Thursday, April 30, 2009
பாசிசத்திற்கு எதிரான முஸ்லிமல்லாத கட்சிகளுக்கு வாக்களியுங்கள்
குறிப்பாக தமுமுக - மமக என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றது.
திமுக கூட்டணியைப் பொறுத்த மட்டில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அறிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. குறிப்பாகச் சொல்வதென்றால் முஸ்லிம்களுக்கு என மூன்றரைச் சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம்களுக்கு குறிப்பிடும்படியான ஒன்றும் செய்யாமலிருந்தாலும் தேசிய அளவில் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு மாற்றமான ஒரு வலுவான அணியாக உள்ளது.
அதே வேளையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான பாமக ஆகிய கட்சிகள் வெளிப்படையாக இல்லாமல் ரகசிய ஒப்பந்தத்தின் வாயிலாக தேர்தலுக்குப் பின்னர் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியும் கூட்டணி என்ற பெயரில் கார்த்திக் போன்றவர்களுடன் பம்மாத்து வேலை செய்துவருகின்றது.
அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியோடு கூட்டணி சேராமல் இருப்பது எதற்காகவென்றால், கணிசமான தமிழ் முஸ்லிம்களுடைய ஓட்டுக்களையும் பெற்றுவிட்ட பின்னர் ஆட்சியில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்ற ரகசிய ஒப்பந்தம் ஆகும்.
அதன் அடிப்படையில் மதவெறி பிடித்த கட்சி ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து முஸ்லிம்களையும் அது போன்று கிறிஸ்தவர்களையும் துவம்சம் செய்து நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்திய காட்சிகள் இன்றும் தொடரவே செய்கின்றது என்றிருக்கையில் இந்த பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவளித்து தேசிய அளவில் அரியணை ஏற்றினால் அதன் பின்னர் அவர்களுடைய கோர தாண்டவத்தைச் சொல்லவா வேண்டும்.
ஆக தேசிய அளவிலான பயங்கரவாதம் தடுத்து நிறுத்தப்படவும் முஸ்லிம் - கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு ஓரளவு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்துவதற்கான மிகச்சரியான ஆயுதம் இந்த தேர்தலேயாகும். இந்த தேர்தல் மூலம் கிடைக்கும் வாய்ப்பை கை நழுவ விட்டுவிட்டு (ஒருவேளை) பாரதீய ஜனதாவின் ஆட்சியில் கோர்ட் கேஸ் என்று அலையலாம் என்பதை ஓரளவு உணர்வுள்ள ஒரு முட்டாள் கூட ஒப்புக்கொள்ளமாட்டான். முன்னர் ஆறு ஆண்டுகள் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது நாட்டில் பெரிய அளவிலான கலவரங்கள் நடக்காமல் இருந்தது கூட அவர்களுடைய கைங்கர்யமும் வெள்ளோட்டமுமே காரணமாக இருந்தது. எனினும் தற்போது பாஜாகாவின் செயல்பாடுகள் வெளிப்படையான பயங்கரவாதம் என்பதை குஜராத் மற்றும் ஒரிசா மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
எனவே மதவெறி பிடித்த பாரதீய ஜனதா எனும் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருக்கும் கூட்டணி என்பது திமுக தலைமையிலான கூட்டணியே ஆகும். நேற்றுவரை திமுகவை வரம்பின்றி புகழ்ந்து தள்ளிவிட்டு இன்று திமுக தங்களுக்கு இடம் தராத காரணத்தால் அந்த கூட்டணியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் மமகாவின் கூற்றையும் இங்கு கவனிக்கவேண்டியுள்ளது.
தங்களுக்கு வாரியப்பதவி கிடைத்ததால் திமுகாவை ஆதரித்த இவர்கள் திமுகவினால் கழற்றிவிடப்பட்டபோது தங்களால் மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்ட அதிமுகவினரிடமும் இரண்டு தொகுதிகளுக்காக அலைந்தனர். அங்கும் சரியான சவுக்கடி கிடைத்ததும் தற்போது சமுதாயத்திற்கு பாடுபடும் முஸ்லிம் கட்சி என்று ஊர் ஊராக புலம்புகின்றனர். தாம் ஏற்கனவே கண்ணை மூடி ஆதரித்த திமுக வை (சீட் கிடைக்காத ஒரே காரணத்தால்) கன்னாபின்னாவெனத் திட்டித் தீர்க்கின்றனர். தாங்களும் சில தொகுதிகளில் போட்டியிடவும் செய்கின்றனர். இவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் இவர்கள் யாரை ஆதரிப்பார்கள்? பாப்பாத்தி என்று இவர்கள் கூறிய ஜெயலலிதாவையா? அல்லது இட ஒதுக்கீட்டுக்காக இவர்களால் நன்றியறிவிப்பு மாநாடு நடத்தப்பட்ட கருணாநிதியின் கூட்டணிக்கா என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
மேலும் தேசிய அளவில் ஆட்சியை நிர்ணயிக்கும் தமிழகத்தின் இரண்டு கூட்டணிகளில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணி ஒருபக்கமும் தேர்தலுக்குப்பின் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கக் காத்திருக்கும் அதிமுக - பாமக கூட்டணி மறு பக்கமும் வாக்கு சேகரிக்கும் போது முஸ்லிம் கட்சி என்று கூறியே முஸ்லிம்களின் பொது எதிரியான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்காக ஓட்டுக்களை பிரிக்க நினைக்கும் மமகவின் நிலைபாட்டை நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இது மமக வுக்கும் நன்றாகத் தெரியும்.
குறிப்பாக இவர்கள் கூட்டணி வைத்துள்ள (புதிய தமிழகம்) கிருஷ்ணசாமிக்காக தென்காசி தொகுதியில் பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமாரும் கார்த்திக்கும் பிரச்சாரம் செய்யப்போவதாக வரக்கூடிய செய்திகளும் கைமாறாக அவர்கள் போட்டியிடும் தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடாது என்ற கிருஷ்ணசாமியின் அறிக்கையும் தௌ;ளத் தெளிவாக பாஜகவை ஆதரிக்கும் ஒரு நடவடிக்கை என்றால் மறுக்க இயலாது.
ஆனாலும் தங்களது மானத்தைக் காக்க சமுதாயத்தை அடகு வைத்தாவது காரியம் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சமுதாயம் சரியான பாடத்தை புகட்டித்தான் ஆகவேண்டும். அது முஸ்லிம்களுக்கு வேட்டு வைக்கும் மமக போன்ற முஸ்லிம் கட்சியாக இருந்தாலும் சரியே. அதை விட பாசிசத்திற்கு எதிரான முஸ்லிமல்லாத கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் லட்சம் மடங்குகள் மேலானவை என்பதை தமிழக முஸ்லிம்கள் உணர்ந்து வாக்களிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
எம். எம். அவுலியா
Wednesday, April 29, 2009
பா.ஜ.க சட்டத்தை மதிக்குமானால்..?! மோடியை பதவி விலக்க வேண்டும் -- பாப்புலர் ஃப்ரண்ட்
Saturday, April 25, 2009
கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் -- பாப்புலர் ப்ரண்ட் முடிவு
நாடு முழுவதும் "பள்ளி செல்வோம்" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கோள்ளப்படும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு
முடிவு செய்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களை போல் இந்த வருடமும் கல்வி வழிகாட்டி முகாம்களும், விழிப்புணர்வு பிரச்சரங்களும் மேற்கோள்ளப்படும் என தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளது..
