Saturday, December 19, 2009
முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை
முஸ்லீம்கள் உள்பட அனைத்து சிறுபான்மையினர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய 2004ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷனின் சமீபத்தில் அரசிடம் தனது அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கையை நேற்று மக்களவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
இதர மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு 5 சதவீத ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்.
அனைத்து மதங்களிலும் உள்ள தலித்துகளையும் ஷெட்யூல்டு கேஸ்ட் பட்டியலில் சேர்க்க வேண்டும். (இதன்மூலம் இஸ்லாமிய, கிருஸ்துவ மதத்துக்கு மாறிய தலித்துகளும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியும்).
குறிப் பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அல்லது ஏதாவது ஒரு பணிக்கு முஸ்லீம் விண்ணப்பதாரர்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றால், அந்த பின்னடைவு இடங்களை மற்ற சிறுபான்மையினருக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு-கமிஷனில் கருத்து வேறுபாடு:
இந் நிலையில் இந்த கமிஷனின் உறுப்பினரான ஆஷா தாஸ், கமிஷனின் பரிந்துரைகளில் மாறுபட்டு சில பரிந்துரைகளை அளித்துள்ளார்.
மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்.சிகளுக்கான சலுகைகள் வழங்கக்கூடாது. வேண்டுமானால் பிற்பட்டோர் பிரிவினருக்குரிய சலுகைகளை வழங்கலாம் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் வரவேற்பு-பாஜக எதி்ர்ப்பு:
இந்த கமிஷன் அறிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,
மிக வும் நுட்பமாக ஆய்ந்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் வரவேற்கத்தக்கவை.
இந்த பரிந்துரைகள் குறித்து விரிவான விவாதம் நடத்தி அதை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில்,
ரங் கநாத் மிஸ்ரா பரிந்துரைகள், மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளன. மேலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை இந்த பரிந்துரைகள் பாதிக்கும். இந்த பரிந்துரை நாட்டுக்கு பயனற்றது என்றார்.
ஜைன மதத்தினர் கோரிக்கை:
இந் நிலையில் நாட்டில் பல்வேறு சமூகத்தினர் தங்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்துகளைக் கோரியுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிறுபான்மையினர் பட்டியலில் தற்போது முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிருஸ்துவர்கள் மற்றும் புத்த மதத்தினர் ஆகிய ஐந்து சமூகத்தினர் மட்டுமே உள்ளனர்.
ஆனால், ஜைன மதத்தினரும் (ஜெயின்கள்) தங்களை இதில் சேர்க்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
Wednesday, November 11, 2009
வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org
Friday, October 30, 2009
மராட்டிய தேர்தல்: 11 முஸ்லிம் வேட்பாளர்கள்
வ.எ | தொகுதி | கட்சி | வெற்றிப் பெற்ற வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
1 | மாவேகான் மத்தி | ஜன் சூரிய சக்தி | முப்தி முஹம்மது இஸ்மாயில் காலிக் | 71157 |
2 | வாந்த்ரே மேற்கு | காங்கிரஸ் | ஜியாவுத்தீன் சித்தீக் | 59659 |
3 | மலத் மேற்கு | காங்கிரஸ் | அஸ்லம் ஷேக் | 51635 |
4 | அணுசக்தி நகர் | தேசியவாதி காங்கிரஸ் கட்சி | நவாப் மாலிக் | 38928 |
5 | மும்பா தேவி | காங்கிரஸ் | அமீன் படடேல் | 45285 |
6 | பீவண்டி கிழக்கு | சமாஜ்வாதி கட்சி | அபு ஆசிம் ஆஜ்மி | 37584 |
7 | பீவண்டி மேற்கு | சமாஜ்வாதி கட்சி | அப்துல் ரசீத் தாஹிர் முமீன் | 30825 |
8 | சுhந்திவல்லி | காங்கிரஸ் | கான் முஹம்மது ஆரிப் | 82616 |
9 | முன்குருத் சிவாஜிநகர் | சமாஜ்வாதி கட்சி | அபு ஆசிம் ஆஜ்மி | 38435 |
10 | சிலோத் | காங்கிரஸ் | முஷ்ரிப் ஹஸன் | 104241 |
11 | சிலோத் | காங்கிரஸ் | அப்துல் சத்தார் அப்துல் நபி | 98131 |
மராட்டிய மாநிலத்தில் 1 கோடியே 30 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். 2001 அரசு மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி மராட்டிய மாநிலத்தின் மொத்த மக்கட் தொகையில் 10.6 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். மராட்டிய சட்டமன்றத்தில் 288 உறுப்பினர்கள் உள்ளனர். முஸ்லிம்களின் மக்கட் தொகையுடன் ஒப்பிடும் போது 31 சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் 1952 முதல் 1999 வரை மராட்டிய சட்டமன்றத்தில் முஸ்லிம்களாக இருந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 9.5 ஆக மட்டுமே இருந்துள்ளது. 2004ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்தது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் அது 12 ஆக உயர்ந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அபு ஆசிம் ஆஜ்மி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Thursday, October 22, 2009
தேர்தல் களத்தில் SDPI !!


பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!! என்ற முழக்கத்துடன் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் குரலாக சமீபத்தில் உருவான தேசிய அரசியல் கட்சி SDPI முதன் முறையாக கேரளத்தில் கண்ணூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது
வேட்பாளர் : மஜீத் பயிஸி ( மாநில செயலாளர், SDPI கேரளா)



Sunday, October 18, 2009
மீண்டும் பெண் சாமியார் பிரக்யா சிங்கின் தீவிரவாதம்!! கோவா குண்டு வெடிப்பு

கோவாவில் பனாஜி அருகே மார்கோ நகரில் கிரேஸ் சர்ச் உள்ளது. இந்த சர்ச் அருகே நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிமருந்து பொருள் வெடித்தது. இந்த சம்பவத்தில் சனாதன் சன்ஸ்தா என்ற இந்து அமைப்பை சேர்ந்த மெல்குண்டா பாட்டீல் பலியானார். யோகேஷ் நாய்க் என்பவர் படுகாயம் அடைந்தார். வெடிமருந்து பொருள் வெடித்ததில் மூன்று வாகனங்கள் எரிந்து சாம்பலாயின.
மும்பை மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குரின் சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் இந்த இருவரும் சம்பந்தப்பட்டவர்கள், என போலீசார் தெரிவிக்கின்றனர். ஸ்கூட்டரின் உரிமையாளர் நிஷாத் பாக்லே என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த 20 கிலோ மீட்டர் தூரத்தில் மின் ஒயர்கள் சுற்றப்பட்ட பையையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர். மார்கோ பகுதி, கோவா முதல்வர் திகம்பர் காமத்தின் தொகுதி என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு :
1) பி.ஜே.பி நடத்தும் தொடர் குண்டுவெடிப்புகள் - IIPONLINE.ORG
2) மாலேகான் குண்டுவெடிப்பும் இந்து பயங்கரவாதிகளும்
3) மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்
Wednesday, October 14, 2009
இட்டுக்கட்டக்கூடிய அறிவிப்பாளர் பி.ஜே யா?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம் செய்வது சம்மந்தமாக மூன்று மாதங்களுக்குப் பின் பீ. ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ‘நினைவு’ திரும்பியுள்ளது. (எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் தொடர்பான என்னுடைய நோட்டீஸைப் பார்த்திராவிட்டால் இன்னும் நினைவு திரும்பிஇருக்காது போலும்)
நினைவு திரும்பி, ‘முக்கிய அறிவிப்புகள்’ என்று தலைப்பிட்டு முஜிபுர்ரஹ்மான் உமரி கலந்துறையாடலுக்கு வராமல் ஓடுகிறார் என்றும், இன்னொரு தலைப்பிட்டு அதில் முஜிபுர்ரஹ்மான் உமரியை நேருக்கு நேர் சந்தித்த செய்தியையும் அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியை இனைத்தும் சில செய்திகளை பீ. ஜைய்னுல் ஆபிதீன் எழுதியிருக்கிறார்.
மாய்ந்து மாய்ந்து அவர் எழுதியருப்பதில் முக்கிய பாயிண்ட் என்னவென்றால், ‘கடந்த மார்ச் மாதம் பீ. ஜைய்னுலாபிதீனின் தர்ஜமா தவறுகள் தொடர்பான விவாதத்தில் ஜைனுலாப்தீன் வென்றார் முஜிபுர்ரஹ்மான் தோற்றார். அதனால் அடுத்த கலந்துரையாடல்களுக்கு முஜிபுர்ரஹ்மான் பயப்படுகிறார்’ இது தான் அவர் முக்கியமாக வைப்பது.
