Showing posts with label சரத்குமார். Show all posts
Showing posts with label சரத்குமார். Show all posts

Thursday, April 16, 2009

சரத்குமாருடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது - இல. கணேசன்

சரத்குமாருடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது - இல. கணேசன்

சென்னை : நடிகர்கள் சரத்குமார், கார்த்திக் கட்சிகளுடன், பா.ஜ., நடத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் 12 வேட்பாளர்களின் பட்டியல் பா.ஜ., சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில், பா.ஜ., மாநிலத் தலைவர் இல.கணேசனை, ச.ம.க., தலைவர் சரத்குமார், நாடாளும் மக்கள் கட்சித்தலைவர் கார்த்திக் ஆகியோர் நேற்று சந்தித்து, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர் உட்பட ஆறு தொகுதிகளில் ச.ம.க.,வும், விருதுநகர், தேனி உட்பட ஐந்து தொகுதிகளில் நா.ம.க.,வும் போட்டியிடுவது என சுமுகமாக முடிவு எடுக்கப்பட்டது. வரும் 18ம் தேதி ச.ம.க., சார்பில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து பா.ஜ., மாநிலத் தலைவர் இல.கணேசனிடம் கேட்டபோது, "பா.ஜ., - ச.ம.க., - நா.ம.க.,வுடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மற்ற கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளின் முழுமையான பட்டியல் இன்று வெளியிடப்படும்' என்றார்.

நன்றி : தினமலர்

தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

சரத்துடன் கூட்டணி என்று தமுமுக அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் நாம் சரத்குமார் பி.ஜே.பி யுடன் கூட்டணியில் உள்ளார் என்று நாம் சுட்டிக்காட்டி தமுமுக பி.ஜே.பி யுடன் கூட்டணியா? என்று கேள்வி எழுப்பியிருந்தோம். அதை மறுக்கும் விதமாக சரத்குமார் பி.ஜே.பி யுடன் கூட்டணியில் இல்லை ஆகவேதான் நாங்கள் சரத்துடன் கூட்டணி என்று தமுமுக வினர் தங்களது இணையத்தில் மறுத்து செய்தி வெளியிட்டிருந்தனர். தற்சமயம் சரத்குமாருடன் பி.ஜே.பி யின் கூட்டணி உறுதி செய்யப்பட்டு இல.கணேசன் அவர்களால் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? இன்றும் சரத்குமாருடன் கூட்டணி தொடர்கின்றதா இல்லையா? - முகவைத்தமிழன்

Tuesday, March 24, 2009

பா.ஜ.க உடன் கூட்டணி- தமிழக அரசியலில் சரத்குமார் காணாமல் போவார் -- பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக மாநில தலைவர் வெளியிட்டுள்ள செய்தி :


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் பா.. வின் மதவெறி பாசிச கொள்கையால் பா.. வை கைவிட்ட நிலையில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பா.. உடன் கூட்டணி வைத்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது

.... நாடார் சமுதாய மக்களின் பிரதிநிதியாக தன்னை காட்டி கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் நாடார் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்கும், கண்ணியத்திற்கும் காரணமான கர்மவீரர் காமராஜர் அவர்கள் சங்பரிவாரங்களின் பாசிச கொள்கைகளை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்தினால் டெல்லியில் அவரை வீட்டோடு எரித்து கொள்ள முயற்சித்தவர்கள்தான் இந்த பா.. வினர்

காமராஜரை உயிரோடு எரித்து கொள்ள முயன்ற சங்பரிவாரத்தைச் சேர்ந்த பா.. வோடு கூட்டணி வைத்துள்ள சரத்குமாரை நாடார் சமுதாயம் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.

பா.. வோடு கூட்டணி வைத்துள்ள சரத்குமார் தமிழக அரசியலில் காணாமல் போகும் அளவிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.