இந்த செயற்குழு கூட்டத்தில் சேர்மன் அப்துர்ரஹ்மான், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் திரு. முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்
முழுமையான செய்திக்கு இங்கே அழுத்தவும்
http://popularfrontindia.org/home/NEWS/more_news/Popular%20Front%20launching%20school%20chalo%20campaign.html
இலங்கை தமிழர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் -- பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

இந்திய தேசிய மக்கள் கட்சி தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு
பத்திரிகையாளர் சந்திப்பில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. ஜாஃபர் ஆகியோர்.
கூட்டத்தின் முடிவில் பெரும்பான்மை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்கேற்ப இந்த 15 வது மக்களவைத் தேர்தலில் சமுதாய நலன் கருதியும், மதவாத கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காகவும், சிறுபான்மை சமுதாயத்திற்கு சமூக நீதி கிடைத்திட வேண்டியும் திராவிட முன்னேற்ற கழகம் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு ஆதரவளித்து அவர்களை வெற்றி பெறச் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இப்பகுதி மக்களின் வாழ்வாதார திட்டமான சேது சமுததிர திட்டம் தடையின்றி நிறைவேற்றிடவும், கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பகுதி மக்களின் குடிநீர் தேவைகள் நிறைவேற்றப்படவும், மீனவர்களின் பாதுகாப்புக்காவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் நடிகர் ரி்த்தீஸ் என்ற சிவக்குமாரை ஆதரித்து அவரது வெற்றிக்கு உழைப்பதெனெ முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தின் நிறைவில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவை பாலா அவர்கள் நன்றி கூறினார்.
இப்படிக்கு
வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்
மாவட்ட தலைவர்
இராமநாதபுரம்
தொலைபேசி : 9894262100
நன்றி : இந்திய தேசிய மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ இணயைத்தளம்
Friday, April 24, 2009
மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் வேட்புமனு தாக்கல்
மயிலாடுதுறை, ஏப். 21: மயிலாடு துறை மக்களவைத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம். எச்.ஜவாஹிருல்லாஹ் செவ்வாய்க்கிழமை வேட் பு மனு தாக்கல் செய்தார்.
ம னித நேய மக்கள் கட் சியி ன் மாநில ஒருங்கிணைப்பாளர் எம். எச்.ஜவாஹி ருல்லாஹ், மயிலாடுதுறை சார் ஆட்சி யர் அஜய்யாதவி டம் செவ்வாய்க் கி ழமை தனது வேட் பு மனுவைத் தாக்கல் செய்தார்.
சொத்து ம தி ப் பு : அசையும், அசையா சொத்துகள், நகைகள், பணம் கை யி ருப் பு உள்ளிட்டவை என ரூ. 77 லட் சம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பி ட்டுள்ளார்.
மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் ஹைதர் அலி வேட்புமனு தாக்கல்.

Thursday, April 23, 2009
ராமதாஸுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்!
| |
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்தபோது, "இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் ஐ.எஸ்.ஐ., உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும், அவர்களால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் குறிப்பிட்டுள்ளார். இது, தமிழக முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இலங்கை ராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவதைப் போல், விடுதலைப் புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பல மடங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் முஸ்லிம் பகுதிகளில் இரவு 12 மணிக்கு விடுதலைப் புலிகள் துப்பாக்கியுடன் புகுந்து, அங்குள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி, 24 மணி நேர அவகாசத்தில், வாழ்ந்த இடங்களை விட்டு, உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்கத் தயாராக இல்லை. இவ்வாறு, காயல் மகபூப் அறிக்கையில் தெரிவித்துள்ளார். |
Wednesday, April 22, 2009
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா - 37 இடங்களில் தி.மு.க விற்கு ஆதரவு

மனித நேய மக்கள் கட்சிக்கு 3 இடங்களில் ஆதரவு
தி.மு.க கூட்டணிக்கு 37 இடங்களில் ஆதரவு
15 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா தெறிவிக்கையில் :
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் 60 ஆண்டு காலமாக அரசியல் அதிகாரத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது பட்டவர்த்தனமான உண்மை. இந்தியாவில் 13.4% வாழும் முஸ்லிம்கள் சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவாத்தில் தனது சதவீதத்தில் பாதியை கூட் பெறவில்லை.
அரசியல் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்கள், தலி்த்துகள், இதர சிறுபானடமையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் ரீதியில் சக்திப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் PFI செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இதற்கான முயற்சியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா எடுத்து வரும் இந்த தருனத்தில்தான் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த மக்களவை தேர்தலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நேரடியாக போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் சம்பந்தமான முக்கிய நிலைப்பாட்டை திர்மானித்தள்ளது.
தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் முயற்சியாக மனித நேய மக்கள் கட்சி (MMK) தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது. இதனை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. எனவே மயிலாடுதுறை, மததிய சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதவாத ஃபாசிஸக் கட்சிகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் கடந்த இரன்டரை வருட திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி , ஏவேலை வாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு, உலமா நல வாரியம் அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டும் , கிலோ 1 ரூபாய் அரிசி, ஏழைகளுக்கு எரிவாயு இனைப்புடன் இலவச கேஸ் அடுப்பு, தமிழகத்திற்கு பயனளிக்கும் சேது கால்வாய் திட்டத்திற்கான உறுதியான முயற்சி போன்ற மக்கள் நலத்திட்டங்களை கருத்தில் கொண்டும் புதுவை உட்பட மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை கொண்ட கூட்டணிக்கு ஆதரவிளத்து வெற்றி பெறச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்து.
பாரதீய ஜனதா கட்சி ஹிந்துத்துவா என்னும் அரசியல் செயல்திட்டத்துடன் செயல்படும் ஓர் அரசியல் கட்சி. ஹிந்துத்துவா என்னும் இந்த செயல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமே எதிரானதாகும். இதற்கு பா.ஜ.க நாடு முழுவதும் நடத்திய முஸ்லிம், தலித், கிருத்துவர்களுக்கு எதிரான கலவரங்களே சாட்சி. கடந்த கால பா.ஜ.க வின் ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் ஓர் இருன்ட காலமாகும்.