தோல்வி அடைந்தது பீ. ஜைனுல் ஆபிதீன்-தான்:
அவர் தோற்றதற்கு தெளிவான ஆதாரத்தைத் தருகிறோம். அதை மூளை சரியாக வேலை செய்யக்கூடிய, சிந்திக்கின்ற ஆற்றல் உள்ள தமிழ் படிக்கத்தெறிந்த எல்லோரும் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
முஜிபுர்ரஹ்மான் எடுத்துவைத்த பீஜேவின் தவறுகளில் முக்கியமான ஒன்று, ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ என்ற தலைப்பில் பீ.ஜைனுல் ஆபிதீன் தன் கருத்தைப் புகுத்துவதற்காக ஹதீஸில் இடைச்செறுகள் செய்துள்ளது பற்றியதாகும்.
அதாவது ஒவ்வொரு வருடமும் ஜிப்ரீல் (அலை) வந்து நபியுடன் குர்ஆனை ஓதி செல்வது பற்றிய ஹதீஸில், “அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களை திரும்ப” என்று எழுதி, அந்த வருடத்தில் என்ற வாசகத்தை செறுகி இருக்கிறார்.
இது, அவர் பின்னால் சொல்லப்போகிற ஒரு கருத்தை முன் கூட்டியே படிப்பவர்கள் மனதில் பதியவைப்பதற்காக செய்துள்ள காரியம் எனபதனால் இது ஹதீஸில் செய்கிற தில்லு முல்லு என்ற ரீதியில் முஜிபுர்ரஹ்மான் தனது வாதத்தை வைத்தார்.
ஆனால் ஜைனுல் ஆபிதீன் இதனை மறுத்தார். விவாதத்தில் ஓன்றுக்கு மேற்பட்ட சுற்றுக்கள் இது பற்றி பேசப்பட்ட போதும், தான் தவறு செய்யவில்லை என்றும் தான் எழுதியது சரிதான் என்று சமாளித்தார்.
ஆனால் விவாதத்திற்குப் பின் வெளியிட்டுள்ள தனது தர்ஜமாவின் எட்டாவது பதிப்பில், முஜிபுர்ரஹ்மான் தவறானது என்று நிரூபித்த வாசகத்தை பீ ஜைனுல் ஆபிதீன் நீக்கியுள்ளார். இங்கே முக்கியமாக ஒன்றைக் குறிபிட்டாக வேண்டும். இதே தவறை விவாதத்தில் சுட்டிக்காட்டும் போது அந்த நேரத்திலும் பிடிவாதமாக மறுத்தார். விவாதத்தின் இறுதி உரையிலும் முஜிபுர்ரஹ்மான் ஒரு தவறையும் எடுத்து வைத்து நிரூபிக்கவில்லை என்றும் இவர் கூறும் தவறு எதுவும் தவறு இல்லை என்றும் திமிராக பேசினார்.
இங்கே விவாதத்திற்கு முன்பு இருந்த பாதிப்புகளில் இடைச்செறுகலான வாசகம் இடம் பெற்று இருப்பதையும் விவாதத்திற்கு பின்பு அது நீக்கப்பட்டிருப்பதையும் தருகிறோம்.-பீ.ஜைனுல் ஆபிதீனின் தர்ஜமாவில் ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ தலைப்பின் கீழ் ஏழாம் பதிப்பிலும் அதற்கு முந்திய பதிப்புகளிலும் இடம் பெற்றதாவது
அதாவது விவாதத்துக்குமுன்:இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுப்படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்திச் செல்வார்.
(பக்கம்:35-36 ஏழாம் பதிப்பு)
பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்


விவாதத்திற்குப் பின் இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரில் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களை திரும்ப நினைவு படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்திச் செல்வார். (பக்கம் 41, எட்டாவது பதிப்பு, ஆகஸ்ட் 2009)
பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்

முந்தைய பதிப்புகளில் ‘அந்த வருடத்தில்’ என்று செறுகியிருந்த வாசகத்தை விவாதத்திற்குப் பின் நீக்கியுள்ளார்.
இந்த வாசகத்தின் விபரீதத்ததை புரியாதவர்கள் இதிலென்ன பெரிய தவறு வந்துவிடப்போகிறது என்று நினைக்கலாம். இதற்கு ஒரு சில பக்கங்களுக்குப் பின் குர்ஆனின் சூராக்களின் வரிசை நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்பட்டதல்ல என்ற கருத்தை பீ. ஜைனுல் ஆபிதீன் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த கருத்தை முன்பே வாசகர்களின் மனதில் போடுவதற்காக மேற்கண்ட ஹதீஸூக்கு மாற்றமான செய்தியை அதற்குள் லாவகமாக இடைச் செறுகல் செய்துள்ளார்.
ஹதீஸ் வாய்வழியாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த ஜைனுல் ஆபிதீன் அவர்கள் வாழ்ந்திருந்தால் ஹதீஸ் கலை அறிஞ்ர்கள அவரை இட்டுக்கட்டக்கூடிய அறிவிப்பாளர் என்று அறிவித்திருப்பார்கள்.
தான் எழுதியது சரி தான் என்று விவாதத்தில் வைத்து சமாளித்ததுக்கொண்டிருந்தவர் இதனை நீக்கியிருக்கிறார். நீக்கியபின், முஜிபுர்ரஹ்மான் அது எப்படி இருக்கவேண்டுமென்று சொன்னாரோ அப்படியே வந்திருக்கிறது. (இன்னும் பல திருத்தங்கள் உள்ளன நாம் பின்பு மக்களுக்கு எடுத்துவைப்போம் இன்ஷா அல்லாஹ்) ஆனாலும் தானே ஜெயித்தாக பரையடித்ததுக்கொண்டிருக்கிறார் சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் விவாதத்தில் தோற்றவர்தான் தனது தோல்வியையும் பலவீனமான வாதத்தையும், விதண்டாவாதத்தையும், மறைப்பதற்காக சீடியை எடிட் செய்து வெளியிடுவார். ஆகவே விவாத சீடியை எடிட் செய்து வெளியிட்ட சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் மேற்படி விவாதத்தில் தோற்றவர் என்பது நிரூபனமாகிவிட்டது.
ஆனாலும் அவர் துணிச்சலாக, தான் வென்றதாக எழுதிக்கொண்டும் எதிராளியை மட்டம் தட்டி பரிகாசம் செய்து கொண்டும் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன?
அதற்குக் காரணம் மக்களை (அதாவது அவரது இது போன்ற பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நம்பும் மக்களை) அவர் ஆடு மாடுகள் போல் கருதுவதால்தான், இதை நாமாகச் சொல்லவில்லை. அவர் வாயினாலேயே சொன்னது!
TNTJ உருவாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அதன் மாநிலச்செயலாளராயிருந்த ஒரு சகோதரர் அப்போது நடந்த (சகோதர இயக்கத்துக்கெதிரான) வன்முறை சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.
அது பற்றி பேசுவதற்காக, பீ ஜைனுல் ஆபிதீனுக்கு போன் செய்த அந்த சகோதரரின் டிரைவர் (இவர் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபாடுள்ளவர்) இப்போது நடக்கும் சம்பவங்களால் மக்களிடத்திலே தவ்ஹீத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிடுமே என்ற கவலையை தெரிவித்துள்ளார். அதற்கு பீ.ஜைனுலாபிதீன் சொன்ன பதில்:
‘மக்கள் என்பது ஆடு மாடுகள் மாதிரி , சீக்கிரமே மறந்து
விடுவார்கள்.
ஆக இவரை நம்பும் TNTJ காரர்களை இவர் இப்படித்தான் வைத்திருக்கிறார். இவர் நிலையை தெரிந்து கொண்ட எங்களைப்போல் பலர் அவரிடமிருந்து விலகிக் கொண்டோம். இவ்வளவும் தெரிந்த பின்னும் அவருக்கு ஆதரவாளர்களாயிருக்கும் சகோதரர்கள் சற்று யோசிக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் ஆடு மாடுகள் மாதிரி இருக்கப்போகிறீர்கள்? ஜைனுல் ஆபிதீனிடம்!
அவர் இவ்வாறு கருதும் மக்களை –குறிப்பாக TNTJ-யிலுள்ள மக்களை ஏமாற்றுவதற்கு முஜிபுர்ரஹ்மான் உமரீயுடன் கலந்துரையாடல் நடக்காதது குறித்து தவறான தகவல்களை அள்ளிக் கொட்டியுள்ளார். ஆடு, மாடுகள் மாதிரியில்லாத மனிதர்களுக்கு அது குறித்து சுருக்கமான தெளிவைத் தருகிறோம்.
பீ. ஜைனுல்ஆபீதீனீன் தர்ஜூமா தவறுகளின் விவாத முடிவில், மற்ற தலைப்புகளை கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளும்படி ஜாக் மதுரை மாவட்டத் தலைவர் இமாம் ஹூசைன் கேட்டுக் கொண்டதனால் கலந்துரையாடலுக்கு தாம் ஒப்புக் கொண்டதாக எழுதி தவறான செய்தியை தருகிறார். உண்மையில் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்ததே ஜைனுல் ஆபிதீன்தான்.
