Thursday, April 16, 2009

சரத்குமாருடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது - இல. கணேசன்

சரத்குமாருடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது - இல. கணேசன்

சென்னை : நடிகர்கள் சரத்குமார், கார்த்திக் கட்சிகளுடன், பா.ஜ., நடத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் 12 வேட்பாளர்களின் பட்டியல் பா.ஜ., சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில், பா.ஜ., மாநிலத் தலைவர் இல.கணேசனை, ச.ம.க., தலைவர் சரத்குமார், நாடாளும் மக்கள் கட்சித்தலைவர் கார்த்திக் ஆகியோர் நேற்று சந்தித்து, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர் உட்பட ஆறு தொகுதிகளில் ச.ம.க.,வும், விருதுநகர், தேனி உட்பட ஐந்து தொகுதிகளில் நா.ம.க.,வும் போட்டியிடுவது என சுமுகமாக முடிவு எடுக்கப்பட்டது. வரும் 18ம் தேதி ச.ம.க., சார்பில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து பா.ஜ., மாநிலத் தலைவர் இல.கணேசனிடம் கேட்டபோது, "பா.ஜ., - ச.ம.க., - நா.ம.க.,வுடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மற்ற கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளின் முழுமையான பட்டியல் இன்று வெளியிடப்படும்' என்றார்.

நன்றி : தினமலர்

தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

சரத்துடன் கூட்டணி என்று தமுமுக அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் நாம் சரத்குமார் பி.ஜே.பி யுடன் கூட்டணியில் உள்ளார் என்று நாம் சுட்டிக்காட்டி தமுமுக பி.ஜே.பி யுடன் கூட்டணியா? என்று கேள்வி எழுப்பியிருந்தோம். அதை மறுக்கும் விதமாக சரத்குமார் பி.ஜே.பி யுடன் கூட்டணியில் இல்லை ஆகவேதான் நாங்கள் சரத்துடன் கூட்டணி என்று தமுமுக வினர் தங்களது இணையத்தில் மறுத்து செய்தி வெளியிட்டிருந்தனர். தற்சமயம் சரத்குமாருடன் பி.ஜே.பி யின் கூட்டணி உறுதி செய்யப்பட்டு இல.கணேசன் அவர்களால் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? இன்றும் சரத்குமாருடன் கூட்டணி தொடர்கின்றதா இல்லையா? - முகவைத்தமிழன்

வாலிபருக்கு தமுமுக உறுப்பினர் என்பதால் மறுக்கப்பட்ட சிறை வார்டன் பணி வழங்க பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு

மதுரை: கன்னியாகுமரியை சேர்ந்தவருக்கு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருந்ததற்காக மறுக்கப்பட்ட சிறை வார்டன் பணியை வழங்க சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரியை சேர்ந்த சகுபர் சாதிக் தாக்கல் செய்த ரிட் மனு: நான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக வடக்குசூரங்குடி கிளையில் உறுப்பினராக இருந்தேன். ஒரு வாரஇதழ் ஏஜன்ட்டாகவும் பணிபுரிந்தேன். என் மீது ஈத்தான்மொழி போலீசில் ஒரு குற்றவழக்கு பதிவாகியிருந்தது. அதில் என் மீது குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்.


இந்நிலையில் நான் சிறை வார்டன் கிரேடு 2 பணிக்கு அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்றேன். எனக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. சீரூடை பணியாளர் தேர்வாணைய தலைவர், சிறை ஐ.ஜி., எஸ்.பி.,யிடம் கேட்ட போது என் மீது வழக்கு, முஸ்லீம் முன்னேற்ற கழக உறுப்பினர், வார இதழ் ஏஜன்ட் என காரணம் காட்டி பணியில் நியமிக்க மறுத்து விட்டனர். என்னை பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரினார். மனுதாரர் சார்பில்வக்கீல்கள் லஜபதிராய், ஜின்னா ஆஜராயினர்.


நீதிபதி எஸ்.மணிக்குமார் பிறப்பித்த உத்தரவு: முஸ்லீம் முன்னேற்ற கழகம் அமைதியை குலைக்கும், வெறுப்பை தூண்டும் அமைப்பு என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இங்கு தாக்கல் செய்யப் படவில்லை. அரசால் தடை செய்ய இயக்கமோ, மதரீதியான இயக்கமோ என அறிவிக்கப்படவில்லை. அதில் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்காக மட்டுமே மனுதாரர் தகுதியற்றவர் என கூற முடியாது. இவ்விஷயத்தில் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் உட்பட மூன்று பேரது அணுகுமுறை தவறு. மனுதாரரை மேலும் கஷ்டபடுத்த அனுமதிக்க கூடாது. அவரை பணியில் அமர்த்த மூன்றுஅதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நன்றி : தினமலர்

Wednesday, April 15, 2009

ஆதரவு…மனித நேய கட்சியினரை சந்தித்த ராமதாஸ்


சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னையில் மனித நேய மக்கள் கட்சியினரை சந்தித்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொண்டதாகத் தெரிகிறது.