எனவே பா.ஜ.க வை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் புறக்கணித்தது போல் ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கும் வகையில் பாரதீய ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா களமிறங்கி பா.ஜ.க வுக்கு எதிராக களப்பணியாற்றி அதனை படுதோல்வியடையச் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாலர் ஷேக் முகம்மது தெஹ்லான் பாகவி, மாறிலத் துணைத் தலைவர் ஏ.எஸ் இஸ்மாயீல் , மாநில பொதுச் செயலாளர் ஏ. ஃபக்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
3 தொகுதிகளில் ம.ம.க., 37 தொகுதிகளில் தி.மு.க வுக்கு ஆதரவு -- பாப்புலர் ப்ரண்ட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
தென் மாநிலங்களில் செயல்பட்டு வந்த தமிழகத்தின் மனித நீதி பாசறை, கேரளாவின் நேஷனல் டெவலப்மன்ட், கர்நாடக ஃபோரம் ஃபார் டிகினிட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து 2007 ல் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசிய அமைப்பை உருவாக்கின..
பின்னர் நேர்மரை அரசியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கேரளாவில் கடந்த பிப்ரவரி 2009 இல் லட்சக்கணக்கான மக்கள் பங்கெற்ற ஒரு மாபெரும் தேசிய அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது..
இந்த மாநாட்டில் ஆந்திரவின் ஆஸ்ஸோசியேசன் ஆஃப் சோசியல் ஜஸ்திஸ், கோவாவின் சிடிசன்ஸ் ஃபோரம், ராஜஸ்தானின் கம்யுனிடி சோசியல் அண்ட் எஜுகேசனல் ஸொஸைட்டி, மேற்கு வங்காளத்தின் நாகரிக் அதிகார் சுரக்ஷா ஸமிதி, மணிபூரின் லில்லாங் சோசியல் ஃபோரம் ஆகிய 5 மாநில அமைப்புகளும் தங்களை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவில் தங்களை இணைத்துகொண்ட பின் தற்போது 8 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் செயல்பட்டு வருகிறது..
தற்போது ஒடுக்கப்பட்ட பிற்படூத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்காக தேசிய அளவில் ஒரு புதியதோர் அரசியல் கட்சியினை பாப்புலர் ப்ரண்ட் உருவாக்கி வருகிறது..
இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தலில் பாப்புலர் ப்ரண்ட் தேசிய அளவில் எந்த ஒரு நிலைப்பாடையும் எடுக்கவில்லை எனவும் அந்தந்த மாநில நிலவரத்தை பொறுத்து மாநில நிர்வாகம் முடிவு எடுக்கும் எனவும் முன்பே செய்தி வெளியிட்திருந்தது..
அதன் அடிப்படையில் கேரளாவில் 18 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணியையும் 2 தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணியையும் ஆதரிப்பதாக கேரள மாநில பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்
தலைவர் நஸ்ருதின் செய்தி வெளியிட்டுள்ளார்..
தமிழகத்தில் கூட்டணிகள் முடிவாகி இருக்கும் நிலையில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிலைப்பாடு இன்னும் சில நாட்களில் தெரியவரும்..
தமிழகத்தில் மத்திய சென்னை, மயிலாடுதுறை, பொல்லாச்சி ஆகிய 3 தொகுதிகளில் ம.ம.க வுக்கும்மற்ற 37 தொகுதிகளில் தி.மு.க. வுக்கும் ஆதரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான பத்திரிக்கை செய்தி ..


Tuesday, April 21, 2009
இ.தே.ம.க பெயரில் தாக்கல் செய்ய முற்ப்பட்ட வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு
வேட்புமனு தாக்கல் செய்ய 3ம் நாளான நேற்று இந்திய தேசிய மக்கள் கட்சி சார்பில் அதன் ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த ஜஹாங்கீர்(40) என் பவர் வேட்பு மனு செய்ய தனது கட்சியினருடன் கலெக்டர் அலுவலகம் வந் தார். வேட்பு மனு தாக்கல் செய்ய முன்மொழிய வேண் டியவர்கள் யாரும் இல்லாததாலும், இ.தே.ம.க வின் அதிகாரப்பூர்வ கடிதம் இல்லாததாலும் அவரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது குறித்து கருத்து தெறிவித்த குத்பதீன் ஐபக் என்பவர், இது அதிகாரிகளின் சதி, நாங்கள் மீண்டும் முயற்சிப்போம் என்று கூறினார்.
முன்னதாக, வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது விதிமுறைகளை மீறி குத்பதீன் ஐபக் மற்றும் டாக்டர் ஃபக்ருதீன் , ஜஹாங்கீர் ஆகியோர் ஆட்சியர் அலுவலக பிரதான வாசல் வரை விதிமுறைகளை மீறி வாகனத்தில் சென்றனர் ஆனால் யதார்த்தமாக எஸ்.பி செந்தில் வேலனின் வாகனம் வருவதை கண்ட குத்புதீன் ஐபக் வந்த வாகனத்தின் டிரைவர் வண்டியை நடு ரோட்டில் நிப்பாட்டி விட்டு ஓடி விட்டார். அதனால் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் கேனிக்கரை எஸ்.ஐ யிடம் எஸ்.பி என்ன வாணத்தில் இருந்து குதித்து வந்தாரா? என்று கேட்டுள்ளார்கள். இதனால் குத்புதீன் ஐபக் வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, குண்டுக்கட்டாக குத்பதீன் ஐபக் மற்றும் டாக்டர் ஃபக்ருதீன் , ஜஹாங்கீர் ஆகியோரை காவல்துறையினர் வாகனத்தில் இருந்து வெளியேற்றி காவல்நிலையத்தில் காவலில் வைத்திருந்து பிறகு எச்சரிக்கை செய்து விடுவித்த சம்பவமும் நடந்தது.
இ.தே.ம.க பெயரில் தாக்கல் செய்ய முற்ப்பட்ட வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு
வேட்புமனு தாக்கல் செய்ய 3ம் நாளான நேற்று இந்திய தேசிய மக்கள் கட்சி சார்பில் அதன் ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த ஜஹாங்கீர்(40) என் பவர் வேட்பு மனு செய்ய தனது கட்சியினருடன் கலெக்டர் அலுவலகம் வந் தார். வேட்பு மனு தாக்கல் செய்ய முன்மொழிய வேண் டியவர்கள் யாரும் இல்லாததாலும், இ.தே.ம.க வின் அதிகாரப்பூர்வ கடிதம் இல்லாததாலும் அவரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது குறித்து கருத்து தெறிவித்த குத்பதீன் ஐபக் என்பவர், இது அதிகாரிகளின் சதி, நாங்கள் மீண்டும் முயற்சிப்போம் என்று கூறினார்.