அடுத்த மூன்று தலைப்பு விவாதங்கள் பற்றி மேடையில் இருந்நதவர்கள் ஆலோசனை செய்த போது ஒரே நாளில் மூன்று விவாதங்களையும் வைத்துக் கொள்ளலாம். என்று நான் கூறினேன். அதை இமாம் ஹூசைன் ஜைனுலாபீதீன் அவர்களிடம் சொன்ன போது, ஒரு நாளா? போதாது அப்படியென்றால் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம், என்று முதலவாதாக கூறியது ஜைனுலாபிதீதான் அதனை முஜீபுர்ரஹ்மானிடம் இமாம் ஹூசைன் எடுத்துக்கூறிய போது அவரும் ஒப்புக்கொண்டார்.
இதுவெல்லாம் சிடியில் பதிவாகியிருந்தும் அதை மட்டும் துண்டித்திருக்கிறார். பிறரை மட்டம் தட்டுவதற்காக இவர் கையாளும் இழிந்த தந்திரங்களில் இது முதலாவது அல்ல என்பது ஆடு, மாடுகள் போல் இல்லாத மக்களுக்கும் தெரியும்.
முஜிபுர்ரஹ்மான் உமரீ ஓடி ஒளிவதாகவும் அவர் மீது பரிதாபப்பட்டு தான் மவுனம் காத்ததாகவும் பி.ஜைனுலாபிதீன் கதைத்திருக்கிறார். ‘வாக்களித்த காலம் முடிந்து மாதங்கள் பல ஓடிவிட்டன. தொடர்ந்து ஓட்டம் பிடிக்கிறார். என்று எழுதிய ஜைனுலாபிதீனுக்கு நாம கூறுகிறோம் வாக்களித்த காலம் முடிந்தவுடன் உடனடியாக நேரில் அவரிடம் ஆள் அனுப்பிக்கேட்கவில்லை. விருதுநகரில் அவர் இருக்கும் பகுதியில் தான் TNTJ மாவட்டச் செயலாளாரும் நகர நிர்வாகிகளும் இருக்கிறார்கள். அல்லது நேரடியாக தபால் எழுதியும் கேட்க வில்லை. நாம் இதில் தொடர்ந்து தலையிட மறுத்து நேரடியாக பேசிக்கொள்ளட்டும் என்று ஒதுங்கிய பின் மேற்கண்டவாறு பீ ஜைனுல் ஆபிதீன் செய்திருந்தால் இப்போது அவர் கதைப்பது உண்மையாக இருந்திருக்கும். ஆனால் நேரடியாக தனது கட்சி பொறுப்பாளரை அனுப்பி பேசுவதற்கோ அல்லது தபால் மூலம் தொடர்பு கொள்ளவோ பயந்தார் ஜைனுலாப்தீன். ஏனென்றால் அப்படிச் செய்திருந்தால், விவாத சி.டி.யில் பல இடங்களில் எடிட் மோசடி செய்து வெளியிட்டது அதைப்பற்றி முஜிபுர்ரஹ்மான் கேள்வி எழுப்புவார் தான் அவமானப்பட வேண்டியது வரும் என்ற பயத்தினாலேயே மவுனம் காத்தார்.
ஆனால் முஜிபுர்ரஹ்மான் உமரீ மீது பரிதாபப்பட்டு மவுனம் காத்ததாக சொல்லி இவர் ஆடு மாடுகளாக கருதும் மக்களின் காதுகளில் பூ சுற்றுகிறார்.
யாருக்கு பரிதாபப்படுகிறாராம் இவர்? இவரது கருத்துப்படிதவ்ஹீதுக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடிய, பணத்துக்காக சத்தியக் கொள்கையிலிருந்து வழி கெட்டுக்குபோய் அந்த வழிகேட்டைப் பிரச்சாரம் செய்யக்கூடிய, இவரது தர்ஜமாவில் தவறே இல்லாதவற்றை தவறென்று கூறிய, தவ்ஹூதுக்கு எதிராக சதி செய்யக்கூடிய, இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே மாற்றம் செய்துவிட்ட ஜாக் இயக்கத்தினரோடு சேர்ந்து கொண்டு மார்க்கத்தில் குழப்பம் செய்யும் ஒருவரை மார்க்க அடிப்படையில் எதிர்கொண்டு அடையாளம் காட்டாமல் பரிதாபப்பட்டு சும்மா இருந்நதாராம். இதை நம்புபவர் ஆடு மாடுகளைப் போன்றவர்கள் அல்ல, ஆடுமாடுகளாகத்தான் இருக்க முடியும்!
முஜிபுர்ரஹ்மானிடம் விவாதம் குறித்துப் பேச நாம் மேற்குறிப்பிட்ட இலகுவான வழிகள் இருக்கும் போது குப்பை, குப்பை என பிதற்றிக்கொண்டு டாட்காம்களுக்கும் சவால் விடுகிறார் என்றால் இதன் மூலம் ‘இவரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்!’
கடந்த 25.9.2009 அன்று முஜிபுர்ரஹ்மான் உமரீ தொண்டியில் பீஜே அவர்களை எதார்த்தமாக கண்டபோது தானே சென்று , ஸலாம் சொல்லி கைகுலுக்கியதை இவர்களாக வலுக்கட்டாயமாக அவரிடம் போய் பேசியதாக திசை திருப்பியிருக்கிறார்.
அதோடு அப்போது நடந்த பேச்சுக்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். (அதிலும் கட்டிங்)
அதை வெளியிட்டதும் மிகுந்த நன்மையாக போய் விட்டது. பீ. ஜைனுலாபிதீன் அவர்கள் தன் ஆதரவாளர்களை ஆடு மாடுகளை மாதிரி கருதி வைத்திருக்கிறார். என்பது அவரே சொன்னது. அதன் உதாரண நிகழ்வுதான் அந்த பதிவில் நாம் காண்பது.
முஜீபும் பீ.ஜைனும் லாபிதீனும் உரையாடியதை சற்று நேரம் அமைதியாக தொடரவிட்டிருந்தால், சில உண்மைகள் வெளிப்பட்டிருக்கும், ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல், இருவரும் பேசுவதை குழப்பும் விதத்தில் சுற்றி நின்றவர்களில், பீ.ஜைனுவால் ஆடு மாடுகள் மாதிரி என்று சரியாக கணிக்கப்பட்டவர்கள், இடையிலே தாங்கள் சொல்வதையே திரும்பத்திரும்ப சொல்லி கூச்சல் குழப்பம் செய்வதை நாம் பார்க்கிறோம்.
மரியாதையான வார்த்தைகளால் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போது, தரக்குறைவான வார்த்தைகளை – வேண்டுமென்றே இடையில் புகுந்து பேசி அதை சண்டையாக மாற்றும் ததஜ ஜமாஅத் பொறுப்பாளர்களையும் அந்தப் பதிவில் பார்க்கிறோம்.
பேச்சு நாகரீகமும், மரியாதையும் ஒழுங்கும் அறியாத முரடர்கள் தான், ததஜ ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள் என்பதால் அந்த ஜமாஅத்தின் தரம் பற்றி முடிவு செய்வது மக்களுக்கு எளிதாகி விட்டது.
பீ.ஜைனுல் ஆபிதீன் பெரிய அறிவாளி, புத்திசாலி, மனோநிலை அறிந்து பேசுபவர் என்பது எல்லோருக்கும் தெரியும், அதன்படி தன் ஆதரவாளர்களைப்பற்றி ஆடுமாடுகள் மாதிரி என்று அவர் கூறியதற்கு சரியான எடுத்துக்காட்டாக இப்போது தனது இணைய தளத்தில் வெளியிட்ட – முஜிபுர்ரஹ்மானுடன் சச்சரவு செய்த – வீடியோ காட்சிகள் உள்ளன.
ஆகவே, அதை அவசியம் பார்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்! அதை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்குமாறு ஆன்லைன் பீஜே இணைய தளத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.
தவறுகளுக்கு தண்டனை கொடுக்காமல் அல்லாஹ் விட்டு வைத்திருப்பதை தவறாக பயன்படுத்தி மேலும் மேலும் தவறுகள் செய்து, தங்களை கூடுதல் அழிவுக்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள் வழிகேடர்கள்.
