs;tp vOfpwJ vdf; Fwpg;gpl;lhh;.

epfo;r;rp xUq;fpizg;ghsh; mGgf;fh; rpj;jPf; ed;wpAiu $wpdhh;.

,Wjpahf Njrpa fPjk; Koq;f Rje;jpujpd nfhz;lhl;lk; epiwtile;jJ.


,g;gbf;F>

vk;. K`k;kJ myp [pd;dh

khepy jiyth;

Saturday, August 15, 2009

நாங்களும் இந்துக்களே !! - சுதந்திர தின வாழ்த்துக்கள்



நாங்களும் இந்துக்களே!!
இந்தியா எங்கள் தாய் நாடு!! இஸ்லாம் எங்கள் வழிபாடு!!

முஸ்லிம்களாகிய நாங்கள் யார்?

முஸ்லிம்களாகிய நாங்கள், இந்தியத் திருநாட்டில், இந்திய நாட்டவருக்குப் பிறந்த இந்தியராகிய நாங்கள் இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எம் இந்திய திருநாட்டிற்காக அன்றைய தேசவிடுதலைப் போராட்டத்திலிருந்து நேற்றைய கார்க்கில் யுத்தம் வரை எங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிர்தியாகம் செய்துள்ளோம். நாங்கள் இந்தியராக இங்குதான் பிறந்தோம் இங்குதான் வாழ்கிறோம் இங்குதான் செத்ததுமடிவோம் என்ற இலட்சியத்தில் இருக்கிறோம். நமது நாடு என்று வரும்போது இங்குள்ள ஒரு பிடி மண்ணையும் எவருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

முஸ்லிம்களாகிய எங்களைப் பார்த்து நீ இஸ்லாமியனா? அல்லது இந்தியனா? என்று வினவுவது உனக்கு அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா? என்று கேட்பதற்குச் சமம். அடிப்படையில் இப்படி கேட்பதே முரண்பாடானது. ஏனெனில் முஸ்லிமா என்ற கேள்வி ஒருவரின் மதநம்பிக்கையை பற்றி வினவுவது. இந்தியனா என்ற இரண்டாவது கேள்வி அவரின் தேசத்தைக்குறித்து வினவுவது. எனவே 'இந்திய முஸ்லீம்களா' அல்லது 'முஸ்லிம் இந்தியர்களா என்ற கேள்வியே அர்தமற்றது.

இந்தக் கேள்விக்கு ஒருபடி மேலாக பதில் சொல்கிறோம். அது, பூலோக விதியின் படி இந்துக்கள் என்னும் சொல் 'இந்துச் சமவெளியில் வாழும் மக்கள்' என்பதைக் குறிக்கும். படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை கடவுளாகவும், நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் இந்துச் சமவெளியில் வாழுகின்ற காரணத்தால் பூலோக விதியின்படி மட்டும் நாங்களும் இந்துக்களே என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம்.

ஆனாலும் நம்நாட்டு இராணுவ ரகசியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பார்ப்பன கும்பலால் வகுக்கப்பட்ட இந்துமத தத்துவங்கள் பகுத்தறிவிற்கும், உண்மைக்கும், நீதிக்கும், தர்மத்திற்கும் எதிராக
இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

கடந்த (10-08-2007) தினமணியில் 'முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது' என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது அதற்கு "இஸ்லாமிய இணையப் பேரவை" தக்க பதில் அளித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது அந்த கட்டுரையில் இருந்து.....முழு கட்டுரையையும் வாசிக்க இங்கு சொடுக்கவும்.

THANKS : WWW.IIPONLINE.ORG

Tuesday, August 11, 2009

இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள்! (நன்றி: டெஹல்கா)

இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள்! (நன்றி: டெஹல்கா)

சொங்காம் சஞ்சித் (Chongkham Sanjit) என்ற இளைஞரின் வயது 27. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மக்கள் விடுதலைப்படை என்ற இயக்கத்தில் சிறிது காலம் இருந்தார். 2000ஆவது ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டில் உடல் நலம் குன்றியதால் மக்கள் விடுதலைப்படையிலிருந்து விலகினார். எனினும் 2007ம் ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டு தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி காலையில், இம்பால் நகரின் சட்டசபை வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் க்வைரம்பான்ட் கெய்தல் கடைவீதிப்பகுதியில் மணிப்பூர் போலிஸ் கமாண்டோப் படை தீவிரவாதிகள் மீதான தேடுதல் வேட்டையை நடத்தியது. அப்போது அப்பகுதியில் சஞ்சித் இருந்துள்ளார்.