தமுமுக சார்பில் துவக்கப்பட்ட அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சி துவக்கத்தில் திமுக கூட்டணியில் இடம் பிடித்திருந்தது. அங்கு அவர்களுக்கு திமுக ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்க முடிவு செய்தது. ஆனால் ஒரு தொகுதி ஒதுக்கும் கலாச்சாரத்தை நிறுத்த வேண்டும் என கூறி மனித நேயக் கட்சி கூட்டணியை விட்டு விலகியது.

இதையடுத்து அதிமுகவுடன் கூட்டணிக்கு முயற்சித்தது. ஆனால், அங்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து சரத்குமார் கட்சியின் ஆதரவுடன் மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

மனித நேய கட்சி சார்பில் மத்திய சென்னையில் தமுமுக செயலாளர் ஹைதர் அலியும், மயிலாடுதுறையில் கட்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவாகிருல்லாவும், ராமநாதபுரத்தில் சலிமுல்லாகானும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுளளனர்.

இந் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், ஜிகே மணி ஆகியோர் இன்று சென்னை மண்ணடியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

ஜவாகிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியோரை சந்தித்து இருவரும் பேசினர்.

டாக்டர் ராமதாஸ் அவர்களிடம், உங்கள் நட்பு நீடித்த நட்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்.

இதன்மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என அவர் சூசகமாக கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

Monday, April 13, 2009

மனிதநேய மக்கள் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளர் அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளராக தமுமுகவின் மாநிலச் செயலாளர் கோவை. இ. உமர் அவர்கள் அறிவிக்கப் பட்டுள்ளார்.


இவர் ஆரம்ப காலத்தில் கோவை குனிய முத்துர் கிளை தலைவராகப் பணியாற்றி பின்னர் மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் மாவட்டத் தலைவர் பதவிக்குப் பின்னர் மாநிலச் செயலாளராக பணியாற்றி வருகிறார், கோவை மாவட்ட மக்களால் நன்கு அறிமுகமானவர்.

செய்தி : www.tmmk.in

Sunday, April 12, 2009

வெற்றியை நோக்கி முஸ்லிம் லீக்!

வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் க‌ட்சியின் வேட்பாளராக‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் உல‌க ஒருங்கிணைப்பாள‌ரும், அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் த‌லைவ‌ருமான‌ முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் ப‌ள்ளிக்க‌ல்வியை ஆக்கூர் ஓரிய‌ண்ட‌ல் உய‌ர்நிலைப்ப‌ள்ளியில் ப‌டித்தார். ப‌ள்ளிப்ப‌டிப்பின் போதே மாநில‌ அள‌விலான‌ பேச்சுப் போட்டிக‌ளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரியில் க‌ல்லூரிப் ப‌டிப்பினைப் ப‌யின்றார்.



உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் போட்டியிடுகிறார்!


நக்கீரன் சர்வே!

இந்த நிலையில் நக்கீரன் வார இதழ் (ஏப்- 11- 2009) முடிவின் படி

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முத்துப்பேட்டை

எம். அப்துல்ர‌ஹ்மான் அவர்கள் 48% ஓட்டுக்களைப்பெற்று வெற்றிப் பெறுவார்!

இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)


தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!

உன்மையில் முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான்

அவர்களை வேட்பாளராக பெற்ற வேலுர் தொகுதிவாசிகள்

கொடுத்துவைத்தவர்கள்....!

விடியல் வெள்ளி - சந்தா தள்ளுபடி


அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர / சகோதரிகளே,
அஸ்ஸலாமுஅலைக்கும்,

உங்கள் அனைவருக்கும் ஓர் அறிய வாய்ப்பு......

தமிழகத்தின் முன்னணி தமிழ் மாதாந்திர பத்திரிக்கைகளில் ஒன்றான விடியல் வெள்ளி தனது வருடாந்திர சந்தா திட்டத்தை குறைக்கப்பட்ட (தள்ளுபடி) விலையில் அறிவித்து உள்ளது.


இந்தியாவில் ஒரு வருட சந்தா : ரூபாய். 150/- மட்டுமே.
இரண்டு வருட சந்தா : ரூபாய். 300/- மட்டுமே.
சலுகை காலம் ஏப்ரல் 05, 2009 முதல் ஏப்ரல் 15, 2009 வரை மட்டுமே.
UAE-ல் (இந்திய முகவரிக்கு)
ஒரு வருட சந்தா : திர்கம் 15௦/- மட்டுமே
இரண்டு வருட சந்தா : திர்கம் 25/- மட்டுமே


சலுகை காலம் ஏப்ரல் 10, 2009 முதல் ஏப்ரல் 20, 2009 வரை மட்டுமே.
உங்களுக்கு அருகாமையில் உள்ள விடியல் வெள்ளி முகவர்களையோ அல்லது கீழே உள்ள விடியல் வெள்ளி அலுவலக முகவரிக்கோ தொடர்பு கொண்டு இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் அடைவீர்.