அத்தகையவர்களின் வழிமுறையில் தொடர்ந்து செயல்படாமல், வருந்தி திருந்துங்கள் என்று பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கும் மற்றவர்களுக்கும் நான் நினைவுபடுத்தும் இறை வசனம் :
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். (59:18)
- M. அப்துர் ரஹ்மான் மன்பஈ
நன்றி : இஸ்லாம் கல்வி
Sunday, October 11, 2009
மனிதநேய மக்கள் கட்சிக்கு முதல் வெற்றி
அந்தக் கட்சியின் வேட்பாளர் முகமது அலி தமக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் தமீம் இப்ராஹிமை 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
வாக்குகள் விவரம்:
மொத்த வாக்குகள் : 1441
பதிவானவை : 881
முகமது அலி (மமக) : 414
தமீம் இப்ராஹிம்(அதிமுக) : 214
முகமது அலி : 206 (முஸ்லீம் லீக்)
Friday, October 2, 2009
அரசு உதவித்தொகை பெற உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் சேரவாய்ப்பு: ராமநாதபுரம் கலெக்டர் ஹரிகரன் தகவல்
சிறுபான்மையினர் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைய உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர் சேர்க்கை தற்போது வக்புவாரிய ஆய்வாளர் மூலமாக நடைபெற்று வருகிறது.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலமாக திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணம், முதியோர் உதவித்தொகை மற்றும் இயற்கை, மரணம், விபத்தால் மரணம், ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகிய பல நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இத்திட்டத்தில் 18 வயது நிறைவு செய்து 60 வயத்துக்குட்பட்ட பள்ளி வாசல்கள் மதர்ஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்க்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மோதினார்கள். பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள், அடக்கஸ் தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த நலவாரியத்தில் உறுப் பினராக பதிவு பெற தகுதியுடைவர்கள்.
உறுப்பினராக பதிவு பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகம் அல்லது வக்புவாரிய ஆய்வாளர் அலுவலகத்தில் உரிய படிவத்தினை பெற்று இந்த நலவாரியத்திற்கு உறுப்பினராக பதிவு பெற தகுதியுடையவர் என்பதற்கு ஆதாரமாக அவர் பணிபுரியும் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் போன்ற நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கோ அல்லது வக்புவாரிய ஆய்வாளர், வக்பு கண்காணிப்பாளர்க்கோ அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
நன்றி : மாலைமலர்
Thursday, October 1, 2009
வக்பு வாரிய கல்லூரி மாஜி முதல்வருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: மதுரையில், பேராசிரியைக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த வக்பு வாரிய கல்லூரி முன்னாள் முதல்வர் இஸ்மாயில், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மீண்டும் பணியில் சேர்க்க கோரிய இஸ்மாயில் மனுவையும் தள்ளுபடி செய்தது. மதுரை கே.கே.நகரில், வக்பு வாரிய கல்லூரி 1958ல் துவக்கப்பட்டது. வக்பு வாரிய கட்டுப்பாட்டில் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரியில் பேராசிரியை ஷமீம்ராணி 1996 அக்., 1ல் பணியில்சேர்ந்தார். இஸ்மாயில் விரிவுரையாளராக 1978ல் கல்லூரியில் சேர்ந்தார். 1999ல் முதல்வராக நியமிக்கப்பட்டார். 2003ல் இஸ்மாயில் செக்ஸ் தொந்தரவு செய்வதாக ஷமீம்ராணி கல்லூரி நிர்வாகக் கமிட்டியிடம் புகார் செய்தார். 2003ல் கமிட்டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு இஸ்மாயில் அளித்த பதில் திருப்தியாக இல்லாததால் கமிட்டி, ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது. அக்குழு விசாரணையில், இஸ்மாயில் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. 2003 ஜூலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு, அவரை பணியில் இருந்து நீக்க நிர்வாக கமிட்டி முடிவு செய்தது. இந்நிலையில், கல்லூரியில் புதிதாக நிர்வாகத்தை ஏற்ற கமிட்டி, அவரை பணியில் மீண்டும் சேர்க்க முடிவு செய்து, 2006 மே 29ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முன்னாள் மாணவர் அஸ்ரப் அலி பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.
மேலும், இஸ்மாயிலை மீண்டும் பணியில் சேர்க்கும் நிர்வாக கமிட்டி முடிவை ரத்து செய்யக் கோரி பேராசிரியை ஷமீம்ராணி ஒரு மனு செய்தார். இம்மனுக்கள் தாக்கலானதையடுத்து நிர்வாகக் கமிட்டி, இஸ்மாயிலை பணி நீக்கம் செய்தது. இதனால், மீண்டும் தன்னை பணியில் சேர்க்கக் கோரி இஸ்மாயில் தனியாக ஒரு மனு செய்தார். இம்மனுக்கள், தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி.ராஜா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அஸ்ரப் அலி சார்பில் வக்கீல் சுப்பையா, ஷமீம்ராணி சார்பில் மூத்த வக்கீல் டி.ஆர்.ராஜகோபால், அரசு தரப்பில் ஜானகிராமுலு ஆஜராயினர்.
நீதிபதிகள் உத்தரவில், ""பேராசிரியைக்கு கல்லூரி முதல்வரே செக்ஸ் தொந்தரவு கொடுத்தது துரதிருஷ்டவசமானது. கல்லூரி நிறுவன முதல்வராக இருப்பவரிடம், இத்தகைய நடவடிக்கையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தளவுக்கு முதல்வரை எதிர்த்து தைரியத்துடன் போராடிய ஷமீம்ராணியை கோர்ட் பாராட்டுகிறது. ஷமீம்ராணிக்கு, இஸ்மாயில் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கல்லூரி நிர்வாகம் (முரண்பாடான நடவடிக்கைகளுக்காக) ஷமீம்ராணிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இஸ்மாயில் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என்றனர்.
நன்றி : தினமலர்
Tuesday, September 8, 2009
ரமழான் - இறுதிப் பத்து நாட்கள் (VIDEO)
ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் பற்றியும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ பதிவினை காண்பதற்கு இங்கு சொடுக்கவும்.
ரமளானின் இறுதிப் பத்து. லைலத்துல் கத்ர், இஃதிகாஃப்
புனித மிக்க ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நரகின் விடுதலையை உள்ளடக்கிய சிறப்புக்குரியதும், மேலும் லைலத்துல் கத்ர் இரவு போன்ற சிறப்பினை உள்ளடக்கியதுமான பெரும் சிறப்புகளைக் கொண்டதாகும். அருள்மிகு ரமளானின் இவ்விறுதிப் பத்து நாட்களில் பிரயாசைப் பட்டுச் செய்கின்ற நற்செயல்களுக்கு அதிகமதிகம் நன்மைகளும் பன்மடங்காகக்கப்பட்ட நற்கூலிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் அதிக சிரத்தையுடன் நன்மைகள் செய்வதில் தீவிரம் காட்டுபவர்களாகவும் அழுத்தம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.
நபியவர்கள் ரமளான் இறுதிப் பத்தில் கருமமாற்றியது பற்றி ஆயிஷh (ரலி) அவர்கள் தெளிவாக அறிவிக்கின்றார் கள்: ரமளானின் கடைசி பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் கச்சை கட்டிக் கொண்டு அவற்றின் இரவுகளை விழித்திருந்து கழிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள் (புகாரி)
ஆயிஷh (ரலி) அவர்கள் அறிவிக்கும் பிரிதொரு ஹதீஸ் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது: நபியவர்கள் முந்தைய இருபது நாள் இரவுகளில் விழித்திருந்து தொழவும் செய்தார்கள். தூங்கவும் செய்தார்கள். ஆனால் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் கச்சை கட்டிக் கொண்டு அமல்களில் முழுமையாக ஈடுபடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)
ரமளான் மாதத்தின் இறுதிப் பத்தின் மகத்துவமும், சிறப்பும் பற்றி இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளங்குகின்றன. இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் முதல் இருபது நோன்பு நாட்களையும் விட இந்நாட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கினறார்கள் என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஓதுவது, அதிகமதிகம் திக்ருகளில் ஈடுவடுவது, அதிகமதிகம் தர்மம் செய்வது இவ்வாறான நன்மைகளாகும்.
இஃதிகாஃப்
இந்தப் பத்து நாட்களில் மற்றுமொரு சிறப்பு இஃதிகாஃப் இருப்பதாகும். இஃதிகாஃப் என்பது இலளகீக காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழி பாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவதாகும். ஒரு முஸ்லிம் இப்படிச் செய்வது அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன. நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பயாகும். அவ்வாறு ஒருவர் ஈடுபடும்போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகினறார்.
அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெருவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார் : அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று. உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)
ஒருவர் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம்; சங்கடங்களின்றி மனஒருமையோடு அல்லாஹ்வை வழிபடுவதற்காகவாகும். அவ்வாறு இருப்பதனால் அம்மனிதர் லைலதுல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றார்;. அத்தோடு உடலுறவு, அதற்கு முன்னுள்ள காரியங்களான முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல், போன்ற காரியங்களும் இஃதிகாஃப் இருப்பவருக்கு விலக்கப்பட்டதாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், நஃபிலான தொழுகைகளில், இன்ன பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருத்தல் அவசியமாகும். மேலும் உலக விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் தேவையற்ற காரியங்களை விட்டும் தவர்ந்து இருத்தல் அவசியமாகும். ஆனால் ஏதேனும் முக்கிய நலனை முன்னிட்டு இஃதிகாஃப் இருப்பவர் தனது குடும்பத்தாருடன் ஆகுமான பேச்சுக்கள் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்: இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்த இருக்கும்போது மனைவியர்களுடன் கூடாதீர்கள். (2 : 187)
லைலதுல் கத்ர்
லைலதுல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். ரமளான் மாத இறுதிப் பத்தின் ஒற்றைப்பட்ட நாட்களில் இந்த இரவு வருமென அதிகமனா நபி மொழிகள் கூறுகின்றன. இவ்விரவு ஒரு ஆண்டில் 27லும் மற்றொரு ஆண்டில் 25, 23, 21 29 போன்ற நாட்களிலும் வர வாய்ப்பிருப்பதால் இவ்விரவு ஒவ்வொரு ஆண்டிலும் 27ல் தான் வருமெனத் எண்ணி அமல்கள் செய்வது தவறாகும். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகரை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97 : 1-5)
நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கனிறார்கள்: விசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் எவர் லைலதுல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகினறன. (புகாரி, முஸ்லிம்). .
யா அல்லாஹ்! வழிகேட்டில் ஆழ்த்தக் கூடிய குழப்பங்களை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக! நன்மையின் பக்கம் விரைந்து செல்லக்கூடிய, தீமைகளை விட்டும் விலகிச் செல்லக்கூடிய, சுவர்க்கத்து மாளிகைகளில் நிம்மதியாக தங்கி வாழக்கூடிய மக்களுடன் எங்களைச் சேர்த்து வைப்பாயாக! உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடிய, அழகாய் உனக்கு வழிபட்டு நடந்து உனது நேசத்தைப் பெற்றோரின் குழுவில் எங்களையும் இணைத்து வைப் பாயாக! கருணை மிக்க இறைவனே! பயங்கரமான நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி உனது கருணை கொண்டு எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும். மற்றும் எல்லர் முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!.
Sunday, August 30, 2009
இஸ்லாமிய ஒளியில் எஸ்.பி.பட்டிணம் பள்ளி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எஸ்.பி.பட்டிணம் மெயின் ரோட்டிலுள்ள பள்ளி வாசலை யார் நிர்வகிப்பது என்பதில், ஊர் ஜமாத்தினருக்கும் த.த.ஜவினருக்கும் சச்சரவு நடந்து கொண்டிருப்பது நாமெல்லாம் அறிந்தததே! இந்தப் பிரச்சனையை இஸ்லாமிய ஒளியில் நீதியின் வழி நின்று தீர்வை தேடுவோமாக!
த.த.ஜதரப்பு கூறுவது என்ன?
இடத்தின் உரிமையாளர் எங்கள் இயக்கத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டதால் எங்களுக்கு உரியதே என்கிறார்கள்!
அவர்கள் வாதம் சரியே! அவர்கள் இயக்கத்திடம் பள்ளிவாசலை ஒப்படைப்பதே நீதீ! (இதற்கு தடையாக வேறு காரணம் இருந்தால் தவிர)
இந்த நீதிப்படி மேலாப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலை த.த.ஜகாரர்கள் ஜாக் இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஏனென்றால் அந்த பள்ளிவாசல் இடம் ஜாக் இயக்கத்தின் பெயரில்தான் வாங்கப்பட்டு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
ஜாக் க்கும் த.த.ஜ ஐயும் அந்தப்பள்ளிவாசலுக்காக மோதிக்கொண்டபோது, அல் ஜன்னத் மாத இதழின் செப்டம்பர் 2006 வெளியீட்டில், அந்தப் பள்ளியின் பத்திர நகல் வெளியிடப்பட்டது அதில் அந்தப் பள்ளி ஜாக் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததை மக்கள் படித்தார்கள்.
மேலும் ஜாக் இயக்கத்துக்காக அந்த இடத்தை வாங்கிய அந்த அமைப்பின் நிர்வாகிகள் சாட்சிகளாக இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இத்தகைய தெளிவான ஆதாரங்களுக்குப் பின்பும் கூட உரியவர்களிடம் பள்ளியை ஒப்படைக்காமல், பலவந்நதத்தின் மூலம் தங்களிடமே வைத்திருக்கிறார்கள் த.த.ஜ காரர்கள்.
ஆகவே எஸ்.பி. பட்டிணத்தில் தாங்கள் பேசும் நீதீயை மேலாப்பாளையத்தில் முதலில் செயல்படுத்த வேண்டும் என்பதே குர்ஆன், ஹதீஸ் வழி நடக்கும் முஸ்லிம்கள் த.த.ஜ வுக்கு வைக்கும் வேண்டுகோள்!அப்படிச்செய்யாவிட்டால் 'வேதம் ஓதும் சாத்தான்கள்' என்பதற்கு பொருத்தமான உதாரணமாக நீடிப்பிர்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.
அதே போல் ஜாக் பெயரில் பதிவு செய்யப்பட்டு, ஜாக் இயக்கத்தால் கட்டப்பட்ட கடையநல்லுர் மஸ்ஜிதுல் முபாரக் தவ்ஹீத் பள்ளிவாசலையும் திருச்சி சிங்காரத் தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலையும் திரும்ப அந்த இயக்கத்தினிரிடமும் த.த.ஜ காரர்கள் ஒப்படைக்க வேண்டும். முறையற்ற வழியில் அந்தப் பள்ளிவாசலையும் அபகரித்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் எஸ்.பி. பட்டிணத்தில் நீங்கள் உரிமை கேட்க கொஞ்சமாவது நியாயம் இருக்கும்.
மேற்கண்ட பள்ளிவாசலையும் பற்றிய விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள, அவற்றுடன் நேரடியாக தொடர்புள்ளவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.
மேலாப்பாளையும் - சிப்பத்துல்லாஹ் செல் - 9790307894
கடையநல்லுர் - சாகுல் ஹமீது, செல் - 9842186892
திருச்சி சிங்காரத்தோப்பு –முஹம்மது – 9047783649
நோக்கம் என்ன?
பள்ளிவாசல்களை கைப்பற்றுவதற்கும் புதிது புதிதாக ஆரம்பிப்பதற்கும் தவ்ஹீத் நோக்கமா? அல்லது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதா? என்று பார்தால் தங்களின் த.த.ஜ இயக்க ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கமும் பிரிவினை போக்குமே தென்படுகிறது.
அதனால்தான், தவ்ஹீது பள்ளிகள் இருக்கும்போது அவற்றுக்கு அருகிலேயே சில ஊர்களிள் வீம்பாக வாடகைக்கு எடுத்த இடத்தில் பள்ளிவாசல் நடத்துகிறார்கள் இந்த த.த.ஜ வினர்.
இதுபற்றி உறுதிப்படுத்திக் கொள்ள
நாகூர்- காதர். செல்- 9443572374 கோட்டுர்-ஹாக்கிம்,-9445381837
கீழக்கரை – சேக் அலி, செல் : 9994296263
சயீது ஹாஜியாரும் துணைவியாரும்
சர்ச்சையாக்கப்பட்டுள்ள எஸ்.பி. பட்டிணம் பள்ளிவாசல் இடத்தின் உரிமையாளர் ஹாஜியானி திருமதி. சயீது ஹாஜியார் அவர்கள் 11.8.2009 இரவு இமயம் டி.வி. பேட்டியில் எதிர் தரப்பினரை கடுமையாக விமர்சித்து பேசினார்கள். தனது தவறை மறைத்து விட்டு பிறர் மீது கோபத்தை கொட்டினார்கள்.
1994ம் வருடம் அந்தப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் பலநூறு மக்கள் சாட்சியாக பள்ளிவாசலை வக்ஃப் செய்வதாக அறிவித்தும் ஊர் ஜமாத்திடம் ஒப்படைத்ததும் சயீது ஹாஜியார்தான்.
இந்த வருடம் (2009) ஜனவரி மாத்தில், பள்ளியின் பொருளாதாரத்திற்கும் நான் பொறுப்பு அதன் மற்ற காரியத்துக்கு ஊர் ஜமாஅத் பொறுப்பு என்று எழுதி கையொழுத்திட்டுக் கொடுத்ததும் சயீது ஹாஜியார்தான்.
அவர் வக்ஃப் செய்தபோதும், எழுதிக் கொடுத்த போதும் பதினான்கு வருடமாக மௌன சாட்சியாக இருந்து விட்டு இப்போது திடீரென நான் தான் இடத்தின் உரிமையாளர் என் இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன் என்று கிளம்புவது உங்கள் தவறு.
இது ஊரையும் சமுதாயத்தையம் ஏமாற்றுகிற செயல் அனைவரையும் மடையர்களாக்குகிற பாதகச் செயல் உங்களின் இந்தத் தவறுக்கு நிதானத்தோடு பரிகாரம் காணுங்கள்.பின்பு உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள் என்பதே உங்கள் மீது பாசமும் மரியாதையும் வைத்துள்ள எங்களின் வேண்டுகோள்!