கமாண்டோ படையினர் அவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.



கமாண்டோ படையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அவர் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.



அவரிடம் ஆயுதங்கள் இருந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை.
அவர் முகம் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாக இருந்தது.



திடீரென சஞ்சித்தை வளைத்துப்பிடித்தனர் கமாண்டோ படையினர்.


அவரை அருகிலிருந்த மைமு மருந்துக்கடையினுள் இழுத்துச் சென்றனர்.


எந்த ஆயுதமும் வைத்திருந்ததற்கான முகாந்திரமற்ற நிலையில், சஞ்சித்தை சுற்றி ஆயுதபாணிகளான கமாண்டோப் படையினர் சூழ்ந்தனர். சில விநாடிகளில்...


சஞ்சித்தின் சடலம் வெளியே இழுத்து வரப்பட்டது. அவரது உடல் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டது அப்போது அவரது உடலின் அருகில் கமாண்டோ படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரபினா தேவி என்ற கர்ப்பிணி பெண்ணின் உடல் கிடந்தது.



சஞ்சித்தை விசாரிக்க முனைந்தபோது அவர் 9எம்எம் கைத்துப்பாக்கியால் சுட முயற்சி செய்ததாகவும், எனவே வேறு வழியின்றி கமாண்டை படையினரின் தற்காப்புக்காக அவர் கொல்லப்பட்டார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.


ஆனால் சஞ்சித்தின் குடும்பத்தினரோ, நோயுற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவரது உறவினருக்கு மருந்து வாங்குவதற்காகவே சஞ்சித் அப்பகுதியில் இருந்ததாகவும், அவரிடம் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.


இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர், அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அச்சம் இருப்பதால் இந்த புகைப்படத்தை வெளியிட துணியவில்லை. ஆனால் டெஹல்கா பத்திரிகையின் செய்தியாளர் தெரசா ரஹ்மானுக்கு இந்த சம்பவம் குறித்தும், புகைப்படம் குறித்தும் தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிப்பூர் கமாண்டோ படையினரின் இந்த வீரசாகசம் டெஹல்கா, 8 ஆகஸ்ட் 2009 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி நடப்பதாக கூறும் இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளே நடந்து வருகின்றன. ஆனால் இதுபோன்ற புகைப்பட ஆதாரங்கள்தான் சிக்குவதில்லை.

நன்றி : இந்திய மக்களாகிய நாம்...

Wednesday, August 5, 2009

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி அவர்களுடன் முகவைத்தமிழன் ஒரு நிகழ்ச்சியில்
காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி
இன்று காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி எனும் ஒரு காவியத்திற்கு பிரிவு உபச்சார நிமித்தமாக நாம் கூடியுள்ளோம்! அவரைப்பற்றிச் சொல்ல பல விஷயங்கள் உண்டு என்பதால் அவற்றை பகுதி பகுதியாக பிரித்துக் கூறப்போகிறேன்! முடிவில் நீங்கள் விருப்பப்பட்டால் மொத்தமாகவும் .. இன்னும் சத்தமாகவும் கூற நான் தயார் என்று கூறி நிகழ்ச்சிக்குள் செல்கிறேன்!

இவர் ஒரு கவிஞர்

ஒற்றை வரி ஹைக்கூ

கருவெடுத்து

புதுக்கவிதைகளின்

புதுமைச் சேர்த்து

மரபுக்கவிதைகளின்

மரபுமீறாமல்

இவர்தரும் அதிரடி

கவி கேட்போர்

‘சும்மா அதிருதில்ல”

எனச்சொல்வார்…


இவர் ஒரு பேச்சாளர்

வார்த்தைச் சரம் தொடுத்து – அதில்

தன் சிம்மக்குரல் கோர்த்து – கூட்டத்தை

சிறுத்தைபோல் சில கணம் பார்த்து

அவர் கர்ஜி;கும் சத்தத்தில்

கட்டுண்டு கிடக்கும் கூட்டம்

இவர் மேடையில் நடத்துவார்

பேச்சில் ஆட்டம் பாட்டம்


இவர் ஒரு ஆன்மீகவாதி

ஆன்மீகம் என்றுவிட்டால்

யார்மீதும் நாட்டமில்லாமல்

உலகின்மீது நோட்டமில்லாமல்

தன்னைச்சுற்றிக் கூட்டமில்லாமல்

தனித்திருப்பார் சிலர்!