முன்னதாக, வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது விதிமுறைகளை மீறி குத்பதீன் ஐபக் மற்றும் டாக்டர் ஃபக்ருதீன் , ஜஹாங்கீர் ஆகியோர் ஆட்சியர் அலுவலக பிரதான வாசல் வரை விதிமுறைகளை மீறி வாகனத்தில் சென்றனர் ஆனால் யதார்த்தமாக எஸ்.பி செந்தில் வேலனின் வாகனம் வருவதை கண்ட குத்புதீன் ஐபக் வந்த வாகனத்தின் டிரைவர் வண்டியை நடு ரோட்டில் நிப்பாட்டி விட்டு ஓடி விட்டார். அதனால் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் கேனிக்கரை எஸ்.ஐ யிடம் எஸ்.பி என்ன வாணத்தில் இருந்து குதித்து வந்தாரா? என்று கேட்டுள்ளார்கள். இதனால் குத்புதீன் ஐபக் வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, குண்டுக்கட்டாக குத்பதீன் ஐபக் மற்றும் டாக்டர் ஃபக்ருதீன் , ஜஹாங்கீர் ஆகியோரை காவல்துறையினர் வாகனத்தில் இருந்து வெளியேற்றி காவல்நிலையத்தில் காவலில் வைத்திருந்து பிறகு எச்சரிக்கை செய்து விடுவித்த சம்பவமும் நடந்தது.
Monday, April 20, 2009
2 வசனங்கள் நீக்கப்பட்ட குர்ஆன் வெளியீடு - தடுத்து நிறுத்தியது சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை

இந்த அயோக்கியனின் அமைப்பான "அஹ்லுல் குர்ஆன்" அமைப்பினர் தமிழகத்திலும் உள்ளனர் அவர்களின் தலைமை அலுவலகம் சென்னை மின்ட் பகுதியில் உள்ளது. அவர்கள் நேற்று சென்னையில் ஒரு சுவரொட்டியை ஒட்டியிருந்தனர் அந்த சுவரொட்டியில் கூறப்பட்டிருந்ததாவது :
கடவுளின் பெயரால் அருளாளர் அன்பாளர் ஒரு சரித்திர குற்றம் அம்பலமாகிறுது !!
உலகம் முழுவதும் பரபரப்பூட்டிய இறைத்தூது?
முழு வடிவில் தமிழகத்தில் முதல் முறையாக குரானில் சோக்கப்பட்ட இரு வசனங்கள் ஆதாரப்பூர்வமாக நீக்கப்பட்டு குரானை துர்ய்மை படுத்தி சததியத்தை எடுத்தரைத்ததால் இறை மறுப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மெய்ப்பிக்கும் தூதர் டாக்டர் ரசாது கலீபா பி.எச்.டி அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட குரானின் தமிழாக்கம்.
(குர்ஆன் இறுதி வேதம் வெளியீட்டு விழா)
19.4.2009 நேரம் மாலை 5.30 மி.
பாவாணர் கலையரங்கம்
அனைவரும் வருக ஆத்மார்த்தி பெறுக
அஹ்லுல் குரான்
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் பொதுச்செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களை உடனடியாக தொடர்பு கொண்டனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையினர் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். திரு. மேலை நாசர், திரு. ஜமாலி ஆகியோர் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டு இந்நிகழ்ச்சியை தடை செய்து உடனடியாக அந்த புத்தகங்களை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரினர்.
அதன் பின்னர் சென்னையில் "அஹ்லுல் குர்ஆன்" அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் முஸ்லிம்களை திரட்டி சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை சார்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துற "அஹ்லுல் குர்ஆன்" அமைப்பினரின் அலுவலகததில் அதிரடியாக புகுந்து அங்கு விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த சரச்சைக்குறிய நூல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Saturday, April 18, 2009
முகவை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
மேடையில் சலிமுல்லா கான், தஸ்பீக் அலி, வாணி சித்தீன், ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், கோவை செய்யது
இராமநாதபுரம் ஏப்ரல் 18, மனித நேய மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் சமூக ஜனநாயக முன்னணியின் செயல் விரர்கள் கூட்டம் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு. ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். சமூக ஜனநாயக முன்னணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக், மாவட்ட பொருளாளர் திரு. வாணி சித்தீக், திரு. பாக்கர், திரு. தஸ்பீக் அலி, புதிய தமிழகத்தின் மாவட்ட செயலாளர் திரு. காளிதாஸ், இந்திய தேசிய லீக் நிர்வாகிகள், கோவை செய்யது உட்பட பலர் பேசினார்கள்.
ஒ.யூ.ரஹ்மத்துல்லாஹ், கோவை செய்யது பிரச்சார வாகனத்தில்
அதன் பின்னர் மதியம் சுமார் 1.00 மணியளவில் இராமநாதபுரம் அரன்மனை முன்பாக வேட்பாளர் அறிமுக கூடடம் நடந்தது. கோவை செய்யது அவர்கள் ஏன் மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் பின்னர் வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்கள் உரையாற்றினார்கள் பின்னர் அங்கிருந்து ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் பின்தொடர வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு 100 மீட்டர் முன்பே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் போன்ற தேர்தல் கமிசனின் விதிமுறைக் அமலில் உள்ளதால் தொண்டர்கள் அனைவரும் தூரத்தில் நிற்க கோவை செய்யது தலைமையில் கூட்டணியை சேர்ந்த 5 நர்கள் மட்டும் வேட்பாளர் சலிமுல்லா கான் உடன் சென்றனர்.
வேட்பாளர் சலிமுல்லாஹ் கான் தனது ஆதரவாளர்களுடன்
வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வளமாக தமுமுக வினர்
சமூக ஜனநாயக முன்னணியின் இந்த வேட்பு மனு தாக்கல் நிகழச்சியில் ஆயிரக்கணக்கில் புதிய தமிழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உட்பட பொதுவான பல முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். அத்துடன் பல்வேறு ஜமாத் நிர்வாகிகளும் வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வந்திருந்தனர்.
அரன்மனை முன்பாக கூட்டணியினர் மத்தியில் உரையாற்றும் கோவை செய்யது
முன்னதாக செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
முகவையில் தி.மு.க மாநாடு - மு.க. அழகிரி - ரித்தீஸீக்கு பிரச்சாரம்
இராமநாதபுரம், ஏப்ரல் 17 : ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள திடலில் மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது. தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்கள்.அத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் இந்திய யுனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் சார்பில் இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ திரு. ஹஸன் அலி அவர்களும், முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட தலைவர் திரு. செளக்கத் அலி அவர்களும், விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட தலைவரும், தி.மு.க மாவட்ட செயலாளர் திரு. ஆர்.ஜி.ஆர், மாநில இளைஞர் அணி திரு பெருநாழி போஸ், தமிழக் குடிசை மாற்றுத்துறை அமைச்சர் திரு. சுப. தங்கவேலன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் திரு. இரவிச்சந்திர ராமவண்ணி, இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. பவாணி ராஜேந்திரன் உட்பட பலரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்களுக்கு ஆதரவாக அனைவரும் பேசினர். பின்னர் பேசி திரு. மு.க அழகிரி அவர்கள் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டியது முகவை மக்களின் கடமை எனவும், இராமநாதபுரம் தொகுதி உட்பட தமிழகத்ின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெரும் எனவும் கூறினார். மாநாட்டில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஆயிரக்கணக்கான வாகனங்களால் முகவை நகரே நெரிசலில் சிக்கி தினறியது.