உண்மைத் தவ்ஹீத்வாதியின் நோக்கம் பள்ளிவாசலில் நபி வழிக்குமாhற்றமான செயல்கள் நடக்கக்கூடாது என்பது தான். தங்களின் உரிமையைப் பயன்படுத்தி அனாச்சாரங்கள் நடைபெறக் கூடாதென வலியுறுத்தியிருந்தால்இ அது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும். மக்களின் ஒற்றுமையுடன் நபி வழி பள்ளியாக அது செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கும. பள்ளி பூட்டப்பட்டிருக்காது இந்த நல்ல நிலையை ஏற்படுத்த இப்போதும் காலம் கடந்து விடவில்லை .
த.த.ஜவினருக்கு
சில தனிநபர்களின் தவறான வழிகாட்டலுக்கு கட்டுப்பட்டு உங்களின் மறுமை வாழ்கைக்கு நஷ்டத்தை தேடிக் கொள்ள வேண்டாம்
கடந்த 31.7.2009 அன்று எஸ்.பி பட்டிணத்தில் ஏற்பட்ட மோதலுக்குப் பின் வந்த உணர்வுப் பத்திரிக்கையில் வெளியான புரட்டல் செய்தியை படித்த அந்த ஊரைச் சேர்ந்த த.த.ஜ தீவிர தொண்டர்கள் சிலர் மனம் நொந்து இயக்கத்தை விட்டே வெளியேறி விட்டார்கள் என்பதை தெரிந்துகொள்ளங்கள்! இது பற்றியும் இப்பள்ளியின் பதினான்கு வருட சரித்திரமும் அறிய தொடர்பு கொள்ளுங்கள். யாகூப் ஆலிம். செல்: 9442750475
அனைத்து தரப்பினரிடமும் செவிகொடுத்து கேளுங்கள்! சிந்தித்து நிதானத்துடன் செயல்படுங்கள் இல்லாவிட்டால் கீழ்வரும் அல்லாஹ்வின் பழிப்புரைக்கு ஆளாவீர்கள் என்று எச்சரிக்கிறோம் .
அல்லாஹ் கூறுகிறான்
அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினம் (உண்மையை)விளங்காத செவிடர்களும் ஊமைகளுமாவர் (திருக்குர்ஆன் 8:22)
சமுதாயத்தின் நலன் விரும்பி இதனை தெரிவிக்கிறோம்.
அப்துர் ரஹ்மான் மன்பஈ
அஹ்லுஸ்ஸீன்னா இஸ்லாமிய ஆயவு மையம்
தொண்டி.செல் : 98408 28225
Thursday, August 20, 2009
ரமழானின் பயனை பெறுவது எப்படி?" -மெளலவி முபாரக் மதனி(VIDEO)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்-கோபர் இஸ்லாமிய மையமும் தமிழ் தஃவா கமிட்டியம் இணைந்து கடந்த 19-09-2007 அன்று இரவு அல்கோபர் நகரின் மையப்பகுதியில் அமைந்தள்ள அல்கோபர் இஸ்லாமிய மையத்தால் நடத்தப்படும் இஃப்தார் குடிலில் (நோன்பு திறக்கும் குடில்) சிறப்பான முறையில் ஒரு இஸ்லாமிய குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் பிரபல மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்களும், இந்தியாவை சேர்ந்த பிரபல அழைப்பாளர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்களும், இலங்கையை சோந்த பிரபல அழைப்பாளர் மெளலவி மன்சூர் மதனி அவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்புகளின் கீழ் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு தமிழ் தஃவா கமிட்டியின் நிர்வாகி மறியாதைக்குறிய மக்கீன் நலீமி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி தந்தார்கள்.
நிகழச்சிக்குறிய ஏற்பாடகளை அல்கோபர் இஸ்லாமிய மையத்துடன் இணைந்து அல்கோபர் தமிழ் தஃவா கடமட்டியிர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். அதன் தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து இந்நிகழச்சியை சிறப்பாக நடத்தி தந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆன்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து பயன் பெற்றனர்.
நிகழச்சியில் இலங்கையை சேர்ந்த மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்கள் "ரமழானின் பயனை பெறுவது எப்படி?" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ தமிழ் முஸ்லிம் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ் மக்கள் அணைவரும் இந்த வீடியோவை கண்டு இந்த ரமழானை நல்லபடியாக பணன்படுத்தி பயன் பெற வேண்டும். வீடீயோவை காண கீழே சொடுக்கவும்..
Sunday, August 16, 2009
Popular Front -- Freedom Parade
ghg;Gyh; /g;uz;bd; Rje;jpujpd mzptFg;G
Fk;gNfhzk; \`Pj; jpg;G Ry;jhd; efh;
jhuhRuk; ikjhdj;jpy; eilngw;wJ
Nghuhbg; ngw;w Rje;jpuj;ijf; nfhz;lhLk; tpjkhfTk; ek; Kd;Ndhh;fspd; Rje;jpug; Nghuhl;l jpahfj;ij epidT$Uk; tpjkhfTk; ghg;Gyh; /g;uz;l; M/g; ,e;jpah Mf];L 15> 2009 md;W 63tJ Rje;jpujpdj;ij rpwg;ghff; nfhz;lhbaJ. mjd; xU gFjpahf jkpofj;jpy; Fk;gNfhzj;jpYk;> Nfushtpy; ,Lf;fp kw;Wk; fz;Z}hpYk;> fh;ehlfhtpy; ik#hpYk; Rje;jpujpd mzptFg;G kw;Wk; nghJf;$l;lj;ij elj;jpaJ.
Fk;gNfhzj;jpy; eilngw;w Rje;jpujpd mzptFg;G kjpak; rhpahf 3.15f;F Jtq;fpaJ. ghg;Gyh; /g;uz;l; jkpof jiyth; vk;. K`k;kJ myp [pd;dh mzptFg;G khpahij Vw;Wf; nfhz;lhh;. mjidj; njhlh;e;J xw;Wik fPjk; Koq;fpa gpd; ghg;Gyh; /g;uz;bd; nghJr; nrayhsh; V. /gf;UjPd; tuNtw;Giu toq;fpdhh;. njhlh;e;J ghg;Gyh; /g;uz;l; jkpof jiyth; K`k;kJ myp [pd;dh Rje;jpujpd cWjpnkhopia Kd;nkhopa kf;fs; mjid topnkhope;jhh;fs;. ghg;Gyh; /g;uz;l; Njrpa jiyth; ,.vk;. mg;Jh; u`;khd; jiyikAiuahw;wpdhh;.
me;j ciuapy; cz;ikahd Rje;jpuk; vd;gJ midtUk; mr;rj;jpypUe;Jk; grpapypUe;Jk; tpLjiy ngw Ntz;Lk;. midj;J kf;fSf;Fk; rhpahd gpujpepjpj;Jtk; nfhLf;fg;gl Ntz;Lk; vd;w Nehf;fj;jpy; Nrh\pay; nlkhf;ubf; ghh;l;b M/g; ,e;jpah vd;w fl;rpia cUthf;fpAs;Nshk; vd;W $wpdhh;.
gpd;dh; Rje;jpug; Nghuhl;l jpahfpfs; fTutpf;fg;gl;ldh;.
rpwg;G tpUe;jpdh;fshf tUif je;j ney;iy khtl;l cykh rig jiyth; kTytp b.N[.vk;. ryh`{j;jPd; hpah[p jdJ ciuapy; “,q;F vOr;rp kpF mzptFg;G elj;jpa ghg;Gyh; /g;uz;l; M/g; ,e;jpahtpDila cWg;gpdh;fNs Rje;jpug; Nghuhl;lj;jpy; jq;fSila capiu jpahfk; nra;j jpahfpfs; ,d;iwa nghOJ capNuhL ,Ue;jpUe;jhy; mzptFg;gpd; tPuh;fshd cq;fis Muj;jOtp jq;fSila kfpo;r;rpiaj; njhptpj;jpUg;ghh;fs;” vdf; Fwpg;gpl;lhh;.
tpLjiy rpWj;ijfs; fl;rpiar; Nrh;e;j jpU. utpf;Fkhh; vk;.vy;.V. jypj; K];ypk; xw;Wikiag; gw;wpAk; mjd; Kf;fpaj;Jtj;ijAk; Fwpg;gpl;L ciuahw;wpdhh;.