இவர் இலக்கியம் இஸ்லாம்

இரண்டையும் இருகண்களாய் கொண்டவர்

இலக்கியம் என்று வந்துவிட்டால்

கலக்கிடுவார்

இஸ்லாம் என்று வந்துவிட்டால்

கலங்கிடுவார்


மதமென்று மதங்கொள்ளாமல்

மார்க்கமெனும் வாழ்க்கை நெறிகாட்டி

இவர் செய்யும் மார்க்கப்பிரசாரம்;!

மனம்நொந்தோருக்கும் கிடைக்கும்

வாழ்க்கைப் பிரசாதம்!

இவர் ஒரு நடிகர்

இதற்கு முன் வந்தமுகம்

தெரிந்திருந்தாலும்

இந்த முகம் உங்களுக்கு

தெரிய வாய்ப்பில்லை

விருச்சங்கள் சிலநேரம்

விதைக்குள்ளே நசுக்கப்படுவதுபோல்

இந்தத் திறன் இவர்தம்

பள்ளி நாட்களுடன்

தள்ளிப் போனது

பச்சையப்பன் கல்லூரியில்

இவர் நடித்த நாடகங்களின் காட்சிகள்

அவர்தம் நடிப்புத்திறனுக்கான மாட்சிகள்!


இவர் ஒரு பழம்பெரும்கவிஞர்

பலம்பெற்ற கவிஞர் - அவ்வப்போது

பழம்பெற்ற கவிஞர்

புலவர் நாராயணனால்

நடத்தப்பட்ட

மகிழ்நன் தமிழ்க்கழகத்தினரால்

நிகழ்த்தப்பட்ட பழங்கள் கவியரங்கி;ல்

இவர் பாடிய ‘மாதுளம்பழம்’ கவிதை

இவர் இலக்கிய வாழ்விற்கு ஆனது விதை!


எத்தனையோ திறமைகள் இவருள்

அடங்கியிருந்தாலும் - அவையில்

அடங்கியிருத்தல் இவர்

தனித்திறன்..

அதற்கேற்றார் போல்

வேலூர் கவியரங்கில்

இவர்பாடிய அவையடக்கக் கவிதை

இவருக்கு சபையடங்கா கைத்தட்டை

பெற்றுத்தந்தது!

இவர்தம் கவித்திறனை விற்றுத்தந்தது1


இவர் ஒரு திறனாய்வாளர்;

மற்றவர் இவர் திறன் ஆய்வு

செய்து கொண்டிருந்த வேளையில்

மு.மேத்தாவின்

கண்ணீர்ப+க்களை இவர்செய்த

திறனாய்வு

இவர் திறன் மேன்படச்

செய்த ஆய்வு

என்றுமே இல்லை இவர்தம்

திறன் ஓய்வு

இவர் ஒரு கவிக்கடல்

இவர் ஒரு கவிக்கடல் - ஆம்

அரபுமொழி என்று விட்டால

இவர் ஒரு அரபிக்கடல்!

இந்தி உருது என வந்துவிட்டால்

இவர் ஒரு இந்து மகா சமுத்திரம்

முத்தமிழை முகர்ந்து விட்டால்

முக்கடல் சங்கமம்

கவி எழுத கங்கணம் கட்டிவிட்டால்

இவர் ஒரு செங்கடல்

இதை அன்றே அறிந்தோ

என்னவோ சென்னையில்

கவிஞர் பொன்னடியான்

நடத்திய கடற்கரை கவியரங்கில்

இந்த கவிக்கடலின் பங்கு ஏராளம்

கவிதைகளோ தாராளம்!


இவருக்கு வெடிகுண்டு

வைத்த அனுபவமும் உண்டு

எவன் எப்படி போனால் என்னவென்று

வெறித்தனமாய் வைக்கப்படும்

வீணர்களின் வெடியல்ல இது

எம்மதமும் சம்மதம் என வேற்றுமையை அகற்ற

வைக்கப்பட்ட கவிதை வெடிகுண்டு இது..

ஆம்.. சென்னை இஸ்லாமியக் கவியரங்கில்

வேற்றுமைக்கு வெடிவைப்போம்

என்ற தலைப்பில் இவர் பாடிய கணங்கள்

சமூக அக்கறை கொண்டோரின்

மறக்க இயலா தினங்கள்!