Friday, April 17, 2009
நம் தலைவர்கள் ???
என் அன்புக்குறிய சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்,
இறைவனைப் புகழ்ந்தவனாக துவங்குகிறேன்..
ஒரு சாதாரண தமிழ் நாட்டின் முஸ்லீம் குடிமகனாக தற்போது நம் சமுதாயத்தில் உள்ள ஒற்றுமை நிலை குறித்து என் மனதில் தோன்றுபவைகளை கொட்டி வைத்திருக்கிறேன். தவறுகள் இருப்பின் இறையோனுக்காய் மனம் பொறுக்கவும்.
நம்முடைய சங்கங்கள்:
இந்த தலைவர்களும், அவர்களுடைய சங்கங்களும் நம் சமுதாயத்திற்காக எதையாவது செய்யாதா என்ற ஏக்கத்தில், எதிர் காலம் எம் சமுதாயத்திற்கு எதையாவது ஒரு நல்ல பாகாப்புத் தன்மையை அளிக்காதா என்ற நோக்கில் நானும் ஒவ்வொரு நாளும் இந்த அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் கூர்ந்து நோக்கி கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். என்னால் முடிந்த அளவில் உடலாளும், உழைப்பாலும், பணத்தாலும் ஒரு சாதாரண தொண்டனாக இந்த சங்கங்களுக்கு, அமைப்புகளுக்கும் உழைத்தும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை தந்தும் என்னுடைய கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் இந்த கழகங்களுக்காக நன்கொடையும், நிதியுதவியும் செய்து அவர்களின் புத்தக, ஆடியோ, வீடியோ, சி.டி போன்றவைகளையும் நானும் வாங்கியும், பிறருக்கு விற்பனை செய்தும் அதன் மூலமாகவும் இந்த சங்கங்களின், அமைப்புகளின் நிதி நிலையை கூட்டி இருக்கிறேன். ஆனால் இந்த சங்கங்களும், தலைவர்களும் நமக்காக இதுவரை என்ன சாதித்திருக்கிறார்கள் என்று ஒரு தொலைநோக்கு பார்வையில் பார்த்தால் எஞ்சி நிற்பது பூஜ்யம்தான்;. இந்த சங்கங்களையும், அமைப்புகளையும் அதன் தலைவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் இந்த அமைப்புகளுக்குள் நடக்கும் கோஷ்டி பூசல்கள் சண்டைகளையும் நினைத்தால் சலிப்பும், வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. நம்முடைய ஓற்றுமை மற்றும் நம் சமூக மக்களின் பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
இந்த சங்கங்கள் அமைப்புகள் என்ன செய்தார்கள் நமக்காக:
நம் சமுதாயத்திற்காக இந்த அமைப்புகள் ஓன்றுமே செய்யவில்லை பூஜ்யம்தான் என்று நாம் சொல்லும் போது, தான் என்ற கர்வம் பிடித்து உழலும், தாம் சொல்வதே சிறந்தது, தாம் நடத்தும் அமைப்பே சிறந்தது என்று மார்தட்டிக் கொள்ளும் நம் தலைவர்களுக்கு கோபம் வரலாம். சிலவைகளை செய்கிறார்கள். அவைகளை பற்றியும் காண்போம்.
கூட்டங்கள், மாநாடுகள் போடுகிறார்கள்:
நாங்கள் கூட்டங்கள் போடுகிறோம், மாநாடு போடுகிறோம் என்று சொல்வார்கள் அதில் கூட மார்க்க அறிஞர்களைப் போல யாரும் உரைகளை நிகழ்த்துவதில்லை. மற்ற அமைப்பினரை சாடுவதற்காகத்தான் அதிக நேரம் வாய் கிழிய பேசுகிறார்கள். மற்றவர்களை திட்டுவதற்காகவே எம் மக்களிடம் வசூல் செய்து மாநாடு போட்டு மார்தட்டி பேசி பிற அமைப்புகளை குறை கூறுவதிலேயே விரயம் செய்கிறார்கள். தம் அமைப்புக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள், வேறு எதாவது உபயோகமான விளைவுகள் அந்த மாநாடுகளால் நிகழ்ந்தது என்று இந்த தலைவர்கள் சொல்வார்களா. கூட்டத்தை கூட்டி நம் மக்களின் நேரத்தையும், செல்வத்தையும் செலவழித்ததை தவிர எதையாவது உருப்படியாக இந்த அமைப்புகள் செய்திருக்குமா என்று இந்த தலைவர்கள் சொல்லட்டும்.
பத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள்:
பத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள் செய்கின்றார்கள், இதில் இறைமறை தமிழில், மற்றும் பயனள்ள ஹதீஸ் தொகுப்புகளை வெளியிட்டவர்களுக்காக நம் சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. அவர்களுக்காக நாம் எப்பவும் நம் ஆதரவை தெரிவித்துக் கொண்டும் இருக்கிறோம். அவர்கள் உழைப்பும், பணியும் பாராட்டத்தக்கது. இவைகளை தவிர்த்து குப்பைகளாக வெளிவந்து கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் பத்திரிக்கை வெளியீடுகள் பற்றிப் பார்ப்போம்.
இந்த பத்திரிக்கைகளின் தரம் கூட அதை பார்த்தால் தெரிந்துவிடும். ஏதோ பெயருக்கு சங்க நிதிக்கு வலு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், தம் அமைப்பின் கொள்கை விளக்க வெளியீடாகவும் வெளியிடப்படும் சஞ்சிகைகளாகவும், மற்ற அணியினரை தாக்கி அறிக்கைப் போர் நடத்தவும்தான் அவைகள் உதவி இருக்கின்றனவே தவிர அவைகள் நம் இளைஞர்களுக்குள் ஒரு எழுச்சியையோ, எம் பெண்களுக்கு உள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதையோ புரிந்து கொள்ள முடியாத அளவில்தான் இருக்கிறது. அதில் வெளிவரும் கட்டுரைகள் மிக பழைய செய்திகளை தாங்கியிருக்கும். அது கூட எதாவது இணையத்தில், அல்லது ஆங்கில பதிப்பின் தழுவல்களை சுட்டு எழுதியிருப்பார்கள். கூடுவாஞ்சேரியில் பள்ளியில் நடந்த கலவரத்தை பற்றி தெரியாத அந்த ஊர்க்கார இளைஞரின் கையில் தவழும் நம் சங்க கொள்கை முழக்க பத்திரிக்கையில் ஈராக்கையும், பாலஸ்தீனையும், அமெரிக்காவையும் பற்றிய கட்டுரைகள். ஈராக், பாலஸ்தீனம் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் முதலில் நம் ஊர் அரசியல், சமூக சதிகளை இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பரப்ப வேண்டும். மற்ற பத்திரிக்கைளை பார்த்தாவது நமது பத்திரிக்கைகளின் தரத்தை கூட்ட எந்த தலைவராவது தாம் நடத்தும் பத்திரிக்கைகளில் முயன்றதுண்டா... ?