Kd;dhs; vk;.vy;.V. jpU. vk;.[p.Nf. ep[hKj;jPd; ciuahw;Wk; NghJ “,e;j jplypNy jpushfj; jpuz;bUf;Fk; ,t;tPuh;fisf; fhZk; nghOJ vd;djhd; epfo;e;jhYk; cq;fsplj;jpNy xU tp\aj;ij cWjpahf nrhy;y tpUk;GfpNwd;. ,e;j ghg;Gyh; /g;uz;l; tPuh;fSf;F Jg;ghf;fp gapw;rp mspj;J ,e;jpa ,uhZtj;jpy; Nrh;j;J rPdhitAk;> ghfp];jhidAk; ,e;jpa vy;iyapypUe;J tpul;b ,e;jpahitg; ghJfhf;f Ntz;Lk;” vdf; Fwpg;gpl;lhh;.
jkpo;ehL ghg;Gyh; /g;uz;l; Jizj;jiyth; jpU. V.v];. ,];khaPy; fhty; Jiwapd; mjpfhu J\;gpuNahfj;ijAk;> mj;JkPwy;fisAk; fz;bj;Jg; Ngrpdhh;.
kf;fs; [dehaf fl;rpapd; jiyth; jpU. Nf.vk;. \hP/g; ‘K];ypk;fs; vd;why; gphpahzpAk; FUkhTk; rhg;gpLthh;fs; vd;w kf;fspd; vz;zj;ij khw;wp K];ypk;fs; vd;why; ngw;w Rje;jpuj;ijg; ghJfhg;gth;fs; vd;Wk; jdp kdpj Rje;jpuk; ghjpf;fg;gLk; NghJ jl;bf; Nfl;gth;fs; vd;Wk; ghg;Gyh; /g;uz;l; M/g; ,e;jpah ,d;W czh;j;jpAs;sJ’ vd;W ciuahw;wpdhh;.
ghg;Gyh; /g;uz;l; Njrpa nghUshsh; kTytp N\f; K`k;kJ nj`;yhd; ghftp jdJ rpwg;Giuapy; ‘K];ypk;fSf;F Rje;jpujpd nfhz;lhl;lj;jpw;fhd mDkjpia fhty;Jiw kWg;gJ rpWghd;ik kf;fspd; eydpy; mf;fiw nfhz;l khd;GkpF Kjy;thpd; ftdj;jpy;jhd; ,e;j mDkjp kWf;fg;gLfpwjh vd;w Nfs;tp vOfpwJ’ vdf; Fwpg;gpl;lhh;.
epfo;r;rp xUq;fpizg;ghsh; mGgf;fh; rpj;jPf; ed;wpAiu $wpdhh;.
,Wjpahf Njrpa fPjk; Koq;f Rje;jpujpd nfhz;lhl;lk; epiwtile;jJ.
,g;gbf;F>
vk;. K`k;kJ myp [pd;dh
khepy jiyth;
Saturday, August 15, 2009
நாங்களும் இந்துக்களே !! - சுதந்திர தின வாழ்த்துக்கள்
முஸ்லிம்களாகிய நாங்கள், இந்தியத் திருநாட்டில், இந்திய நாட்டவருக்குப் பிறந்த இந்தியராகிய நாங்கள் இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எம் இந்திய திருநாட்டிற்காக அன்றைய தேசவிடுதலைப் போராட்டத்திலிருந்து நேற்றைய கார்க்கில் யுத்தம் வரை எங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிர்தியாகம் செய்துள்ளோம். நாங்கள் இந்தியராக இங்குதான் பிறந்தோம் இங்குதான் வாழ்கிறோம் இங்குதான் செத்ததுமடிவோம் என்ற இலட்சியத்தில் இருக்கிறோம். நமது நாடு என்று வரும்போது இங்குள்ள ஒரு பிடி மண்ணையும் எவருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
முஸ்லிம்களாகிய எங்களைப் பார்த்து நீ இஸ்லாமியனா? அல்லது இந்தியனா? என்று வினவுவது உனக்கு அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா? என்று கேட்பதற்குச் சமம். அடிப்படையில் இப்படி கேட்பதே முரண்பாடானது. ஏனெனில் முஸ்லிமா என்ற கேள்வி ஒருவரின் மதநம்பிக்கையை பற்றி வினவுவது. இந்தியனா என்ற இரண்டாவது கேள்வி அவரின் தேசத்தைக்குறித்து வினவுவது. எனவே 'இந்திய முஸ்லீம்களா' அல்லது 'முஸ்லிம் இந்தியர்களா என்ற கேள்வியே அர்தமற்றது.
இந்தக் கேள்விக்கு ஒருபடி மேலாக பதில் சொல்கிறோம். அது, பூலோக விதியின் படி இந்துக்கள் என்னும் சொல் 'இந்துச் சமவெளியில் வாழும் மக்கள்' என்பதைக் குறிக்கும். படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை கடவுளாகவும், நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் இந்துச் சமவெளியில் வாழுகின்ற காரணத்தால் பூலோக விதியின்படி மட்டும் நாங்களும் இந்துக்களே என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம்.
ஆனாலும் நம்நாட்டு இராணுவ ரகசியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பார்ப்பன கும்பலால் வகுக்கப்பட்ட இந்துமத தத்துவங்கள் பகுத்தறிவிற்கும், உண்மைக்கும், நீதிக்கும், தர்மத்திற்கும் எதிராக
இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.
கடந்த (10-08-2007) தினமணியில் 'முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது' என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது அதற்கு "இஸ்லாமிய இணையப் பேரவை" தக்க பதில் அளித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது அந்த கட்டுரையில் இருந்து.....முழு கட்டுரையையும் வாசிக்க இங்கு சொடுக்கவும்.
THANKS : WWW.IIPONLINE.ORG
Tuesday, August 11, 2009
இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள்! (நன்றி: டெஹல்கா)
இந்நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி காலையில், இம்பால் நகரின் சட்டசபை வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் க்வைரம்பான்ட் கெய்தல் கடைவீதிப்பகுதியில் மணிப்பூர் போலிஸ் கமாண்டோப் படை தீவிரவாதிகள் மீதான தேடுதல் வேட்டையை நடத்தியது. அப்போது அப்பகுதியில் சஞ்சித் இருந்துள்ளார்.

கமாண்டோ படையினர் அவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

கமாண்டோ படையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அவர் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அவரிடம் ஆயுதங்கள் இருந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை.

அவர் முகம் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாக இருந்தது.

திடீரென சஞ்சித்தை வளைத்துப்பிடித்தனர் கமாண்டோ படையினர்.

அவரை அருகிலிருந்த மைமு மருந்துக்கடையினுள் இழுத்துச் சென்றனர்.


சஞ்சித்தை விசாரிக்க முனைந்தபோது அவர் 9எம்எம் கைத்துப்பாக்கியால் சுட முயற்சி செய்ததாகவும், எனவே வேறு வழியின்றி கமாண்டை படையினரின் தற்காப்புக்காக அவர் கொல்லப்பட்டார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் சஞ்சித்தின் குடும்பத்தினரோ, நோயுற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவரது உறவினருக்கு மருந்து வாங்குவதற்காகவே சஞ்சித் அப்பகுதியில் இருந்ததாகவும், அவரிடம் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.

இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர், அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அச்சம் இருப்பதால் இந்த புகைப்படத்தை வெளியிட துணியவில்லை. ஆனால் டெஹல்கா பத்திரிகையின் செய்தியாளர் தெரசா ரஹ்மானுக்கு இந்த சம்பவம் குறித்தும், புகைப்படம் குறித்தும் தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிப்பூர் கமாண்டோ படையினரின் இந்த வீரசாகசம் டெஹல்கா, 8 ஆகஸ்ட் 2009 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி நடப்பதாக கூறும் இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளே நடந்து வருகின்றன. ஆனால் இதுபோன்ற புகைப்பட ஆதாரங்கள்தான் சிக்குவதில்லை.
Wednesday, August 5, 2009
காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி
இவர் ஒரு கவிஞர்
ஒற்றை வரி ஹைக்கூ
கருவெடுத்து
புதுக்கவிதைகளின்
புதுமைச் சேர்த்து
மரபுக்கவிதைகளின்
மரபுமீறாமல்
இவர்தரும் அதிரடி
கவி கேட்போர்
‘சும்மா அதிருதில்ல”
எனச்சொல்வார்…
இவர் ஒரு பேச்சாளர்
வார்த்தைச் சரம் தொடுத்து – அதில்
தன் சிம்மக்குரல் கோர்த்து – கூட்டத்தை
சிறுத்தைபோல் சில கணம் பார்த்து
அவர் கர்ஜி;கும் சத்தத்தில்
கட்டுண்டு கிடக்கும் கூட்டம்
இவர் மேடையில் நடத்துவார்
பேச்சில் ஆட்டம் பாட்டம்
இவர் ஒரு ஆன்மீகவாதி
ஆன்மீகம் என்றுவிட்டால்
யார்மீதும் நாட்டமில்லாமல்
உலகின்மீது நோட்டமில்லாமல்
தன்னைச்சுற்றிக் கூட்டமில்லாமல்
தனித்திருப்பார் சிலர்!