25 வருடங்கள் இலக்கிய உலகைவிட்டு ஒதுங்கியிருந்தார்! சில காலம் பதுங்கியிருந்தார்! புலி பதுங்கல் பாய்வதற்கே! பாயும் காலம் வந்தது.. காவிரிமைந்தனின் பழக்கம் தந்தது.. கிரசண்ட் டி.வி.யின் முதல் சந்திப்பு அந்தப் பிறை தொலைக்காட்சியின் சந்திப்பிற்குப்பிறகு அவர்தம் இலக்கிய ஆர்வ பிறை முழுநிலவாக வளர ஆரம்பித்தது! நிலாவண்ணனாக ஜொலி ஜொலித்தது!


அப்படி புதைந்த சந்திரனை

தூசுதட்டி தூக்கிய நிறுத்திய பெருமை

நம் காவிரிமைந்தனை; சாரும்..

அவரை அப்துல் ரவ+ப் சார்பாகவும் சிலநொடிகள் கரகோசத்தினால்

சுரம் சேருங்கள்..

இங்கு காவிரிமைந்தனைப் பற்றி ஓரிருவரிகள் கூறியாக வேண்டும் - சில பேர் கவிதைகளை உருவாக்குகிறார்கள். வெகுசிலர் அந்தக் கவிஞர்களை உருவாக்குகிறார்கள். அந்த வெகுசிலரில் ஒருவர் நம் காவிரிமைந்தன். ஆவர் முழுநேர கவிஞர் ஆனாலும் சிலநேரம் அவர் ஒருதொல் பொருள் ஆராய்ச்சியாளர்! அவர் ஒரு அகழ்வாரர்ய்ச்சியாளர்! அதிகம் புகழ்வதாய் நினைத்துவிட வேண்டாம்! கவிதைக்கு பொய்யழகு என்றாலும் என் கவிதையில் நான் அழகு சேர்க்க முயற்சிப்பதில்லை. வானலை வளர்தமிழின் பெரும்பாலோனாரில் யாரிடம் கேட்டாலும் என்னை, எனது திறமையைக் கண்டுபிடித்தவர் காவிரிமைந்தன் .. எனது திறன்களை என்னுள் தோண்டியெடுத்தவர் காவிரிமைந்தன் என்பார்கள்! மொத்தத்தில் இவர் வானலை வளர்தமிழின் ஆராய்ச்சியாளர்!


அதன்பின் ரவ+ஃபின் வளர்ச்சிக்கு அவர்தம் கவிதை எழுத்திற்கு அவர் எண்ண ஓட்டத்திற்கு எந்த எழுத்தாணியும் ஈடுகொடுக்கவில்ல என்பது வேறு விஷயம்!


அதன்பின் வானலை வளர்தமிழில் அவர் பாடிய கவி வரிகள்! தேனலை நினைவுகளுடன் கூடிய கவிச்சரங்கள்!


ரவ+ஃப் அவர்கள் கவிபாடும் வானலை வளர்தமிழில் நாமும் பாடுவதே பெருமை என்போர் இங்கே ஏராளம்!

இவரின் மறுபக்கத்தை அறிய முயன்றால் நமக்குள் ஒரு பயம் வந்து விடுகிறது!

இவரா.. இவருடனா நாம் சக நண்பராக இத்தனை நாள் பழகிவந்தோம் .. ஆச்சரியத்தில் மூழ்கிப்போகிறேன்..

திருக்குர் ஆன் .. இஸ்லாமியர்களின் புனித நூல்..

அதன் தமிழ் மொழி பெயர்ப்பில் இவரின் பங்கு ஏராளம்!

மொழி பெயர்ப்புக் குழுவில் இவரும் ஒருவர்.. அதன் ஒருங்கிணப்பாளர்

புகாரி – ஹதீஸின் 6 பாகங்கள் மொழிபெயர்ப்பு

மொழி பெயர்ப்புக் குழுவில் இவரும் ஒருவர்.. அதன் ஒருங்கிணப்பாளர் -

நபி வரலாறு – பெரியவர்கள், சிறியவர்கள் இருவருக்குமாக தனித்தனியாக..

இப்படி இவரின் பின்னணியில்

பல முன்னணிப் பதவிகள் உண்டு..


இன்று வரை இவர் எழுதப்படாத கவிதை

விடைகாண இயலா வினா..

இவர் இங்கு தொட்டுச்சென்ற இலக்கியப் பயணத்தை

நாட்டில் சென்று தொடர்ந்து இன்னும் பல வெற்றிகளைப் பெற

எல்லாம் வல்லோனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்!


RAJAKHAN ARCHITECT
dateTue, Aug 4, 2009 at 11:42 AM
ABDUL RAVOOF - KEEZHAI RAZA WRITE UP (PRESENTED ON THE STAGE)

நன்றி : முதுவை ஹிதாயத்