ஏற்கனவே படிப்பறிவிலும், பொது அறிவு, அரசியல், சமூக சிந்தனைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நம் சமுதாய மக்களை இன்னும் அதள பாதாளத்தில் தள்ளும் முயற்சியாகவே இந்த பத்திரிக்கைகள் விளங்கி வருகின்றன. நாமும் இந்த குப்பைகளை வாங்கி நம் காசை கரியாக்கிக் கொண்டிருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வையும், ஒற்றுமையையும் வளர்க்க எந்த பத்திரிக்கையாவது முயன்றதுண்டா என்று சிந்தித்துப் பார்க்கவும்.
இணையத்தளங்கள், மற்றும் மிண்ணணு ஊடகங்கள் :
நம்முடைய அமைப்புகள், சங்கங்களிடையே இணையத்தளங்களுக்கு குறைவில்லை, ஆனால் அவைகள் இதுவரை என்ன பணியாற்றிருக்கிறது என்று காண்போம்.
அந்த இணையத்தளங்களை திறந்தாலே முதல் பக்கத்தில், தலைப்பு செய்தியாக, குண்டர்கள், ரவுடிகள் என்று மற்ற நம் அணியினரை தாக்கியே செய்திகள் அனுதினம் வந்து கொண்டிருக்கிறது. மற்ற அணியினரை சாடியே அதிக பக்கங்களை செலவிடுகிறார்கள் இன்டர்நெட் என்பது இன்றைக்கு எத்தனை வலிமையான ஊடகம் அவற்றை எப்படி பயன்படுத்தி பயன்பெறலாம் என்று என்றைக்காவது இந்த சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் ஒரு நொடியேனும் சிந்தித்திருப்பார்களா. ?
சின்ன சின்ன குழுக்களாகவும். தனி நபர்களின் ஆர்வத்தாலும் நம் சமுதாய சகோதரர்களால் நடத்தப்படும் இனையத்தளங்கள் எத்தனை வலிமையாக நடை போடுகிறது என்பதையாவது இவர்கள் உணர்ந்திருப்பார்களா ? அழைப்புப்பணி மற்றும் குர்ஆன், சுன்னாவையும் பரப்புவதில் தனிநபர் இணையத்தளங்கள் எத்தனை நன்றாக இயங்குகிறது என்பதை ஏற்றுக் கொள்வதற்கு கூட முடியாத நிலையில்தான் இன்று நம் சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் தான் என்ற அகந்தையில் உழல்கின்றார்கள். எப்போதாவது நம்மிடம் இருக்கும் சிறிய ஊடகங்களை வலிமையாக்க, ஆக்கபூர்வமாக உபயோகிக்க எந்த சுயநல தலைவர்களாவது சிந்தித்திருப்பார்களா ?
ஆடியோ, வீடியோ, சி.டி வெளியீடுகள் :
நம் அமைப்புகளின் மற்ற அணியினரை தாக்கியும், சுய நிலை விளக்கம் என்று வரும் ஆடியோ, வீடியோ சீ.டி வெளியீடுகளை மாற்று மதத்தினர் பார்த்தால் உங்களுக்குள்ளே இவ்வளவு குழுக்களும், குழப்பங்களும் பிரச்னைகளும் இருக்கிறதா என்று ஓடியே போய்விடுவான். அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து மற்றவரை தாக்கி வரும் வெளியீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உபயோகமான வெளியீடுகள் பற்றி மட்டும் இனி யோசிப்பார்களா இந்த தலைவர்கள்.
பாதிக்கப்பட்ட நம் சமுதாய மக்களுக்கு உதவிகள் :
கலவரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்கின்றனர், ஆனால் கலவரம் வருவதற்கு முன்பாக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை, நமக்குள் ஒற்றுமை நிலையை ஏற்படுத்தி வைத்தீர்கள் என்பதுதான் நம் கேள்வி. அதில் கூட பொது வசூல் செய்த பணத்தை பொதுவாக உதவிகள் செய்வது கிடையாது. பாதிக்கப்பட்ட எல்லோரையும் ஒன்றாக பார்ப்பது கிடையாது. தம் அமைப்பை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உதவிகள் செய்வது என்ற பாகுபாட்டையும், பிரிவினையையும் இந்த தலைவர்கள் என்றாவது களைய முயற்சித்து இருப்பார்களா ?
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
இனக் கலவரங்களால் நம் மக்கள் பாதிக்கப் படுவதற்கு முன் இந்த அமைப்புகள் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து வைத்தார்கள்;. பாதிக்கப் படும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு எதிரிகளிடம் அடி வாங்கியும், வெறித்தனமாக எம் பெண்களை சூறையாடி மானபங்கம் செய்தும், எம் குழந்தைகளையும், இளைஞர்களையும், வெட்டி நெருப்பில் வீசி எறிந்தும், நம் சமுதாய மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தும், அழித்தும் எல்லாம் முடிந்த பின்னர் அவர்களுக்காக பொது வசூல் செய்து நாடோடி கேம்ப்களில் வீடு, வாசல், சொத்து உறவினர்களை இழந்து நிற்கும் அவர்களுக்கு எதாவது உதவியை செய்து விட்டு அவர்களுக்காக பரிதாபப்படும் ஏஜெண்டுகளாகதான் நம் சங்கங்கள் இதுவரை இருந்து வந்திருக்கிறது. இத்தனை அடிபட்டும், உதைபட்டும் நம்மில் ஒற்றுமை வேண்டும் என்றும், நம் எதிரிகளை சந்திக்க அவர்களின் சதிகளை முறியடிக்க நாம் ஒன்றுபட்ட சமுதாயமாக இருக்க வேண்டும் என்று எந்த தலைவராவது அதற்காக பாடுபட்டார்களா.
ஈகோ மற்றும் தான் என்ற கர்வம் பிடித்த தலைவர்கள் :
ஏதேதோ பெரிய லாஜிக்கெல்லாம் பேசும் தலைவர்கள், கூட்டங்களில் சவால் விடும் தலைவர்கள் மிக சாதாரண விஷயமாக '' நீங்கள் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் '' என்று எம் தலைவர் நபி (ஸல் ) அவர்கள் போதித்ததை மட்டும் காதில் போட்டுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. இதைப்பற்றி நினைத்தாவது பார்த்திருப்பார்களா.