இவர் இலக்கியம் இஸ்லாம்
இரண்டையும் இருகண்களாய் கொண்டவர்
இலக்கியம் என்று வந்துவிட்டால்
கலக்கிடுவார்
இஸ்லாம் என்று வந்துவிட்டால்
கலங்கிடுவார்
மதமென்று மதங்கொள்ளாமல்
மார்க்கமெனும் வாழ்க்கை நெறிகாட்டி
இவர் செய்யும் மார்க்கப்பிரசாரம்;!
மனம்நொந்தோருக்கும் கிடைக்கும்
வாழ்க்கைப் பிரசாதம்!
இவர் ஒரு நடிகர்
இதற்கு முன் வந்தமுகம்
தெரிந்திருந்தாலும்
இந்த முகம் உங்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை
விருச்சங்கள் சிலநேரம்
விதைக்குள்ளே நசுக்கப்படுவதுபோல்
இந்தத் திறன் இவர்தம்
பள்ளி நாட்களுடன்
தள்ளிப் போனது
பச்சையப்பன் கல்லூரியில்
இவர் நடித்த நாடகங்களின் காட்சிகள்
அவர்தம் நடிப்புத்திறனுக்கான மாட்சிகள்!
இவர் ஒரு பழம்பெரும்கவிஞர்
பலம்பெற்ற கவிஞர் - அவ்வப்போது
பழம்பெற்ற கவிஞர்
புலவர் நாராயணனால்
நடத்தப்பட்ட
மகிழ்நன் தமிழ்க்கழகத்தினரால்
நிகழ்த்தப்பட்ட பழங்கள் கவியரங்கி;ல்
இவர் பாடிய ‘மாதுளம்பழம்’ கவிதை
இவர் இலக்கிய வாழ்விற்கு ஆனது விதை!
எத்தனையோ திறமைகள் இவருள்
அடங்கியிருந்தாலும் - அவையில்
அடங்கியிருத்தல் இவர்
தனித்திறன்..
அதற்கேற்றார் போல்
வேலூர் கவியரங்கில்
இவர்பாடிய அவையடக்கக் கவிதை
இவருக்கு சபையடங்கா கைத்தட்டை
பெற்றுத்தந்தது!
இவர்தம் கவித்திறனை விற்றுத்தந்தது1
இவர் ஒரு திறனாய்வாளர்;
மற்றவர் இவர் திறன் ஆய்வு
செய்து கொண்டிருந்த வேளையில்
மு.மேத்தாவின்
கண்ணீர்ப+க்களை இவர்செய்த
திறனாய்வு
இவர் திறன் மேன்படச்
செய்த ஆய்வு
என்றுமே இல்லை இவர்தம்
திறன் ஓய்வு
இவர் ஒரு கவிக்கடல்
இவர் ஒரு கவிக்கடல் - ஆம்
அரபுமொழி என்று விட்டால
இவர் ஒரு அரபிக்கடல்!
இந்தி உருது என வந்துவிட்டால்
இவர் ஒரு இந்து மகா சமுத்திரம்
முத்தமிழை முகர்ந்து விட்டால்
முக்கடல் சங்கமம்
கவி எழுத கங்கணம் கட்டிவிட்டால்
இவர் ஒரு செங்கடல்
இதை அன்றே அறிந்தோ
என்னவோ சென்னையில்
கவிஞர் பொன்னடியான்
நடத்திய கடற்கரை கவியரங்கில்
இந்த கவிக்கடலின் பங்கு ஏராளம்
கவிதைகளோ தாராளம்!
இவருக்கு வெடிகுண்டு
வைத்த அனுபவமும் உண்டு
எவன் எப்படி போனால் என்னவென்று
வெறித்தனமாய் வைக்கப்படும்
வீணர்களின் வெடியல்ல இது
எம்மதமும் சம்மதம் என வேற்றுமையை அகற்ற
வைக்கப்பட்ட கவிதை வெடிகுண்டு இது..
ஆம்.. சென்னை இஸ்லாமியக் கவியரங்கில்
வேற்றுமைக்கு வெடிவைப்போம்
என்ற தலைப்பில் இவர் பாடிய கணங்கள்
சமூக அக்கறை கொண்டோரின்
மறக்க இயலா தினங்கள்!
25 வருடங்கள் இலக்கிய உலகைவிட்டு ஒதுங்கியிருந்தார்! சில காலம் பதுங்கியிருந்தார்! புலி பதுங்கல் பாய்வதற்கே! பாயும் காலம் வந்தது.. காவிரிமைந்தனின் பழக்கம் தந்தது.. கிரசண்ட் டி.வி.யின் முதல் சந்திப்பு அந்தப் பிறை தொலைக்காட்சியின் சந்திப்பிற்குப்பிறகு அவர்தம் இலக்கிய ஆர்வ பிறை முழுநிலவாக வளர ஆரம்பித்தது! நிலாவண்ணனாக ஜொலி ஜொலித்தது!
அப்படி புதைந்த சந்திரனை
தூசுதட்டி தூக்கிய நிறுத்திய பெருமை
நம் காவிரிமைந்தனை; சாரும்..
அவரை அப்துல் ரவ+ப் சார்பாகவும் சிலநொடிகள் கரகோசத்தினால்
சுரம் சேருங்கள்..
இங்கு காவிரிமைந்தனைப் பற்றி ஓரிருவரிகள் கூறியாக வேண்டும் - சில பேர் கவிதைகளை உருவாக்குகிறார்கள். வெகுசிலர் அந்தக் கவிஞர்களை உருவாக்குகிறார்கள். அந்த வெகுசிலரில் ஒருவர் நம் காவிரிமைந்தன். ஆவர் முழுநேர கவிஞர் ஆனாலும் சிலநேரம் அவர் ஒருதொல் பொருள் ஆராய்ச்சியாளர்! அவர் ஒரு அகழ்வாரர்ய்ச்சியாளர்! அதிகம் புகழ்வதாய் நினைத்துவிட வேண்டாம்! கவிதைக்கு பொய்யழகு என்றாலும் என் கவிதையில் நான் அழகு சேர்க்க முயற்சிப்பதில்லை. வானலை வளர்தமிழின் பெரும்பாலோனாரில் யாரிடம் கேட்டாலும் என்னை, எனது திறமையைக் கண்டுபிடித்தவர் காவிரிமைந்தன் .. எனது திறன்களை என்னுள் தோண்டியெடுத்தவர் காவிரிமைந்தன் என்பார்கள்! மொத்தத்தில் இவர் வானலை வளர்தமிழின் ஆராய்ச்சியாளர்!
அதன்பின் ரவ+ஃபின் வளர்ச்சிக்கு அவர்தம் கவிதை எழுத்திற்கு அவர் எண்ண ஓட்டத்திற்கு எந்த எழுத்தாணியும் ஈடுகொடுக்கவில்ல என்பது வேறு விஷயம்!
அதன்பின் வானலை வளர்தமிழில் அவர் பாடிய கவி வரிகள்! தேனலை நினைவுகளுடன் கூடிய கவிச்சரங்கள்!
ரவ+ஃப் அவர்கள் கவிபாடும் வானலை வளர்தமிழில் நாமும் பாடுவதே பெருமை என்போர் இங்கே ஏராளம்!
இவரின் மறுபக்கத்தை அறிய முயன்றால் நமக்குள் ஒரு பயம் வந்து விடுகிறது!
இவரா.. இவருடனா நாம் சக நண்பராக இத்தனை நாள் பழகிவந்தோம் .. ஆச்சரியத்தில் மூழ்கிப்போகிறேன்..
திருக்குர் ஆன் .. இஸ்லாமியர்களின் புனித நூல்..
அதன் தமிழ் மொழி பெயர்ப்பில் இவரின் பங்கு ஏராளம்!
மொழி பெயர்ப்புக் குழுவில் இவரும் ஒருவர்.. அதன் ஒருங்கிணப்பாளர்
புகாரி – ஹதீஸின் 6 பாகங்கள் மொழிபெயர்ப்பு
மொழி பெயர்ப்புக் குழுவில் இவரும் ஒருவர்.. அதன் ஒருங்கிணப்பாளர் -
நபி வரலாறு – பெரியவர்கள், சிறியவர்கள் இருவருக்குமாக தனித்தனியாக..
இப்படி இவரின் பின்னணியில்
பல முன்னணிப் பதவிகள் உண்டு..
இன்று வரை இவர் எழுதப்படாத கவிதை
விடைகாண இயலா வினா..
இவர் இங்கு தொட்டுச்சென்ற இலக்கியப் பயணத்தை
நாட்டில் சென்று தொடர்ந்து இன்னும் பல வெற்றிகளைப் பெற
எல்லாம் வல்லோனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்!
RAJAKHAN ARCHITECT
dateTue, Aug 4, 2009 at 11:42 AM
ABDUL RAVOOF - KEEZHAI RAZA WRITE UP (PRESENTED ON THE STAGE)
நன்றி : முதுவை ஹிதாயத்