Address: 25, Barracks Road ,
Periamet,
Chennai - 3
Phone: 044-25610969
e-mail:
vidialvelli@gmail.com


அறிவின் புதையல் - அதுவே விடியல்!
விடியல் வாசகர் - அறிவின் போதகர்!
படியுங்கள்! பரப்புங்கள்! பாதுகாத்துவையுங்கள்!


நன்றி : விடியல் யாஹீ குழுமம்

விடியல் வெள்ளி - சந்தா திட்டம்

ன்பார்ந்த இஸ்லாமிய சகோதர / சகோதரிகளே,

அஸ்ஸலாமுஅலைக்கும்,

உங்கள் அனைவருக்கும் ஓர் அறிய வாய்ப்பு......

தமிழகத்தின் முன்னணி தமிழ் மாதாந்திர பத்திரிக்கைகளில் ஒன்றான விடியல் வெள்ளி தனது வருடாந்திர சந்தா திட்டத்தை குறைக்கப்பட்ட (தள்ளுபடி) விலையில் அறிவித்து உள்ளது.

இந்தியாவில்

ஒரு வருட சந்தா : ரூபாய். 150/- மட்டுமே.

இரண்டு வருட சந்தா : ரூபாய். 300/- மட்டுமே.

சலுகை காலம் ஏப்ரல் 05, 2009 முதல் ஏப்ரல் 15, 2009 வரை மட்டுமே.

UAE-ல் (இந்திய முகவரிக்கு)

ஒரு வருட சந்தா : திர்கம் 15/- மட்டுமே

இரண்டு வருட சந்தா : திர்கம் 25/- மட்டுமே

சலுகை காலம் ஏப்ரல் 10, 2009 முதல் ஏப்ரல் 20, 2009 வரை மட்டுமே.

உங்களுக்கு அருகாமையில் உள்ள விடியல் வெள்ளி முகவர்களையோ அல்லது கீழே உள்ள விடியல் வெள்ளி அலுவலக முகவரிக்கோ தொடர்பு கொண்டு இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் அடைவீர்.

Address: 25, Barracks Road,

Periamet,

Chennai - 3

Phone: 044-25610969

e-mail: vidialvelli@gmail.com

அறிவின் புதையல் - அதுவே விடியல்!

விடியல் வாசகர் - அறிவின் போதகர்!

படியுங்கள்! பரப்புங்கள்! பாதுகாத்துவையுங்கள்!

பா.ஜ.,வுடன் கூட்டணி* கார்த்திக் தகவல்

பா.ஜ.,வுடன் கூட்டணி* கார்த்திக் தகவல்





மதுரை : லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.,வுடன் அ.இ.நா.ம.க., (அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி) கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் கார்த்திக் தெரிவித்தார்.


மதுரையில் அவர் கூறியதாவது:தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் கட்சி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திருப்பூர், நீலகிரி தொகுதிகளில் ஏதாவது ஏழு தொகுதிகளில் போட்டியிடும்.பா.ஜ., 10க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடலாம். இக்கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் வாய்ப்புகள் உள்ளன. கூட்டணி இல்லாத இடங்களில் கட்சியின் மாவட்ட செயலர்கள் எந்த கட்சிக்கு ஓட்டளிப்பது என அறிவிப்பார்கள். இந்த லோக்சபா தேர்தலுடன் இக்கூட்டணி முடிந்துவிடும்.இவ்வாறு கார்த்திக் கூறினார்.

நன்றி : தினமலர்

பாப்புலர் ப்ரண்ட் -- தமிழகத்தில் தேர்தல் நிலைப்பாடு 13ம் தேதி அறிவிப்பு??

தேசிய அளவில் பல மாநிலங்களில் செயல்பட்டு வரும் பாப்புலர் ப்ரண்ட் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் குறித்து தேசிய அளவில் எந்த ஒரு நிலைப்பாடையும் எடுக்கவில்லை எனவும் அந்தந்த மாநில நிலவரத்தை பொறுத்து மாநில நிர்வாகம் முடிவு எடுக்கும் எனவும் முன்பே செய்தி வெளியிட்திருந்தது..

அதன் அடிப்படையில் கேரளாவில் பாப்புலர் ப்ரண்ட் நிலைப்பாட்டை அதன் மாநில தலைவர் நஸ்ருதின் வெளியிட்டார்..

தமிழகத்தில் வருகிற மக்களவை தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு பற்றிய ஆலோசனைக்கூட்டம் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமையில் சென்னையில் 13.04.09 அன்று நடக்க இருக்கிறது..

இது தொடர்பான செய்தி அறிக்கை..


Saturday, April 11, 2009

அரசியல் ஹராமா? (VIDEO)

"அரசியல் ஹராமா?"

அஷ்ஷேய்க். நாசர் அலிகான் அவர்கள்

Al-Sheikh. Nasar Al Khan


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். நாசர் அலி கான் அவர்கள்