எல்லா தலைவர்களும் ஈகோவால், தான் என்ற மமதையால். தான் சொல்வதே சிறந்தது, தன் கட்சியே உயர்ந்தது என்றும். வறட்டு பிடிவாதம் பிடிக்கின்றார்களே ஒழிய நம் சமுதாயத்திற்கும் அதிலும் குறிப்பாக நம் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பை ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம் நாம் என்ன நிலையில் இன்று இருக்கின்றோம் என்று இந்த தலைவர்கள் உணர்வார்களா. அநேக குடும்பங்களில் ஆண்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருக்க பெண்களும், குழந்தைகளும், முதியவர்களுமே இருக்கும் நம் சமுதாய மக்களின் பாதுகாப்பு நிலை என்ன என்று உணர்வார்களா இந்த தலைவர்கள்.
பம்பாய், குஜராத், பாபரி மஸ்ஜித், கோவை (இன்னும் எத்தனையோ) சம்பவங்கள் நடந்து நடு ரோட்டில் எம் பெண்களை மானபங்கப்படுத்தி, எம் குழந்தைகளை கொன்று தீயில் போட்டு எரித்த பின்னர் எஞ்சி அறைகுறையாக செத்து ஏதாவது ஒரு அகதிகள் கேம்பில் இருப்பவர்களுக்கு பொது வசூல் செய்து உதவி செய்வதுதான் நம் கழகங்கள் செய்யும் பணியா ? அதற்காகத்தான் இவர்கள் கழகம் நடத்துகிறார்களா ?
இந்த சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர் எல்லாம் கூடி ஆர்பாட்டம் செய்ததில் என்ன நன்மையை இதுவரை கண்டோம் என்று நம் எல்லோரும் அறிந்ததே. அதையேனும் இந்த தலைவர்கள் உணர்வார்களா.?
பிற சிறிய கட்சியினரின் ஒற்றுமை நிலை :
சில சிறிய கட்சிகளும், சிறிய சாதி சார்ந்த கட்சிகளும் தங்கள் ஒற்றுமையால் அரசியலிலும், சமூகத்திலும் நல்ல அந்தஸ்தை பெற்று தம்மை சார்ந்து இருக்கும் மக்களுக்காக போராடுவதையும் நாம் கண்கூடாக பார்க்கின்றோம். அதற்கு ஒரே காரணம் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்பதுவும் யாம் அறிந்ததே. இந்த தலைவர்களுக்கு இது கூட தெரியாதா என்ன.
பா.ம.க, ம.தி.மு.க போன்ற சிறிய கட்சிகள் தங்கள் ஒற்றுமையினால் இன்று அரசியலில் எத்தனை பலம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அந்த அமைப்பை சேர்ந்த மக்களுக்கு அவைகள் எத்தனை சிறப்பாக செயல்படுகிறது என்பதை இந்த தலைவர்கள் சிந்தித்தார்களா.
போர்களமாய் பிற அணியினருடன்:
இவை எல்லாவற்றையம் விட அசிங்கமான செயல் இப்பபோது நம்மிடையே பிரிந்து கிடக்கும் கழகங்களிடையே காண முடிகிறது. நமக்குள்ளாகவே அடித்துக் கொள்வதும். ஒருவர் மற்றவரை தாக்கி அறிக்கைப் போர் என்று எல்லா ஊடகங்களிலும் எவரையாவது திட்டியும், புறம் பேசியும் வசை பாடியும் போர்களமாகதான் காட்சியளிக்கிறது. காவல் நிலையங்களுக்கு கூட சென்று மற்ற அணியினர் மீது புகார்கள் தந்தும். வழக்குகள் தொடர்ந்தும் தங்கள் தரத்தையும் தாழ்த்திக் கொள்ள இந்த மார்க்க அறிஞர்களும், இந்த அமைப்புகளும், தலைவர்களும் தயங்குவதில்லை.
இந்த தலைவர்களுக்கு:
இந்த தலைவர்களுக்கு ஒன்று நாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். நம் எதிரிகள், அந்நிய சக்திகள் நம்மை வேறறுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு முன்னால் நீங்களாகவே நமக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு பலவீனப்பட்டுப் போகாதீர்கள் அவர்களிடமும் கொஞ்சம் உதை வாங்குவதற்காக பிரிந்து கிடந்து பலவீனப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சக்தியை கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். நம் எதிரிகள் எல்லோரும் ஓரணியில் நின்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தக்க தருணம் பார்த்து நம் மீது பாயவும் காத்திருக்கிறார்கள் என்பதை எப்பவும் மனதில் வைத்து செயல்படுங்கள்.
நம் அரசியல் நிலை :
அரசியலில் மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தித்தான் நம் எதிரிகள் நம்மை பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே நாமும் பல்வேறு மதங்கள் வாழும் இந்த சமுதாயத்தில் நம் குரல் பாராளுமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் ஒலிக்க வேண்டும், நமக்கென்று நம்முடைய குறைகளை எடுத்து வைக்க நம் பிரதிநிதிகள் அரசியலில் பங்கு வகிக்க வேண்டும் என்ற எண்ணமாவது தோன்றியிருக்கிறதா இதுவரை அதற்கான எந்த முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்கின்றீர்கள். அரசியலே வேண்டாம் என்று நாம் ஒதுங்கி விலகிப் போய்விட முடியாது.
என்ன நிலையை தேர்வு செய்வது:
அரசியலையும், ஆண்மீகத்தையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொள்ளவும் வேண்டாம்.
இரண்டையும் ஒன்றாக போட்டு குழப்புவதால்தான் பிரச்னைகள் அதிகம் வருகிறது. ஆகவே இரண்டு பிரிவுகளாக பிரித்து செயல்படுவதில் எந்த பிரச்னையும் இருக்காது.
மதம் சார்ந்த பிரச்னைகளை அணுக தனிப் பிரிவும், அரசியல், சமூக பிரச்னைகளை அணுக அரசியல் பிரிவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குர்ஆன், சுன்னா, தொளஹீத் இப்படி எந்த விதமான பிரச்னைகளையும், தீர்வையும் தருவதற்காக அதற்கான அறிஞர்களைக் கொண்ட பிரிவை ஏற்படுத்தி அவர்கள் முற்றிலும் மதம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தொப்பி போட்டு தொழலாமா, வேண்டாமா, விரலசைத்து தொழலாமா வேண்டாமா என்ற பிரச்னைகளை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். அது போலவே ஒரே அமைப்பாக, ஒரே தலைவர், ஒரே குடையின் கீழ் ஒரு அரசியலமைப்பில், நம்மிடம் உள்ள அரசியல், சமூக சிந்தனைகள் அதிகம் நிறைந்தவர்கள், படித்தவர்கள், அரசியலில் முதிர்ச்சி உள்ளவர்கள், சமூக அரசியல் ஞானம் அதிகம் உள்ளவர்களை அரசியல் பிரிவில் ஏற்படுத்தி தேர்தல் காலங்களில், மற்றும் சமூக, அரசியல், சட்ட பிரச்னைகள் நமக்கு வரும்போது அவர்கள் பாடுபடும் வகைக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். நிச்சயமாக நம்மிடம் அரசியல் பிரிவு வேண்டும். நாமும் அரசியலில் பங்காற்றித்தான் நம் உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற முடியும் என்பது மிக தெளிவானது. இதில் எந்த குழப்பமும் இல்லை. இதில் மார்க்க விஷயங்களை நுழைத்து குழம்பிக் கொள்ள வேண்டாம்.
இன்று நம் நிலை:
நம் எதிரிகள் அவர்கள் செய்ய துடிப்பதை நாமே செய்து கொள்கிறோம் சிறிய சிறிய குழுக்களாக பிரிந்து கிடக்கிறோம். நம் எதிரிகள் நம்மை பகடைக் காய்களாக ஆக்கி அரசியல் களத்தில் நம்மை பந்தாடி விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களை, முதியவர்களை, குழந்தைகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு வெளிநாட்டில் வாழும் ஆண்கள் எல்லோரும் இந்த அமைப்புகள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு நல்ல தீர்வையும், நம் மக்களுக்கு நல்ல பாதுகாப்புத் தன்மையையும் தராதா என்று காத்திருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் புதிய அமைப்புகள் தோன்றுவதும், நான்தான் தலைவர் என்று புதிய தலைவர் வருவதும் தினசெய்திகளாக இருக்கிறது. ஒன்றாக பலமாக இருந்த அமைப்புகள் தனிப்பட்ட தொலைநோக்கு பார்வையில்லாத தலைவர்களின் அகம்பாவத்தால், தான் என்ற கர்வத்தால் நாளுக்கொரு அமைப்பாக உடைந்து மக்கள் மத்தியில் பலவீணப்பட்டு கிடக்கிறார்கள். சில நேரங்களில் இவர்கள் ஒருவேளை நம் எதிரிகளின் கைக்கூலிகளோ என்று சந்தேகப்படும் அளவிற்கு இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. ஒருவர் மற்ற சகோதரரையும், மற்ற அணியினரையும் அப்படித்தான் நடத்திக் கொள்கிறார்கள். நம் சமுதாயத்தின் முன்னேற்றம், பாதுகாப்புத் தன்மை என்பது இன்னும் ஒரு பெரிய கேள்விக் குறியாகத்தான் தொக்கி நிற்கிறது.
இளைஞர்களுக்கு:
கண் மூடித்தனமாக தலைவர்களின் பின்னால் போகும் இளைஞர்களே...செத்த நாயிலும் கேவலமான நம் வாழ்க்கை எந்த உரிமையும் இல்லாத நமக்கு, ஒற்றுமைக்காக பாடுபடாத இந்த தான் என்ற ஈகோ பிடித்த தலைவர்களின் பின்னால் உங்கள் மாபெரும் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் எப்போதாவது உங்களை நோக்கி கேள்விக் கேட்டிருக்கின்றீர்களா. அல்லது உங்கள் தலைர்களை நோக்கி இந்த கேள்விகளை கேட்டு இருக்கின்றீர்களா. இந்த வாழ்கையை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள். எப்போதாவது ஒற்றுமையைப் பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா. செத்த பிணம் போல, ஆட்டு மந்தைகளைப் போல சுயமாக சிந்திக்காமல் எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் ஓடி உழைக்கப் போகிறீர்கள். எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் கொடி பிடித்துக் கொண்டு இருக்கப் போகிறீர்கள். சுயமாக சிந்தியுங்கள், உங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், தலைவர்களையும் கேள்வி கேளுங்கள். நாளை நம் சமுதாயம் ஒற்றுமையாய் ஓரே அணியின் கீழ் ஒரே குடையின் கீழ் நிற்க பாடுபடும் தலைவரை இனம் காணும் வரை எந்த தலைவரின் பின்னாலும் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
தலைவர்களுக்கு:
அரசியலையும் மதத்தையும் போட்டு மக்களை குழப்பாதீர்கள், அரசில் பிரிவு, மதம் சார்ந்த பிரிவுகளை ஏற்படுத்தி அந்தந்த பிரச்னைகளை அந்தந்த துறைகளில் நிபுணத்துவம், முதிர்ச்சியும் பெற்ற நம் பெரியார்களை, அறிஞர்களை கொண்டு தீர்வுகாண முயலுங்கள், எல்லாம் எனக்கு தெரியும், நான்தான் தலைவர் என்ற அகந்தையில், தலைவர்கள் தான் என்ற கர்வத்தில், சுயமாக மமதையில் உழலாதீர்கள்.
தலைவர்களே நாங்கள் நன்றாக உங்கள் முகம் நோக்கி கேள்வி கேட்போம்தான். பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால். மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று மக்களின் உழைத்த பணங்களில் சந்தா, நன்கொடை, புத்தக விற்பனை செய்து உங்கள் கழகத்தை மட்டும் பலப்படுத்த அல்ல எங்கள் சமுதாயத்திற்கும் பாதுகாப்பும், சமூக உரிமையையும் பெற்றுத் தரத்தான். நம்மிடையே ஒற்றுமையை வளர்க்கத்தான். இதையெல்லாம் செய்ய இயலாது என்றால் நல்ல ஒரு பர்தாவை போர்த்திக் கொண்டு உங்கள் வீட்டிலேயே முடங்கிப்போங்கள், உங்களை எவனும் கேள்வி கேட்க மாட்டான். நீங்கள் முடங்கிப் போவதால் எம் சமுதாயம் ஒன்றும் அழிந்து விடாது. ஒரு புரட்சியையும், ஒற்றுமையையும் எங்களுக்குள் கொண்டு வர எம்மில் ஒருவன் பிறந்திருப்பான் அல்லது இறைவன் பிறக்க வைப்பான் இன்ஷா அல்லாஹ்...
ஒற்றுமையாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள், எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் இல்லையேல் புதியவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி ஓடிப்போய் வீட்டோடு ஒளிந்து கொள்ளுங்கள்.
எம் சமுதாயத்தில் எல்லோரும் ஓற்றுமையாக ஒரே குடையின் கீழ் ஓரே அணியாக எல்லோரும் சகோதரர்களாக நின்று குரல் கொடுக்கும் நாளை (இன்ஷா அல்லாஹ்) மிக ஆதங்கத்துடன், ஆவலுடன் எதிர் பார்த்தவனாக இறைவனிடம் கையேந்தியவனாய்.
சுலைமான்
sulai_sa@yahoo.com
(எப்போதோ மின்னஞ்ச் மூலம் கிடைக்க பெற்ற கட்டரை)